Advertisment

Vijay TV Serial: போட்டோவை காட்டி பார்வதியை தனியாக வரவைத்த விக்கி; மாஸ்டர் பிளான் போட்ட சந்தியா!

பார்வதியின் முன்னாள் பாய் ஃபிரெண்ட் விக்கி, பார்வதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வாட்ஸ்ஆப்பில் அனுப்புகிறான். நான் சொல்ற இடத்துக்கு வரணும், இல்லயென்றால், இந்த போட்டோக்களை உங்க வீட்டுக்கும் மாப்பிள்ளை வீட்டுக்கும் அனுப்புவேன் என்று மிரட்டுகிறான்.

author-image
WebDesk
New Update
Vijay TV Serial: போட்டோவை காட்டி பார்வதியை தனியாக வரவைத்த விக்கி; மாஸ்டர் பிளான் போட்ட சந்தியா!

Raja Rani 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில், பார்வதியின் முன்னாள் பாய் ஃபிரெண்ட் விக்கி, பார்வதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வாட்ஸ்ஆப்பில் அனுப்புகிறான். நான் சொல்ற இடத்துக்கு வரணும், இல்லயென்றால், இந்த போட்டோக்களை உங்க வீட்டுக்கும் மாப்பிள்ளை வீட்டுக்கும் அனுப்புவே என்று மிரட்டுகிறான். இதனால், இன்றைய எபிசோடு விறுவிறுப்பாக அமைந்துள்ளது.

Advertisment

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல், ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இந்த சீரியலில் ஹீரோயின் சந்தியா கதாபாத்திரத்தில் ஆல்யா மானசா நடிக்கிறார். ஹிரோ சரவணன் கதாபாத்திரத்தில் நடிகர் சித்து நடிக்கிறார். இவர்களுடன், பார்வதியாக வைஷ்ணவி சுந்தர், சிவகாமியாக பிரவீனா, சைவம் ரவி சுந்தரமாகவும், அர்ச்சனாவாக வி.ஜே.அர்ச்சனாவும் நடிக்கிறார்கள். முதலில் சுமாராக சென்றுகொண்டிருந்த ராஜா ராணி 2 சீரியல், இப்போது முதல் பாகத்தைப் போல சூடு பிடித்து விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

ராஜா ராணி 2 சீரியல் இன்றைய எபிசோடில், சந்தியா, தனது கணவன் சரவணன் வெளியூருக்கு போயுள்ளதால், அவன் அருகாமையில் இல்லாததால் அவனுடைய புகைப்படத்தைப் பார்த்து காதலுடன் பேசுகிறாள். நீங்கள் இல்லாமல் தனியாக இருக்க முடியவில்லை, எப்போது வருவீர்கள் என்று சந்தியா சரவணனின் புகைப்படத்தை பார்த்துப் பேசிக்கொண்டிருக்கிறாள். சரவணனின் சட்டையை எடுத்து அவனுடைய வாசத்தை முகர்கிறாள். பின்னர், சமையல் போட்டியில், பெஸ்ட் பெர்ஃபெக்ட் ஜோடி என்று வாங்கிய பரிசை எடுத்து சரவணனின் நினைவில் பேசிக்கொண்டிருக்கிறாள்.

அடுத்த காட்சியில், பார்வதி, விக்கி தன்னை தனியாக ஒருவிட்டுகு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ய முயன்றபோது, சரவணனும் சந்தியாவும் வந்து காப்பாற்றியதப் பற்றி நினைக்கிறாள். பார்வதி, ‘நான் எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்திருக்கிறேன். இந்த விக்கியைப் போய் நம்பியிருக்கிறேனே. என்னால, இப்போது சரவணன், சந்தியா அண்ணி எல்லாம் எவ்ளோ கஷ்டப்படறாங்க…” என்று தனியாக புலம்புகிறாள்.

பிறகு, அர்ச்சனா தன்னை என்னவெல்லாம் சொல்லி எப்படியெல்லாம் பேசி கொடவுனுக்கு அழைத்து சென்று விக்கியிடம் மாட்டிவிட்டிருக்காங்க, அர்ச்சனா அண்ணி இப்படி பண்ணுவாங்கனு நினைக்கவே முடியல என்று பார்வதி மனதுக்குள் புலம்புகிறாள்.

அப்போது, பாரவதி மொபைல் போனுக்கு வாட்ஸ்ஆப்பில், விக்கியுடன் சேர்ந்து எடுத்துகொண்ட புகைப்படங்கள் வருகின்றன. அதைப் பார்த்து பார்வதி ஷாக் ஆகிறாள். உடனே விக்கியிடம் இருந்து போன் வருகிறது. பார்வதி அச்சத்துடன் போனை எடுத்து பேசுகிறாள். போனில், விக்கி, நீ, உங்க அண்ணன், அண்ணி, இன்னொரு அண்ணன் எல்லாம் சேர்ந்து என்னை பப்ளிக்ல கூட்டத்துல அடிவாங்க வச்சிட்டிங்க இல்ல என்று கேட்கிறான்.

அதற்கு பார்வதி, நான் உன்னை உண்மையா லவ் பண்னேன். ஆனால், நீ அதற்கு தகுதி இல்லாத ஆளு, அதனாலதான் என்மேல உண்மையா பேச வச்சிருக்கிற அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி எல்லோரும் சேர்ந்து ஏற்பாடு பண்ண கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். இதற்கு நான் சம்மதிக்கலனா உனக்கும் எனக்கு வித்தியாசம் இல்லாமல் போயிருக்கும் என்று கூறுகிறாள்.

இதைக்கேட்ட விக்கி, என்ன வேணாலும் எவன வேணாலும் கல்யாணம் பண்ணிக்கோ, ஆனால், இப்பதான், போட்டோ அனுப்பியிருக்கிறேன். இதை எல்லாத்தையும் உங்க விட்டுக்கு அனுப்பிவைப்பேன். அதனால், நாளைக்கு நான் சொல்ற இடத்துக்கு வரணும். இல்லைனா, இந்த போட்டோ எல்லாம் உன் வீட்ல இருக்கிற எல்லோருக்கும் போய்விடும். பிறகு, இலவச இணைப்பா உன்னை கல்யாணம் பண்ணிக்கப்போற மாப்பிள்ளை வீட்டுக்கும் போகும். என்ன ஓகேவா என்று கேட்கிறான். பார்வதி, விக்கி அப்படியெல்லாம் பண்ணிடாத என்று கெஞ்சுகிறாள். இதையடுத்து, விக்கி, பார்வதியிடம், நாளைக்கு நீ எங்க வரணும்னு போன் பண்ணி சொல்கிறேன். வந்து சேரு என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிடுகிறான்.

இதைக்கேட்டு பார்வதி அழுதுகொண்டே வந்து சந்தியாவிடம் நடந்த விஷயத்தை சொல்கிறாள். சந்தியா என்ன என்று விசாரிக்கிறாள். அதற்கு பார்வதி, “நீங்க பட்ட கஷ்டம் எல்லாம் வீணா போகப் போகுது அண்ணி, நான் தெரியாமல் பண்ண தப்பால, இந்த குடும்பத்தோட சந்தோஷம் மாணம் எல்லாம் போகப் போகுது” என்று கூறுகிறாள். அதற்கு சந்தியா, அந்த விக்கி மறுபடியும் ஏதாவது பிரச்னை பண்றானா என்று கேட்கிறாள். அதற்கு பார்வதி, விக்கி தனது மொபைல் போனுக்கு அனுப்பிய போட்டோவை சந்தியாவிடம் காட்டுகிறாள். நாளைக்கு இந்த போட்டோவை எல்லாம் வீட்ல இருக்கிற எல்லோருக்கும் அனுப்பப் போவதாக சொல்லியிருக்கிறான். அவன் சொல்ற இடத்துக்கு நாளைக்கு வரலனா, மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பிடுவேன்னு சொல்லியிருக்கிறான். என்ன பன்றதுனே தெரியல. குடும்பத்துக்கு ஒரு அவமானத்தை வாங்கி கொடுத்துட்டு நான் உயிரோடவே இருக்க மாட்டேன். நான் போறேன் அண்ணி, என்ன மன்னிச்சுடுங்க என்று கூறுகிறாள். சந்தியா, பார்வதியை தடுத்து நிறுத்தி, “அமைதியாக இரு, அழாத இரு, அந்த விக்கிகூட நீ பழகினதைவிட இப்ப எடுத்திருக்கிற முடிவுதான் ரொம்ப தப்பு… தப்பு பண்ணும்போது இருக்கிற தைரியம் அதை சரி பண்ணும்போது மட்டும் இருக்க மாட்டேங்குது இல்ல, நீ செத்துபோயிட்டா இந்த குடும்பம் அவமானம் படாதா, நீ அந்த மாதிரி பண்ணாதான், இந்த ஊர் ஆயிரம் கதையை திரிச்சி பேசும், யோசிக்க எனக்கு டைம் கொடு, என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கு இல்ல. சரி, நீ சொன்ன இடத்துக்கு நான் வர்றேன். எத்தனை மணிக்கு வரணும்னு அவனுக்கு ஒரு ரிப்ளை மெசேஜ் அனுப்பு.” என்று கூறுகிறாள். பார்வதி பயந்து போய் என்ன சொல்றீங்க, அண்ணன்கூட ஊர்ல இல்லை. ஏதாவது ஆச்சுனா என்ன பண்றது என்று கேட்கிறாள்.

சந்தியா, “அந்த விக்கிதான் தப்பு பண்றான். நாம ஏன் பயப்படனும், நான் சொன்னதை மட்டும் செய். மத்ததை எல்லாம் நான் பார்த்துக்கிறேன். பார்வதி தைரியமா இரு, என்மேல உனக்கு நம்பிக்கை இருக்கு இல்லை, அப்போ அனுப்பு.” என்று கூறுகிறாள். பார்வதியும் விக்கிக்கு மெசேஜ் அனுப்புகிறாள்.

விக்கி பார்வதியின் மேசேஜ்ஜை பார்த்துவிட்டு, நீ வருவனு தெரியும்டீ, உனக்கு வேற வாய்ப்பே இல்லை என்று சொல்லிக்கொண்டு பதில் மெசேஜ் அனுப்புகிறான்.

பார்வதிக்கு பதில் மெசேஜ் வருகிறது. காலையில வர சொல்லி இருக்கிறான் என்று பார்வதி சந்தியாவிடம் கூறுகிறாள். இதைக்கேட்ட, சந்தியா, பயப்படாத பார்வதி, அந்த விக்கி நாளைக்குதான் உன் வாழ்க்கையில கடைசியா இருக்கப்போற நாள். என்ன நடந்தாலும் நானும் உங்க அண்ணனும் உன் பக்கத்துலயே இருப்போம் என்று தைரியம் கூறி அனுப்பி வைக்கிறாள்.

சந்தியா, நான் பார்வதிக்கு தைரியம் சொல்லி அனுப்பிட்டேன். நாளைக்கு எல்லாம் சரியா நடக்கணும். நீங்க கூட இருந்திருந்தால், இன்னும் கொஞ்சம் தைரியமா இருந்திருக்கும் என்று சரவணனை நினைத்துக்கொள்கிறாள்.

மறுநாள் காலையில், பார்வதி தயாராக இருக்கிறாள். சந்தியா, பார்வதியைப் பார்த்ததும், அண்ணி எனக்கு பயமா இருக்கிறது. என்னால உங்களுக்கு எவ்வளவு பெரிய கஷ்டம் என்று வருத்தப்படுகிறாள். பார்வதி, அண்ணி அங்க போய் ஏதாவது நடந்துட்டா நம்ம குடும்பத்துக்கு எவ்வளவு பெரிய அவமானம் என்று பயத்துடன் கேட்கிறாள். ஆனால், சந்தியா, பயப்படாத என்று தைரியம் கூறுகிறாள்.

சந்தியா, பார்வதி நீ எதைப்பற்றியும் யோசிக்காத, நீ அங்க போய் என்ன பண்ணணும் என்பது மட்டும் உன் மனசுல தெளிவா இருக்கணும் என்று கூறுகிறாள்.

அப்போது, நாம் ரெண்டு பேரும் என்ன சொல்லிட்டு வெளியே போவது என்று பார்வதி கேட்கிறாள். அதற்கு சந்தியா, உனக்கு ஓகேனா பொய் சொல்லலாம். நான் கோயிலுக்கு போகிறேன். நீ உனக்கு ஏதோ வாங்க என்கூட வர. நார்மலா இரு என்று கூறுகிறாள்.

ரெண்டு பேரும் கிளம்பி போகும்போது, சிவகாமி ரெண்டு பேரும் எங்கே போகிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு சந்தியா, நான் கோயிலுக்கு போறேன்னு சொன்னேன். பார்வதி நானும் உங்ககூட வர்றேன்னு சொன்னா என்று கூறுகிறாள். பார்வதியும் ஆமாம் போர் அடிக்குதுமா அதான் நானும் வர்றேன்னு சொன்னேன் என்று கூறுகிறாள். அதற்கு, சிவகாமி, பொழுதுபோகலனு போற இடமா கோயில், மனசுல பக்தி இருக்கனும். எப்ப பாரு போனையே நோண்டிக்கிட்டே இருந்தா இப்படிதான் என்று திட்டுகிறார். அதற்கு பார்வதி, அம்மா தெரியாமல் சொல்லிட்டேன். இனிமேல் பார்த்து பார்த்து வேலை செய்றேன் என்று கூறிவிட்டு கிளம்புகிறாள். ஆனால், சிவகாமி சரி என்று சொல்லிவிட்டு, நானும் வருகிறேன் என்று கூறுகிறாள். இதைக்கேட்டு ஷாக் ஆகும் பார்வதி, அம்மா நீ எப்ப கிளம்பி வருவது. அதனால், நாங்க முதலில் கோயிலுக்கு போகிறோம். அதற்கு பிறகு, நீங்க வாங்க என்று சொல்கிறாள். ஆனால், சிவகாமி நான் வருகிறேன் என்று புடவை மாற்றிக்கொண்டு வர செல்கிறார்.

வேறு வழி இல்லமல், பார்வதியும் சந்தியாவும் சிவகாமியுடன் வீட்டைவிட்டு வெளியே வருகிறார்கள். ஆனா, பக்கத்துவீட்டு அம்மா, ஸ்வீட் ஆர்டர் கொடுக்க வந்திருப்பதாக சொல்ல. சிவகாமி வீட்டில் இருப்பதாக சொல்லிவிட்டு சந்தியாவையும் பார்வதியையும் கோயிலுக்க்கு அனுப்பி வைக்கிறார்.

விக்கி சொன்ன இடத்துக்கு சந்தியாவும் பார்வதியும் வருகிறார்கள். சந்தியா, பார்வதியிடம், “நீ நான் சொன்ன மாதிரி, உள்ள போன ரெண்டு நிமிஷத்துல அப்படியே பேச்சு கொடுத்துகிட்டு அவன் போனை எடுத்து ஜன்னல் பக்கத்துல வைச்சுடு. நான் அதை தெரியாமல் எடுத்து எல்லா போட்டோவை டெலிட் பண்ணிடறேன். அதற்கு பிறகு நான் உள்ள வந்துடறேன்.” என்று தனது மாஸ்டர் பிளானை கூறுகிறாள். பார்வதி, அவன் கண்டுபிடிச்சுட்டா என்ன பண்றது என்று கேட்கிறாள். அதற்கு சந்தியா அவன் கண்டுபிடிப்பான், ஆனால், நீ வந்திருக்கிறதால, உன்கிட்ட பேசுறதலதான் கவனமா இருப்பான். அந்த ரெண்டு நிமிஷத்துல நம்ம வேலையை முடிச்சுடலாம் என்று கூறுகிறாள்.

தொடர்ந்து பேசும் சந்தியா, ஏற்கெனவே நானும் உங்க அண்ணனும் அவனை அடிச்சிருக்கிறோம். அதனால், அவன் உஷாரா இருக்கவும் வாய்ப்பு இருக்கு. அதையும் திசை திருப்ப உன்னால மட்டும்தான் முடியும். நீ இந்த மாதிரி முகத்தை வச்சுகிட்டு இருந்தா அவன் ஈசியா கண்டுபுடிச்சுடுவான் என்று பார்வதியிடம் கூறுகிறாள். ஆனால், பார்வதி எனக்கு பயங்கர டென்ஷனா இருக்கு அண்ணி என்று கூறுகிறாள். அதற்கு சந்தியா, வேற வழியில்லை பார்வதி. உன்னோட டென்ஷன் எல்லாத்தையும் உன் மனசுல வச்சு பூட்டிக்கிட்டு. நாம நினைச்சதை நீதான் செய்யனும். வேற வழி இல்லை பார்வதி. நாம தான் ஜெயிக்கிறோம். உன் மனசுல இந்த எண்ணம் மட்டும் உறுதியா இருந்தால் போதும். நீ எந்த ரூமுக்கு போறியோ அந்த ரூமோட ஜன்னல் பக்கத்துலதான் நான் இருப்பேன். நீ உள்ள போனதும் எவ்வளவு சீக்கிரம் செல்போனை எடுக்க முடியுமோ எடுத்துடு. டைமிங்தான் ரொம்ப முக்கியம் பார்வதி. அதே சமயத்துல அவனுக்கு எக்காரணத்தைக் கொண்டு சந்தேகம் வந்துவிடவே கூடாது என்று கூறுகிறாள். பார்வதி சரிங்க அண்ணி நான் போகவா என்று கேட்கிறாள். அதற்கு சந்தியா, என்ன நீ தைரியமா இரு. நான் வெளியிலதானே நிற்கிறேன். என்று சொல்லி பார்வதியை உள்ளே அனுப்புகிறாள். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

விக்கியைப் பார்க்க பார்வதி உள்ளே செல்கிறாள். சந்தியா தனது மாஸ்டர் பிளானை செயல்படுத்த வெளியே நிற்கிறாள். சந்தியா, விக்கி போனில் இருந்து போட்டோக்களை அழித்துவிட்டு பார்வதியை காப்பாற்றி விடுவாளா என்று பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment