Tamil Serial News : வாணி ராணி சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் தனது இன்ச்டாகிராம் அக்கவுண்டில் மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
‘ராஜா ராணி’ சீரியலில் வில்லியாக நடித்து மிரட்டியவர் நடிகை ஶ்ரீதேவி. 2008-ல் சீரியலுக்கு வந்த அவர், 2 தெலுங்கு சீரியல்களில் நடித்து முடித்த பிறகு, ‘செல்லமடி நீ எனக்கு’ சீரியலின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தங்கம், இளவரசி, பிரிவோம் சந்திப்போம், வாணி ராணி, ராஜா ராணி, கல்யாண பரிசு உள்ளிட்ட தொடர்களில் பாஸிட்டாவாகவும், நெகட்டிவாகவும் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை ஶ்ரீதேவி தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் பகிர்ந்து கொண்டுள்ளார். திருமணம் முடிந்து பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில், இந்த செய்து அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படிப்பிலும் ஆர்வம் கொண்டவரான ஸ்ரீதேவி, எம்.எஸ்.சி கிரிமினாலஜி படித்திருக்கிறார். சி.ஐ.டி-யாக வேண்டும் என்பது தான் ஸ்ரீதேவியின் பெரிய லட்சியமாம். அதோடு செல்லப் பிராணிகளை பாதுகாக்கும் துறையிலும் பணியாற்றி வருகிறார். அப்படி அனிமல் ரெஸ்கியூ டீமில் இருந்த அசோக் என்பவரை காதலித்து திருமணமும் செய்துக் கொண்டார்.