Advertisment

Vijay TV Serial: பார்வதியைப் பார்க்க இரவில் சுவர் ஏறி குதித்து வந்த வில்லன் விக்கி; கூட்டு வைத்த அர்ச்சனா!

பார்வதியைப் பார்க்க வீட்டுக்கு சுவர் ஏறி குதித்துவந்த விக்கிடம் போன் நம்பரை வாங்கிகொண்டு, அர்ச்சனா, விக்கியிடம் நான் சொல்வதை கவனமா கேளு என்று ஒரு மாஸ்டர் பிளானை சொல்லி, சொதப்பக்கூடாது, என சொல்லி அனுப்புகிறாள்.

author-image
WebDesk
New Update
Raja Rani 2, Raja Rani 2 Serial, Vijay Tv, Parvathi, Vaishnavi Sundar, Sandhya, Alya Manasa, sidhu, saravanan, ராஜா ராணி 2 சீரியல், ராஜா ராணி 2, விஜய் டிவி, விக்கி, பார்வதி, வைஷ்ணவி சுந்தர், ஆல்யா மானசா, அர்ச்சனா, archana plans with vicky, raja rani 2 today episode, archana, tamil serial news

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில், பார்வதியின் முன்னாள் பாய் ஃபிரெண்ட் விக்கி அவளைப் பார்ப்பதற்காக இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் சுவர் ஏறி குதித்து வந்து பார்க்கிறான். பார்வதி அவனை விரட்டி அடிக்கிறாள். ஆனால், இதைப் பார்த்த அர்ச்சனா விக்கியுடன் கூட்டு வைக்கிறாள். பெரிய ட்விஸ்ட்டாக இன்றைய எபிசோடு அமைந்துள்ளது.

Advertisment

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல், ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இந்த சீரியலில் ஹீரோயின் சந்தியா கதாபாத்திரத்தில் ஆல்யா மானசா நடிக்கிறார். ஹிரோ சரவணன் கதாபாத்திரத்தில் நடிகர் சித்து நடிக்கிறார். இவர்களுடன், வைஷ்ணவி சுந்தர், பிரவீனா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். முதலில் சுமாராக சென்றுகொண்டிருந்த ராஜா ராணி 2 சீரியல், இப்போது முதல் பாகத்தைப் போல சூடு பிடித்து விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

ராஜா ராணி 2 சீரியல் இன்ற்இய எபிசோடில், மாமியார் சிவகாமியும் மருமகளும் ஹாலில் உட்கார்ந்து நிச்சயதார்த்தத்துக்கான பொருட்களின் லிஸ்ட் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கே வரும் செந்திலிடம் சிவகாமி கடைக்கு போகலையா என்று கேட்கிறார். அதற்கு செந்தில், அர்ச்சனாவுக்கு உடம்பு முடியவில்லை, அவள் என்ன பண்றானு பார்த்துட்டு ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போகணும்மா என்று பொய் சொல்கிறான். ஆனால் சிவகாமி, அவள் நல்லாதான இருக்கா, இப்பதானே பார்த்தேன். அவள் வராள் பாரு என்று கூறுகிறாள். அங்கே வரும் அர்ச்சனாவிடம், என்ன அர்ச்சனா உனக்கு ஒடம்புகு முடியலனு ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போக வந்திருக்கான் என்று கேட்கிறார்.

அதற்கு, அர்ச்சனா, எனக்கு ஒன்னும் இல்லை அத்தை. சரியாகிடுச்சு என்று கூறுகிறாள். இதைக் கேட்டு சிவகாமி, சந்தியாவைக் குத்திக்காட்டும் விதமாக, இதை அங்க சொல்லு, உன் புருஷன் உங்கிட்ட பேசுறான் இல்லை. இல்லை நீயும் ஏதாவது சண்டை போட்டுக்கிறயா என்று கேட்கிறார். அர்ச்சனா சண்டையா என்று புரியாமல் முழிக்கிறாள்.

தொடர்ந்து பேசும் சிவகாமி, “இந்த வீட்டில் யாரு எப்ப மூஞ்சிய தூக்கி வச்சிக்கிறாங்கனே தெரியல, என்ன ஏதுனு கேட்கப் போனால், உன் மாமா எதுவும் கேட்க வேண்டாம்னு சொல்லி என் வாயை மூட வச்சிடறார். நான் என்ன பண்றது” என்று கேட்கிறார். அப்போது, வேலைக்காரி மயில், கோதுமை மாவு அரைக்க கொடுத்திருந்ததை வாங்கி வர செல்வதாக சொல்கிறாள். அதற்கு சிவகாமி, நிச்சயதார்த்தத்துக்கு தேவையான மளிகைப் பொருட்கள் எழுதியிருக்கிறது. நீ இதை நாம வழக்கமா மளிகைப் பொருள் வாங்குகிற அண்ணாச்சி கடையில் கொடுத்துவிடு என்று கூறுகிறார். அப்போது குறுக்கிடும் பார்வதி தனக்கும் சில பொருட்கள் வாங்க வேண்டும் அதையும் எழுதலாம் என்று கூறுகிறாள். ஆனால், சிவகாமி அதை தனியாக எழுதி கொடு. நீயும் சந்தியாவும் போய் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார். பிறகு, மயிலிடம் அந்த பொருட்களை சரவணன் வரும்போது வாங்கி வருவான் என்று கூறுகிறாள்.

அப்போது, அங்கே வரும் சுந்தரம், “சரவணன் இன்னும் 2-3 நாள் கழித்துதான் வருவான்” என்று கூற அதைக்கேட்டு எல்லோரும் ஷாக் ஆகிறார்கள். சிவகாமி என்ன காரணம் என்று கேட்க, “அவன் ஊருக்கு போயிருக்கிறான். வர்றதுக்கு 2-3 நாள் ஆகும்” என்று கூறுகிறார். இதைக்கேட்டு சந்தியா, ஊருக்கா, எப்ப போனாரு, 2-3 நாள் ஆகும்னா, டிரஸ்கூட எதுவும் எடுத்துகலயே மாமா என்று கேட்கிறாள். சிவகாமியும், அவன் இப்படி போகமாட்டேனா, போன்கூட பண்ணலயே, ஏதாவது பிரச்னையா என்று கேட்கிறார். அதற்கு சுந்தரம், ஆமாம் சிவகாமி பிரச்னைதான், சந்தியா சிவகாமி நீங்க டென்ஷன் ஆகாதீங்க, ஊர்ல இருந்து அம்மா போன் பண்ணி இருந்தாங்க, ஊர்ல சொந்தக்காரங்க கல்யாணத்துல கடைசி நேரத்துல சமையல்காரங்க வரலையாம். அதனால், சரவணனை வரச் சொல்லியிருக்காங்க. அதனாலதான் கடையில் இருந்து அப்படியே கிளம்பி போயிட்டான். இஸ்திரி போட கொடுத்துவச்ச டிரஸ் எல்லாம் நான் தான் வாங்கி கொடுத்து அவனை அனுப்பி வச்சேன் என்று கூறுகிறார்.

அதற்கு, சிவகாமி, இருக்கட்டும் அதற்காக அவன் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்புவானா என்று கேட்கிறார். இதைக் கேட்டு சுந்தரம், அவன் இங்க வந்து சொல்லிவிட்டு கிளம்புவதற்குள் பாதி தூரம் போயிருப்பான். அதனாலதான், அவன் அப்படியே கிளம்பிவிட்டான் என்று கூறுகிறார்.

சந்தியா, அவரு ஒரு போன்கூட பண்ணலயே மாமா என்று கேட்கிறாள். அதற்கு, சுந்தரம், பண்ணுவாம்மா, நீ கவலை படாதே, உங்க ரெண்டு பேருகிட்ட சொல்ல சொல்லிட்டுதான போனான் என்று கூறுகிறார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த, செந்தில், ஏம்பா நீங்க வேற 2-3 நாள்னு சொல்றீங்க, பாரவதி நிச்சயதார்த்தம் வேற இருக்கு என்று கேட்கிறான். எல்லோரும் கவலைப்படுகிறார்கள்.

ஆனால், அர்ச்சனா, “ஆஹா, வரவர இவருக்கு குடும்ப பாசம் ரொம்ப பொங்கி வழியுது, இப்ப யாராச்சும் கேட்டாங்களா, நிச்சயதார்த்தமா, அது நடக்கலனா இப்ப என்ன” என்று மனதுக்குள் சொல்லிக்கொள்கிறாள்.

செந்தில் சொன்னதைக் கேட்டு கவலைப்படும் சிவகாமி, எல்லா ஏற்பாடும் பண்ண பிறகு, இப்படி திடீர்னு சரவணன் ஊருக்கு போயிருக்கிறதா சொன்ன எப்படி என்று கேட்கிறார். அதற்கு சுந்தரம், மாப்பிள்ளை வீட்டில் பேசிக்கலாம் சிவகாமி, சரவணன் ஊர்ல இருந்து வந்த பிறகு நிச்சயதார்த்தத்தை வச்சிக்கலாம் என்று சொல்கிறார்.

இதைக்கேட்டு சிவகாமி, மாப்பிள்ளை வீட்டுக்காரங்ககிட்ட இதை சொன்னா, என்ன சொல்வாங்கனே தெரியலயே என்று கூறுகிறார். செந்தில், சரி கடையை யாருப்பா பார்த்துக்கறது என்று கேட்கிறான். அதற்கு சுந்தரம், நான் பார்த்துக்கிறேன் என்று கூறுகிறார். இதையடுத்து, சிவகாமி மயில் இடம் கொடுத்த லிஸ்ட்டை திரும்ப வாங்கிக்கொள்கிறார். செந்தில் கடைக்கு புறப்பட்டு செல்கிறான். ஹாலில் இருந்து எல்லோரும் செல்கிறார்கள்.

எல்லோரும் போன பிறகு, சிவகாமி, தனது கணவர் சுந்தரத்திடம், சரவணன் ஒரு போன்கூட பண்ணாமா கிளம்பி போறதா, சந்தியா முகம் எப்படி வாடி போச்சு பாருங்க பாவம், என்று கூறுகிறார்.

இதைக் கேட்ட, சுந்தரம் அம்மா ஊர்ல இருந்து போன் பண்ண அவசரம் அப்படி… சிவகாமி நீகூட சந்தியா மேல பாவப்படுறதைப் பார்க்க ஆனந்தமா இருக்குது. நீ சந்தியாகிட்ட சரவணனுக்கு போன் பண்ணி பேசச் சொல்லு, நீ சொன்னா அவள் சந்தோஷப்படுவாள் என்று கூறுகிறார். சிவகாமி அங்கே இருந்து சந்தியாவை பார்க்க செல்கிறார்.

தனியாக நின்றுகொண்டிருக்கும் சுந்தரம், “சிவகாமிகூட சந்தியாகிட்ட பாசமா பேச ஆரம்பிச்சிட்டா, ஆனால், இந்த சரவணன் என்னடான்னா, சந்தியாவை வீட்டை விட்டு அனுப்புறேன்னு சொல்லிகிட்டிருக்கான், இதைவேற யார்கிட்டயும் சொல்லக்கூடாதுனு சத்தியம் வாங்கி இருக்கான். பார்ப்போம் ஊர்ல இருந்து திரும்பி வரும்போதாவது மனசு மாறி நல்ல விதமா வருவான்னு நம்புகிறேன்” என்று மனதுக்குள் சொல்லிக்கொள்கிறார்.

கிணற்றடியில், சந்தியா, ஏன் இப்படி சரவணன் சொல்லாமல் கிளம்பி போனாரு என்று யோசித்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறாள். அப்போது அங்கே வரும் சிவகாமி, சந்தியாவிடம் சரவணனுக்கு போன் பண்ண சொல்கிறார். சந்தியா, “போன் பண்ணா போக மாட்டேங்குது” என்று கூறுகிறாள். அதற்கு சிவகாமி “ஊர்ல இருந்தா சிக்னல் கிடைக்காது. மறுபடியும் போன் பண்ணு” என்று கூறுகிறார். சந்தியா போன் செய்ததும் ரிங் ஆகி சரவணன், போன் எடுத்து பேசுகிறான். ஏன் ஒரு போன்கூட பண்ணாம ஊருக்கு போயிட்டிங்க, மாமா சொன்னார் என்று கேட்கிறாள். அதற்கு சரவணன், ஆமாங்க, ஊர்ல இருந்து பாட்டி அவசரமா போன் பண்ணாங்க அதான் என்று கூறுகிறான். சிவகாமி ஊருக்கு போய்விட்டான என்று கேட்கச் சொல்ல, சந்தியா ஊருக்கு போய்விட்டீர்களா என்று கேட்கிறாள். அதற்கு சரவணன், இப்போது ஊர்லதான் இருக்கேன் என்று கூறுகிறான்.

இதையடுத்து சந்தியா, போனை சிவகாமியிடம் கொடுக்கிறாள். சரவணன், அவசரத்துல கிளம்பி வந்துட்டேன். பஸ்ல கூட்டமா இருந்தது, பேச முடியல என்று சொல்கிறான். சரி பரவாயில்லப்பா என்று சொல்லிவிட்டு போனை மீண்டும் சந்தியாவிடம் கொடுக்கிறாள். சந்தியா, நீங்க டென்ஷன் ஆக வேண்டாம். வேலையை முடிச்சுட்டு ஃபிரியா இருந்தால், போன் பண்ணுங்க என்று கூறிவிட்டு போனை வைக்கிறாள். சிவகாமி, நிச்சயதார்த்தத்துக்கு எழுதிய லிஸ்ட்டை சந்தியாவிடம் கொடுத்து நீயே பத்திரமா வச்சுக்கோ என்று சொல்லிவிட்டு போகிறார்.

இரவில் சந்தியா, தனது போனில் சரவணன் போட்டோவை பார்த்து தனியாக பேசிக்கொண்டிருக்கிறாள். நீங்க இல்லாமல் தனியா இருக்க முடியல சீக்கிரம் வாங்க என்று மனதுக்குள் சொல்லிக்கொள்கிறாள்.

நள்ளிரவில், பார்வதியின் முன்னாள் பாய் ஃபிரெண்ட் விக்கி, தனது நண்பனுடன் பைக்கில் வருகிறான். இந்த பார்வதியை, அவளுடைய அண்ணன், அண்ணி யாரையும் நான் சும்மா விடமாட்டேன், அவங்களை என்ன பண்றேன் பாரு என்று நண்பனிடம் கூறுகிறான்.

சில நாட்களுக்கு முன்புதான், விக்கி பார்வதியை தனியாக ஒரு வீட்டுகு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ய முயன்றபோது, பின்தொடர்ந்து வந்த வனிதா, அவனை அடித்து பார்வதியைக் காப்பாற்றினாள். அதற்கு முன்பு சரவணனுக்கு தகவல் சொன்னதால், சரவணனும் வந்து விக்கியை அடித்து துவைத்து எடுத்தான்.

விக்கி சொன்னதைக் கேட்டு அவனுடைய நண்பன், நல்லா யோசிசுக்கடா, என்னால் பார்க்க மட்டும்தான் முடியும், இந்த அடிக்கறது, அடி வாங்கறது எனக்கு சரிபட்டு வராது. அதனால், யோசிச்சு செயல்ல இறங்கு, ஒரு அண்ணன் உன்னை செவுள்ளயே அடிச்சிருக்கான். அவள் அண்ணி உன்னை ஃபாலோ பண்ணி வந்து அடிஅடிணு அடிச்சிருக்காங்க, ஒரு அண்ணனா, பரவாயில்லை. காதலுக்கு மரியாதை மாதிரி 3 அண்ணனுங்க, குடும்பத்தோட கோயில் கொட வச்சிருவானுங்க பார்த்துக்கோ என்று எச்சரிக்கிறான். ஆனாலும், நான் பார்த்துக்கிறேன் என்று விக்கி சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று பார்வதி தூங்குகிற அறையின் ஜன்னலைத் திறந்து அவளைக் கூப்பிடுகிறான். பார்வதி, விக்கியைப் பார்த்து ஷாக் ஆகிறாள். அவனை போய்விடு என்று கெஞ்சி கேட்கிறாள். ஆனால், விக்கி உன்னுடன் தனியாக பேச வேண்டும் என்று கெஞ்சி கேட்கிறான். பிறகு, பார்வதி, விக்கியைப் பார்க்க எழுந்து வெளியே வரும்போது அர்ச்சனா பார்த்துவிடுகிறாள். என்ன பார்வதி இந்த நேரத்துல என்று அர்ச்சனா விசாரிக்கிறாள். அதற்கு, பார்வதி தண்ணி தாகமா இருந்தது, மொபைல் சார்ஜர் எடுக்க வந்தேன் என்று சொல்லி சமாளிக்கிறாள். ஆனால், இதை நம்பாத அர்ச்சனா, எதையோ மறைக்கிறாள் பார்ப்போம் என்று அங்கிருந்து கிளம்புகிறாள்.

வெளியே வந்த பார்வதியிடம் விக்கி, என்னை மன்னிச்சுடு, தெரியாமல் பண்ணிட்டேன். நான் அன்றைக்கு பண்ணது பெரிய தப்பு என்னை நினைச்சா எனக்கா அவமானமா இருக்குது. என்னை விட்டு போயிடாத என்று கெஞ்சுகிறான். ஆனால், பார்வதி அவன் சொல்வதையெல்லாம் நம்பத் தயாராக இல்லை, உன்னை எவ்வளவு மனசார நம்பினேன். நீ என்னை ஏமாற்றிட்டா, நீ நடந்துகிட்டதை எல்லாம்கூட விடு, ஆனால், நீ எங்க அண்ணன்கிட்ட என்னைப் பத்தி தப்பா சொன்னா. உனக்கும் எனக்கும் இனிமேல் எதுவுமே கிடையாது. ஒழுங்கா இங்கிருந்து போய்விடு இல்லை கத்தி கூச்சல் போட்டுவிடுவேன். அதற்கு பிறகு, அசிங்கமா போய்விடும் என்று கூறுகிறாள்.

இதையெல்லாம் மறைந்திருந்த கேட்டுகொண்டிருந்த, அர்ச்சனா, பார்வதியும் விக்கியும் பேசியதைக் கேட்டு ஷாக் ஆகிறாள்.

விக்கி எவ்வளவு சொல்லியும் பார்வதி நம்பாததால், அவன் அங்கிருந்து கிளம்பி, சுவர் ஏறி குதித்து மீண்டும் கிளம்பி வருகிறான். வரும்போது, விக்கி தெரியாமல், செல்போனை வேறு அங்கேயே வைத்துவிட்டு வந்துவிடுகிறான். புறப்பட தயாரானபோது, அர்ச்சனா வெளியே வந்து விக்கியையும் அவன் நண்பனையும் பிடித்து விடுகிறாள்.

உனக்கும் பார்வதிக்கும் என்ன சம்பந்தம். இந்த நேரத்துல பார்வதியை பார்த்தே ஆக வேண்டிய அவசியம் என்ன, உன் லவ் ஸ்டோரி என்னனு சொல்லு, இல்லை ஆட்களை கூப்பிட்டு விடுவேன் என்று மிரட்டுகிறாள். வேறு வழியில்லாமல், விக்கி, பார்வதியைக் காதலித்ததையும் அவளுடன் பைக்கில் சுற்றியதையும், ஒரு வீட்டுக்கு தனியாக அழைத்துச் சென்று அவளை பலாத்காரம் செய்ய முயன்றபோது, சந்தியாவும் சரவணனும் வந்து காப்பாற்றியதையும் அதற்கு பிறகு, பார்வதியுடனான லவ் பிரேக் ஆகிவிட்டதையும் சொல்கிறான். இதைக் கேட்டு ஷாக் ஆன, அர்ச்சனா, இந்த சந்தியாவும் சரவணனும் முழு பூசணிக்காயை சோத்துல மறைச்சு இருக்காங்க, அதான் இந்த பார்வதி சந்தியா பக்கம் சேர்ந்துட்டாளா என்று மனதுக்குள் கேட்டுக்கொள்கிறாள்.

விக்கி ஃபிரெண்ட் பட்டாஸ் இடம் பெயரைக் கேட்டுவிட்டு, இப்போ ஆட்களைக் கூப்பிட்டால் பட்டாஸ் எப்படி வெடிக்குதுனு பார்க்கிறயா என்று அர்ச்சனா மிரட்டியதைப் பார்த்து விக்கியும் அவனுடைய நண்பனும் மிரண்டு போய் வாயடைத்துப் போய் அமைதியாக நிற்கிறார்கள். பிறகு, அர்ச்சனா, விக்கியிடம் பார்வதி மாதிரி ஏகப்பட்ட காதல் கதை இருக்கோ என்று கேட்கிறாள். அதற்கு, விக்கி இல்லைங்க, நான் பார்வதிகிட்ட சாரி கேட்க வந்தேன். அவள் கோபத்தில இருக்கா என்று கூறுகிறான். இதைக்கேட்ட அர்ச்சனா, சரி அது உன் பிரச்னை, இப்ப நான் சொல்றதை கேளு, இதா பாரு, நான் அந்த சந்தியா மாதிரி மோசமானவள் கிடையாது. ஆனால், அவள் அளவுக்கு நான் நல்லவளும் கிடையாது என்று கூறுகிறாள்.

அதற்கு விக்கி நீங்க சொல்வது புரியவில்லை என்று கூறுகிறான். அதற்கு அர்ச்சனா, நான் சொல்ல வெண்டியதைக் கேட்டு அதன்படி நடந்துகிட்டா நீ நினைப்பது நடக்கும், எனக்கு நடக்க வேண்டிய சில விஷயங்கள் நடக்கணும். பட்டாஸ் உன் ஃபிரெண்ட் கிட்ட எடுத்து சொல்லு என்று கூறுகிறாள்.

விக்கியும் என்ன பண்ணனும் என்று கூறுகிறாள். விக்கி அவனுடைய நம்பரை சொல்ல அர்ச்சனா அவளுடைய போனில் இருந்து போன் செய்து உறுதி செய்துகொள்கிறாள். இதையடுத்து, விக்கியிடம் நான் சொல்வதை கவனமா கேளு என்று ஒரு மாஸ்டர் பிளானை சொல்லி, சொதப்பக்கூடாது, என சொல்லி அனுப்புகிறாள். அவர்கள், போன பிறகு, அர்ச்சனா, சமையா சிக்கியிருக்கா, இதை வச்சி, இந்த பாரவதி கல்யாணத்தை நிறுத்திவிட்டு, என் தங்கச்சி - பாஸ்கர் கல்யாணத்தை நடத்துகிறேன் என்று மனதுக்குள் சொல்லிகொள்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Vijay Tv Alya Manasa Raja Rani 2 Raja Rani 2 Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment