Advertisment

”இப்படித்தான் ஸ்ரீதேவி மரணத்தை வெளியிடுவீர்களா?”: ஊடகங்கள் மீது பாய்ந்த அமிதாப், வித்யா பாலன்

ஸ்ரீதேவியின் மரணம் குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிடும் முறை குறித்து பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், வித்யா பாலன் உள்ளிட்டோர் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
”இப்படித்தான் ஸ்ரீதேவி மரணத்தை வெளியிடுவீர்களா?”: ஊடகங்கள் மீது பாய்ந்த அமிதாப், வித்யா பாலன்

ஸ்ரீதேவியின் மரணம் குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிடும் முறை குறித்து பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், வித்யா பாலன் உள்ளிட்டோர் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.

Advertisment

நடிகை ஸ்ரீதேவி உறவினர் திருமணத்திற்காக, துபாய் சென்றிருந்த நிலையில் அங்கு கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். ஆரம்பத்தில் மாரடைப்பு ஏற்பட்டு ஸ்ரீதேவி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில், நேற்று (திங்கள் கிழமை)உணர்வற்ற நிலையில் ஓட்டல் குளியலறையில் உள்ள குளியல் தொட்டியில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகின. மேலும், அவரது உடலில் மது கலந்திருப்பதாகவும் அந்த முடிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, சில ஊடகங்கள் குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி படுத்திருப்பது போலவும், டம்ளரில் மது இருப்பது போலவும் காட்சிகளை வைத்து செய்தி வெளியிட்டன.

இந்நிலையில், ஸ்ரீதேவியின் மரணம் குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிடும் முறை குறித்து பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், வித்யா பாலன், சோனு சூட், ஃபரான் அக்தர் உள்ளிட்டோர் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஊடகங்கள் ஸ்ரீதேவியின் இறப்பு செய்தியை பரபரப்பாக, உணர்வின்றி வெளியிடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், ஸ்ரீதேவியின் ரசிகர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Amitabh Bachchan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment