சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கதை சொல்லி இயக்குநர் அட்லி, அவரை பிரமிக்க வைத்ததாக சினிமா வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.
ஆர்யா - நயன்தாரா நடிப்பில் உருவான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. விஜயை வைத்து தெறி, மெர்சல் ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். மீண்டும் அவரும், விஜயும் இணைவதாக செய்திகள் வருகின்றன. நடிகர் விஜய், இயக்குநர் முருகதாசுடன் இணைந்து ஒரு படம் எடுத்து முடித்த பின்னர், அட்லி படத்தில் நடிப்பார் என்கிறார்கள்.
இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக அவர் ஒரு கதையை தயார் செய்துள்ளார். அதை ரஜினியை சந்தித்து சொல்லியுள்ளார். கதையைக் கேட்ட ரஜினிகாந்த் பிரமித்துப் போனாராம்.
ரஜினியின் நடிப்பில் உருவாகி வரும் ஷங்கரின் 2.0, பா.ரஞ்சித்தின் காலா ஆகிய படங்களில் எதை வெளியிடுவது என்ற குழப்பம் இன்னமும் தீரவில்லை. 2.0 படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் நடந்து வருவதால், படம் தள்ளிப்போகிறாது. காலா படத்தில் அப்படியான எந்த சூழலும் இல்லை. படப்பிடிப்பு முடிவடைந்து, ரஜினியும் டப்பிங்க் பேசி முடித்துவிட்டார். படம் முடியும் தருவாயில் இருப்பதால், அந்த படத்தை முதலில் கொண்டு வரலாமா என்ற ஆலோசனையும் நடந்து வருகிறது.
இதனிடையே ரஜினி அரசியலுக்கு வர தயாராகி வருவதாலும், அடுத்த படம் எதற்கும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை. அட்லியின் கதை ரஜினியை அசத்தினாலும், காலா, 2.0 படம் வெளியிடுவது தொடர்பாக முடிவு எடுத்த பின்னர்தான், அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வரும் என்று தெரிகிறது.