கடந்த 26ஆம் தேதி முதல் கோடம்பாக்கத்திலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களைச் சந்தித்து வந்தார் ரஜினிகாந்த். நிகழ்ச்சியின் கடைசி நாளான இன்று, தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி அறிவித்தார் ரஜினி.
தனிக்கட்சி தொடங்க இருப்பதாகவும், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகவும் ரஜினிகாந்து தெரிவித்துள்ளார். ‘சாதி, மதச் சார்பற்ற வெளிப்படையான ஆன்மீக அரசியல் கொண்டுவர வேண்டும் என்பதே என் நோக்கம்’ என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
புகைப்படங்கள்: பாலாஜி மற்றும் ஸ்ரீராம், பாரத் கல்லூரி மாணவர்கள், தஞ்சை.