சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கடந்த 3-நாட்களாக தனது ரசிகர்களுடன் போட்டா எடுத்து ரசிகர்களை குஷி படுத்தினார். இந்நிலையில், 4-வது நாளாக இன்றும் ரஜினி தனது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக அவர்களுடன் இணைந்து போட்டோ எடுத்துக்கொண்டார்.
இதனிடையே ரஜினிகாந்த் செய்தியார்களிடம் பேசிய போது: ரசிகர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினரை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். என்னுடைய ரசிகர்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.