Rajinikanth's Next: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் மாஸ் எண்டெர்டெயினராக உருவாகியிருந்த பேட்ட பொங்கலுக்கு வெளியானது.
இதனை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்தார். இதன் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தனது 167-வது படமான ‘தர்பார்’ திரைப்படத்தில் கமிட்டாகிவிட்டார் ரஜினி.
இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இதனை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. தற்போது இதன் படபிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.
போலீஸ் அதிகாரியாக ரஜினியும், அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் இதில் நடிக்கிறார்கள். இவர்களுடன் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, ஜான் மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களை ஏற்றிருக்கிறார்கள்.
தர்பார் வரும் 2020 பொங்கலுக்கு வெளியாகிறது.
இந்நிலையில் ரஜினியின் அடுத்தப்படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இன்று போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியை சந்தித்திருக்கிறார் இயக்குநர் சிவா. இந்த சந்திப்பில் கதையும் சொல்லப்பட்டுள்ளதாம். கதை ரஜினிக்கு பிடிக்கும் பட்சத்தில் தர்பார் படத்திற்குப் பிறகு சிவாவின் படத்தில் நடிப்பாராம் ரஜினி!