Advertisment

Raja Rani 2 Serial: சந்தியா மேல கடுகளவுகூட நம்பிக்கை இல்லை… இன்னும் மாறாத மாமியார் சிவகாமி!

Raja Rani 2 Serial: சிவகாமி சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடையும் சுந்தரம் என்ன சொல்ற சிவகாமி என்று கேட்கிறார். அதற்கு, சிவகாமி, “ஆமாங்க, எனக்கு அவள் மேல கடுகளவுகூட நம்பிக்கை இல்லை.” என்று கூறுகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
raja rani 2 serial, raja rani 2 serial today episode story, raja rani 2, Sivagami still did not belive Sandhya, vijay tv, விஜய் டிவி, ராஜா ராணி 2 சீர்யல், சந்தியாவை இன்னும் நம்பாத சிவகாமி, சரவணன், அர்ச்சனா, செந்தில், saravanan, sandhya, archana, sendhil, raja rani 2 serial story, raja rani 2 serial today episode, raja rani 2 serial update new

Raja Rani 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் விறுவிறுப்பான திருப்பங்களுடன் பரபரப்பான கட்டங்களை அடைந்து வருகிறது. ராஜா ராணி 2 சீரியலின் இன்றைய எபிசோடை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்.

Advertisment

ராஜா ராணி 2 சிரியலில் இன்றைய எபிசோடில், மாமியார் சிவகாமி வீட்டில் ஹாலில் அமர்ந்துகொண்டிருக்கிறார். அப்போது அங்கே அவரும் சிவகாமியின் கணவர் சுந்தரம், நான் ஒரு விஷயம் கேட்கிறேன், கோபப்படாமல் பதில் சொல்ல வேண்டும் என்று பொடி வைத்து கேட்கிறார். அதற்கு சிவகாமி, நீங்கள் கோபப்படற மாதிரி கேட்கப்போறீங்கனு நினைக்கிறேன். சரி கேளுங்க சொல்ல முயற்சி பண்றேன் என்று கூறுகிறார். அதற்கு சுந்தரம், நீ உண்மையிலேயே சந்தியாவை மன்னித்து, மருமகளாக ஏற்றுக்கொண்டாயா என்று கேட்கிறார். அதற்கு சிவகாமி, நான் ஏங்க அவளை மன்னிக்கனும், அவள் மீது நம்பிக்கை இருந்தால் தானே மன்னிக்கமுடியும் என்று கூறுகிறார்.

அந்த நேரம் பார்த்து, அங்கே வருகிற சந்தியா மாமியார் சிவகாமியும் மாமனார் சுந்தரமும் அவளைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என்று அறிந்து அங்கே சுவரோரம் மறைந்து நின்று அவர்கள் பேசுவதைக் கேட்கிறாள். மாமியார் சிவகாமி சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறாள்.

சிவகாமி சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடையும் சுந்தரம் என்ன சொல்ற சிவகாமி என்று கேட்கிறார். அதற்கு, சிவகாமி, “ஆமாங்க, எனக்கு அவள் மேல கடுகளவுகூட நம்பிக்கை இல்லை.” என்று கூறுகிறார்.

அதற்கு சுந்தரம், “அவள் தப்பு பண்ணலைனு ஆதாரத்தோட நிரூபிச்சிட்டா, இதுக்கு மேல உனக்கு என்ன வேணும், நியாயமா பார்த்தால் தப்பே பண்ணாதவ மேல சந்தேகப்பட்டோமேனு நீதான் குற்றவுணர்ச்சி அடையனும். இதற்காக சந்தியாவைப் போட்டு படாத பாடு படுத்தினயே ஞாபகம் இருக்கா உனக்கு. உன்னொட வறட்டு கௌரவம் நீ இறங்கி வர ஒத்துகாது, மன்னிப்பு கேட்கமாட்டனு தெரியும். அனால் இப்பவும் சந்தியாவை நம்பமாட்டனு சொன்னா சரியா” என்று கேட்கிறார்.

அதற்கு சிவகாமி, “என்ன பெரிசா நிரூபிச்சிட்டா, அவன் ஒரு வீடியோவையும் அவள் ஒரு ரசீதையும் காட்டிட்டா சரியாகிடுமா?” என்று கேட்கிறார். அதற்கு சுந்தரம் சுப்ரிம் கோர்ட் விசாரணையே இப்படிதாம்மா நடக்குது என்று கூறுகிறார். அதற்கு சிவகாமி, அதெல்லாம் இந்த சிவகாமியோட கோர்ட்ல செல்லுபடி ஆகாது. நான் நம்பனும். என் மனசாட்சி இவள் தப்பு பண்ணியிருக்க மாட்டானு நினைக்கனும்.” என்று கூறுகிறார். அதர்கு சுந்தரம், உன் மனசாட்சி நினைக்கனும்னு நீதான் நினைகனும் அதற்கு சந்தியா என்ன பண்ண முடியும் சிவகாமி என்று கேட்கிறார்.

அதற்கு, சிவகாமி, “யாரும் எதுவும் பண்ண வேண்டாங்க… ஒருவர் நடந்துக்கிறதை வச்சு சுலபாமா கண்டுபிடிச்சிடலாம். நான் எந்த ஆதாரத்தையும் நம்ப தயாரா இல்லை.” என்று கூறுகிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடையும் சுந்தரம், “இதெல்லாம் ரொம்ப தப்பு சிவகாமி, கொறைஞ்சது உனக்காச்சுமாவது நீ நேர்மையா இருகனும். நீயே உன்னை ஏமாத்திக்காத” என்று கூறுகிறார். அதற்கு சிவகாமி, “நான் என் மனசை நம்புறேங்க… என் மனசு அவளை நம்பல, அவள் பொய் சொல்லியிருக்கா, இன்னும் சொல்லுவா, என்னை போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் அனுப்பினது அவதான… கேட்டாள் இல்லைனு பொய் சொல்லிட்டா” என்று சொல்கிறார்.

இதைக் கேட்டு சுந்தரம், “நீ அந்த பொண்ணு மேல அபாண்டாமா பழி போடுற சிவகாமி” என்று கூறுகிறார். அதற்கு சிவகாமி, “உங்களுக்கு எல்லாம் அப்படிதாங்க தோணும். ஏன்னா நீங்க எல்லோரும் ஆதாரத்தை நம்புறவங்க.. அவள் பொய் சொல்லியிருக்கா, ஏமாத்தியிருக்கானு சொல்றது எங்கிட்ட எந்த ஆதாரமும் இல்லைங்க.” என்று கூறுகிறார். இதற்கு சுந்தரம், “அப்போ நீ சரவணனுடைய சந்தோஷத்துகாகனு நீ சொன்னது” என்று கேட்கிறார். அதற்கு சிவகாமி, “அதில எந்தப் பொய்யும் இல்லைங்க… மொதல் காரணமே அவந்தான். சந்தியாவை வீட்டை விட்டு நான் அனுப்பினனா அவன் மனசு ரொம்ப வருத்தப்படுவான். ஏன் அனுப்பினங்கனு நிச்சயமா அவன் எங்கிட்ட கேட்பான். அப்புறம் அம்மா புள்ளைக்கு நடுவுல பிரச்னைதான் வரும். அதனால தாங்க நான் அவள் இருந்துட்டு போகட்டும்னு விட்டுட்டேன்.” என்று கூறுகிறார். இதைக் கேட்டு சுந்தரம் அதிர்ச்சி அடைகிறார். மறைவாக நின்று கேட்கும் சந்தியா அழுகிறாள்.

சுந்தரம், “விட்டிருக்கேன்னா என்ன அர்த்தம் சிவகாமி” என்று கேட்கிறார். அதற்கு சிவகாமி, “கொஞ்சநாள் போகட்டும். அவள் யாருனு நிரூபிக்க எனக்கும் ஒரு ஆதாரம் கிடைக்காமலா போகும். அப்ப நீங்க எல்லோரும் எதை நம்பறீங்க, என்ன பண்றீங்கனு பார்க்கிறேன்” என்று கூறுகிறார்.

அடுத்த காட்சியில், துணிக்கடையில் செந்திலும் அர்ச்சனாவும் இருக்கிறார்கள். அப்போது, அர்ச்சனா, “ஏங்க அந்த காஞ்சிபுரம் கண்காட்சிக்கு போயிருந்தால் கம்மி விலையில நிறைய ரேட் வைச்சு நல்ல விலைக்கு வித்துருக்கலாம் இல்லை” என்று கேட்கிறாள். அதற்கு செந்தில், காஞ்சிபுரத்துக்கு போய் ரெஸ்டாரண்ட்ல பணம் தண்டமானதுதான் மிச்சம்…. போன மாசம் உன் தங்கச்சிய பொண்ணு பார்க்க வராங்கனு செலவை இழுதுவிட்ட, அடுத்த மாசமாச்சும் ஏதாவது மிச்சம் பிடிக்க பார்க்கனும் அர்ச்சனா” என்று கூறுகிறான்.

அப்போது, கடைக்கு வரும் ஒரு பெண், தெரியாமல் வாங்கிச் சென்ற கிழிந்துபோன சேலையைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு வேற சேலையை மாற்றி வாங்கிச் செல்கிறார். அப்போது, அங்கே வரும் பார்வதி, தன்னை காதலிக்கிறயா இல்லையா என்று கேட்டு தொந்தரவு செய்யும் பாஸ்கரை ஒழுங்கா அமைதியா இருக்கச் சொல்லுங்க என்று கூறிவிட்டு, கடையில் இருந்த ஒரு காஸ்ட்லியான சேலையை எடுத்துச் செல்கிறாள். செந்திலும் அர்ச்சனாவும் என்ன செய்வது என்று தெரியாமல் பாஸ்கரை சரி பண்ண வேண்டும் என்று கூறுகிறார்கள்.

அடுத்த காட்சியில், சந்தியா, வீட்டில் பெட்ரூமில், மாமியார் சிவகாமி தன்னை நம்பவில்லை என்று சொன்னதை நினைத்து தனியாக அழுதுகொண்டிருக்கிறார்கள். தான் வெற்றி பெற்றதாக இறந்துவிட்ட பெற்றோர்களிடம் கூறியதை இல்லை என்று கூறி குமுறி அழுகிறாள். அப்போது, எல்லா பிரச்னையும் ஓய்ந்துவிட்டதாக நினைத்து, சரவணன் கடையில் இருந்து ஸ்பெஷல் ஸ்வீட், பரிசாக வாங்கிய புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு வருகிறான்.

சரவணன், ஸ்வீட் எடுத்து சந்தியாவுக்கு தரும்போது, தான் சந்தோஷமாக இல்லை. வீட்டில் இன்னும் என்னை யாருமே நம்பவில்லை. என்னை எல்லோரும் வீட்டில் திருடி என்று கூறுகிறார்கள். கொடவுன் எரிச்சது அர்சனா, ஆனால், என் மேல பழியா போட்டுவிட்டாள். ஆனால், நான் அதை அத்தைகிட்ட போட்டு கொடுக்கல. ஆதி, எங்கிட்ட பணத்தை வாங்கி லேப்டாம் வாங்கிட்டு கடைசியா என்மேலயே பழியே போட்டுவிட்டான். பார்வதி பல தப்பு பண்ணிட்டு எல்லாத்தையும் என் மேல சொல்லியிருக்கா. ஆனால், நான் எதுவுமே சொல்லல. ஏன்னா நான், நம்ம குடும்பம் என்று நினைத்தேன். யார் வேணும்னாலும் என்னை காயப்படுத்திட்டு போயிடலாம்னு நினைக்கிறாங்க. ஆனால், இன்னைக்கு என் மேல யாருக்கும் நம்பிக்கை இல்லைனு தெரியுது” என்று கூறுகிறாள்.

இதைக் கேட்டு சரவணன், ஏங்க என்ன சொல்றீங்க எனக்கு ஒன்னுமே புரியல. என்ன நடந்துச்சு என்று கேட்கிறான். ஆனால், சந்தியா, மாமியார் சிவகாமி சொன்னதை சொல்லாமல் மறைமுகமாக இங்கே என்னை யாரும் நம்பவில்லை. இதுக்கு மேல என் சுயமரியாதையை நான் இழக்கத் தயாராக இல்லை. நீங்களும் என் மேல பழி வரும்போது நிரூபிக்க கஷ்டப்பட வேண்டாம். என்று கூறுகிறாள்.

சரவணன், “எல்லோரும் நம்பலனா நான் கூடவா நம்பல, உங்களை நான் நம்புறேங்க, உங்க கூட நிற்பேங்க என்ன நடந்தது என்று சொல்லுங்க என்று கேட்கிறான். ஆனால், சந்தியா, இதற்கு மேல என்னை கேட்காதீங்க, எனக்கு அந்த நம்பிக்கை போயிடுச்ச்சு… என்னை கொஞ்ச நேரம் தனியா விடுங்க பிளீஸ்…” என்று கையெடுத்து கும்பிட்டு கேட்கிறாள். இதைக் கேட்டு மிகவும் வருத்தப்படும் சரவணன், தான் வாங்கி வந்த ஸ்வீட்டையும் பரிசளிக்க வாங்கி வந்த புத்தகத்தையும் வைத்துவிட்டு என்ன செய்வது என்று புரியாமல் வருத்தத்தில் வாசலை நோக்கி நகர்கிறான். சந்தியா சிவகாமி சொன்னதை நினைத்து குமுறிக் குமுறி அழுகிறாள். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Vijay Tv Tamil Serial Update Raja Rani Serial Actress Raja Rani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment