Advertisment

மான்சியை தொடர்ந்து ரேஷ்மா; ‘அன்புடன் குஷி’ சீரியலில் நடப்பது என்ன?

Tamil Serial News : அன்புடன் குஷி சீரியலில் ரேஷ்மா வெங்கடேஷ், ‘குஷி’ பாத்திரத்தில் நடித்து வந்த நிலையில், விலகுவதாக அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
மான்சியை தொடர்ந்து ரேஷ்மா; ‘அன்புடன் குஷி’ சீரியலில் நடப்பது என்ன?

Serial actress Reshma Venkatesh

சீரியல் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று முந்நூறாவது எபிசோடை நோக்கி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘அன்புடன் குஷி’ சீரியலில் இருந்து, கதாநாயகியான ரேஷ்மா வெங்கடேஷ் விலகியிருப்பது, ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

விஜய் டிவி யில் சின்னத்திரை நடிகர் பிரஜின் நடிப்பில் ஒளிபரப்பாகி வந்த சின்னத்தம்பி சீரியல் முடிந்த உடன், அவர் அன்புடன் குஷி தொடரில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ரேஷ்மா வெங்கடேஷ், ‘குஷி’ பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அந்த சீரியலில் இருந்து விலகுவதாக ரேஷ்மா, அதிரடி பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

‘நான் அன்புடன் குஷி சீரியலிருந்து விலகிவிட்டேன். இனிமேல், நீங்கள் என்னை குஷியாக பார்க்க முடியாது. உங்களைப் போல நானும் அந்த ரோலை மிஸ் பண்ணுறேன். அன்புடன் குஷி மூலம் எனக்கு ஆதரவளித்த விஜய் டிவி மற்றும் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் நல்ல செய்தியுடன் உங்களை சந்திப்பேன்’, என இன்ஸ்டாகிராமில் பதிவில் ரேஷ்மா குறிப்பிட்டுள்ளார்.

publive-image

ரேஷ்மாவின் பதிவை தொடர்ந்து, ‘அக்கா நீங்க தான் குஷி ரோலுக்கு சரியானவங்க, நீங்க தொடர்ந்து நடிங்க’, ‘மிஸ் யூ அக்கா’ என தங்களது விருப்பங்களையும் ஆதரவினையும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, இந்த சீரியலில் முன்னர் கதாநாயகியாக நடித்த மான்சி ஜோஷி திடீரென விலகிய நிலையில், ரேஷ்மா கதாநாயகியாக நடித்தார். இந்நிலையில், ரேஷ்மாவும் தற்போது விலகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Serial Actress Vijay Tv Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment