ரஜினிகாந்த் இன்று (வியாழக்கிழமை) மூன்றாவது நாளாக ரசிகர்களை சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்து வருகிறார். மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலிருந்து வந்திருந்த ரசிகர்களுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
முன்னதாக ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த், “மதுரையிலிருந்து ரசிகர்கள் வந்திருக்கிறீர்கள். மதுரை என்றாலே வீரத்தின் அடையாளம் இரவெல்லாம் பயணம் செய்துவந்தாலும் ரசிகர்களின் முகத்தில் உற்சாகம் குறையவில்லை. உங்களை பார்க்கும்போது எனக்கும் உற்சாகம் ஏற்படுகிறது. பெங்களூருவில் இருக்கும்போது நானும் ராஜ்குமாரின் ரசிகன் தான். அதனால், உங்கள் உற்சாகத்தை புரிந்துகொள்ள முடிகிறது” என கூறினார்.