நடிகை சமந்தா-நடிகர் நாக சைதன்யா இருவரும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
Advertisment
இவர்களின் திருமணம் காதல் திருமணமாகும். இந்நிலையில், கடந்த ஆண்டு 4ஆவது திருமண ஆண்டு விழாவை கொண்டாட வேண்டிய வேளையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.
இது திரையுலகினர் மத்தியிலும், ரசர்களுக்கும் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. தி ஃபேமிலி மேன் இணையத் தொடரில் சமந்தா கவர்ச்சியாக நடித்ததும் இவர்களது பிரிவுக்கு காரணமாக இருந்தது என்று ஆந்திர ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்நிலையில், சமந்தா-நாக சைதன்யாவை ஒரு படத்தில் ஒன்றாக நடிக்க வைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த முயற்சியை சமந்தாவின் நெருங்கிய தோழியும், இயக்குநருமான நந்தினி ரெட்டி மேற்கொண்டு வருகிறார். நந்தினி ரெட்டி, ஓ பேபி என்ற ஃபேன்டசி திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் நடிகை சமந்தா கனமான கதாபாத்திரம் ஏற்று நடித்தார்.
படமும் அனைத்து தரப்பு ரசிகர்களை கவர்ந்தது. சமந்தாவின் நடிப்பும் பாராட்டுகளை பெற்றது. இந்தப் படத்தில் நாக சைதன்யாவும் நடித்திருந்தார். அந்த சமயத்தில் நந்தினி ரெட்டி, அவர்கள் இருவருக்கும் ஒரு கதையை கூறியிருந்தார்.
அந்தக் கதையை படமாக்க இப்போது முதல்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தில் சமந்தா-நாக சைதன்யா ஜோடி இணைந்து நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் முதல் முறையாக சமந்தாவும்-நாக சைதன்யாவும் இணைந்து நடித்தனர்.