Advertisment

குரல் தேர்வு முதல் கின்னஸ் சாதனை வரை: எஸ்பிபி சகாப்தம்

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் முதல் பாடல் குரல் தேர்வு உள்ளிட்ட சில சுவாரஸ்யமான உண்மைகளைப் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
குரல் தேர்வு முதல் கின்னஸ் சாதனை வரை: எஸ்பிபி சகாப்தம்

புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமண்யம், கோவிட் -19 தொற்றுடன் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்திய பிறகு, செப்டம்பர் 25ம் தேதி காலமானார். அற்புதமான பாடகர் எஸ்.பி.பி-யின் ரசிகர்கள் அவரது அற்புதமான இசைத்தொகுப்புகள் மற்றும் இந்திய இசையில் அவருடைய பங்களிப்புகளை நன்கு அறிவார்கள். அதற்கு பதிலாக, மறைந்த இசைக்கலைஞரைப் பற்றிய வேறு சில சுவாரஸ்யமான உண்மைகளைப் பார்ப்போம்.

Advertisment

தனது இசை வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பு, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஒரு பொறியியல் மாணவர். எஸ்.பி.பாலசுப்பிரமண்யம் அனந்தபூரில் உள்ள ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், அவர் டைபாய்டு காய்ச்சல் காரணமாக அவர் தனது படிப்பை பாதியில் நிறுத்த வேண்டியிருந்தது. இதற்கிடையில், அவர் பாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்றார்.

பாலசுப்பிரமணியம் முதல் குரல் தேர்வு

ஒரு இளம் பாடகராக பாலசுப்பிரமண்யம் பல இசையமைப்பாளர்களிடம் சென்று வாய்ப்புகளைத் தேடினார். இவரது முதல் குரல் தேர்வு பாடல் பிபி ஸ்ரீனிவாஸ் பாடிய நிலவே என்னிடம் நேருங்காதே என்ற பாடல்தான். ஆனால், பாடகர் எஸ்.பி.பி 1966ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமண்ணா என்ற தெலுங்கு திரைப்படத்தில் பின்னணி பாடகராக அறிமுகமானார்.

கின்னஸ் உலக சாதனை

சென்னை எக்ஸ்பிரஸ் பாடகர் எஸ்.பி.பி தனது வாழ்நாளில், ஆண்டுக்கு சராசரியாக 930 பாடல்கள் அல்லது ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 3 பாடல்கள் என 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

12 மணி நேரத்தில் 21 பாடல்கள்

கன்னட இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக 12 மணி நேரத்தில் 21 பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ளார். அவர் ஒரே நாளில் 19 தமிழ் பாடல்களையும் ஒரே நாளில் 16 பாடல்களையும் இந்தியில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

தற்செயலாக ஒரு டப்பிங் கலைஞரான எஸ்.பி.பி

கே.பாலச்சந்தரின் மன்மத லீலை என்ற தமிழ் திரைப்படத்தின் தெலுங்கு படமான மன்மதா லீலா படத்தில் பாலசுப்பிரமண்யம் டப்பிங் கலைஞரானார். இந்த படத்தில், எஸ்.பி.பி கமல்ஹாசனுக்காக குரல் கொடுத்தார். அனில் கபூர், கிரிஷ் கர்நாட், ரஜினிகாந்த், நாகேஷ் மற்றும் பிற நடிகர்களுக்காகவும் அவர் குரல் கொடுத்துள்ளார். தசவதாரம் தெலுங்கு படத்துக்காக கமல்ஹாசன் நடித்த 10 கதாபாத்திரங்களில் ஏழு கதாபாத்திரங்களுக்கு எஸ்.பி.பி குரல் கொடுத்தார்.

ஆறு முறை தேசிய விருது வென்றவர் எஸ்.பி.பி

பாடகர் எஸ்.பி.பி 4 வெவ்வேறு இந்திய மொழிகளில் தனது பாடல்களுக்காக 6 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ (2001), பத்ம பூஷண் (2011) ஆகிய விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Singer Sp Balasubramaniam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment