பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதி சுற்றுவரை சென்ற கவிஞர் சினேகன், அதே நிகழ்ச்சியின் 2ம் பாகம் போட்டியாளரை நேருக்கு நேர் சந்தித்து மொக்கை வாங்குகிறார்.
சினேகன் கட்டிப்பிடி வைத்தியம்:
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அனைவரும் மனதிலும் முதலில் தோன்றும் பெயர் ஜூலி. அதற்கு அடுத்தப்படியாக தோன்றுவது கட்டுப்பிடி வைத்தியம், தேவதைகளின் நாயகன், கவிஞர் சினேகன் தான். ஒவ்வொரு வாரமும் எவிக்ஷன் என்று சொன்னாலே மக்கள் மனதில் “ இந்த வாரம் சினேகன் யாரை கட்டிப்பிடித்து அழப் போகிறார்?” என்று தான் நினைப்பார்கள்.
அவரின் கட்டிப்பிடி வைத்தியத்தில் இருந்து தப்பியது ஒரே ஒரு நபர் தான். பிக் பாஸ் வீட்டை விட்டு துரோகத்தால் வெளியேற்றப்பட்ட ஓவியா. அன்று தொடங்கிய அவர் இன்று வரை அந்த வைத்தியத்தை விடவில்லை என்பதற்கு சாட்சி அந்த தொலைக்காட்சி வெளியிட்ட புரோமோ தான்.
August 2018
தனியார் சேனலின் புதிய கேம் ஷோ ஒன்றி பங்கேற்க பிக் பாஸ் பிரபலங்கள் அழைக்கப்பட்டுள்ளனர். பிக் பாஸ் முதல் சீசனில் இருந்து சினேகன் மற்றும் காயத்ரி, 2ம் சீசனில் இருந்து மமதி சாரி அழைக்கப்பட்டுள்ளார்.
அப்போது காயத்ரியை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்துவிட்டு, மமதி பக்கம் திரும்புகிறார். கைகளை விரித்துக் கொண்டு மமதியை கட்டிப்பிடிக்க சென்ற அவருக்கு, பெரிய பல்ப் கொடுத்து கைகளை கூப்பு வணக்கம் போடுகிறார் மமதி. மீதம் இருக்கும் நிகழ்வுகள் என்ன என்பது அந்த நிகழ்ச்சியை பார்த்தால் தான் தெரியும்.