தனது பிறந்தநாளை மறக்கமுடியாத நினைவாக மலர வைத்ததற்காக கணவர் விசாகனுக்கு நன்றி தெரிவித்துள்ள செளந்தர்யா ரஜினிகாந்த், அவர் உடனான ரொமான்ஸ் படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் மகள் என்ற பெருமை மட்டுமல்லாது சினிமா தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்டவர் செளந்தர்யா ரஜினிகாந்த். இவர் சமீபத்தில் தனது 35வது பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாடினார். இவருக்கு பல்வேறு தரப்புகளிலிருந்து வாழ்த்துகள் குவிந்தவண்ணம் இருந்தன.
செளந்தர்யா ரஜினிகாந்த், தனது பிறந்தநாளை கணவர் விசாகன் உடன் கோலாகலமாக கொண்டாடியுள்ளார். இதுதொடர்பாக, டுவிட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது, எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களின் உண்மையான வாழ்த்துகளுக்கு ஈடுஇணை ஏதும் இல்லை. இந்த பிறந்தநாளை, மறக்கமுடியாத நாள் ஆக்கிய கணவர் விசாகனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.