புகழ்பெற்ற எழுத்தாளர் ஆர்.கே. நாராயண் எழுதிய 'மால்குடி டேஸ்' நாவலில் வரும் மால்குடி கிராமத்தின் பெயரை கர்நாடகாவில் உள்ள அரசலு கிராமத்துக்கு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எழுத்தாளர் ஆர்.கே.நாராயண் எழுதிய மால்குடி டேஸ் எனும் நாவல் தொலைக்காட்சி தொடராக வெளியாகியது. இந்தத் தொடரில் வரும் 'மால்குடி' எனும் ஊர் உண்மையில் இல்லை. ஆனால், கர்நாடக மாநிலம், சிவமோகா நகரிலிருந்து 34 கி.மீ தொலைவில் இருக்கும் அரசலு கிராமத்தில்தான் இந்த தொடர் எடுக்கப்பட்டது. அந்த அரசலு ஊருக்குத் தான் மால்குடி என பெயரிடப்பட்டு ஷூட்டிங் எடுக்கப்பட்டது.
இது 90'ஸ் கிட்ஸுக்கு மிகவும் பிரபலமான நாஸ்டாலஜியா மொமன்ட்ஸ் என்றால் மிகையாகாது.
புகழ்பெற்ற அந்த மால்குடி எனும் பெயரை அரசலு ரயில் நிலையத்திற்கு சூட்டக் கோரி, கர்நாடகாவின் சிவமோகா தொகுதி எம்.பி. பி.ஒய் ராகவேந்திரா ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
தற்போது இதற்கு அனுமதி கிடைத்திருக்கிறது. அதுமட்டுமின்றி, மால்குடி ரயில் நிலையம் 1.3 கோடியில் மறு சீரமைப்பு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.