/indian-express-tamil/media/media_files/oioJ7b7EnIigjrvhO1ag.jpg)
சினிமா உலகில் ஒரு சகாப்தமாகத் திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வெற்றிப் பயணம், பலருக்கும் ஒரு உந்துதலாக இருக்கிறது. தன் முதல் பட வாய்ப்பு எப்படி அமைந்தது, முதல் சம்பளம் எவ்வளவு, மற்றும் அவரது வெற்றிக்குக் காரணமான முதல் ஷாட் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அவரே கூறியிருந்தார். இந்த வீடியோ தற்போது தமிழ் பீபுல் அஃபிஷியல் இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகியுள்ளது.
1952-ல் வெளியான 'பராசக்தி' திரைப்படமே சிவாஜி கணேசனின் முதல் திரைப்படம். பி.ஏ. பெருமாள் மற்றும் ஏ.வி.எம் போன்ற பெரிய தயாரிப்பாளர்கள், பாவலர் பாலசுந்தரம் எழுதிய 'பராசக்தி' நாடகத்தைப் பார்த்து, அதனைத் திரைப்படமாக எடுக்க உரிமையை வாங்கினார்கள். அப்போது, படத்தின் கதாநாயகனுக்காகப் பலரையும் பரிசீலித்தபோது, பி.ஏ. பெருமாள் அவர்கள் நாடக மேடைகளில் பிரபலமாக இருந்த சிவாஜி கணேசனின் பெயரைப் பரிந்துரைத்தார்.
திருச்சியில் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜிக்கு சென்னைக்கு வர அழைப்பு வந்தது. முதல் முதலாக சினிமா வாய்ப்புக்காக திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார். பராசக்தி படத்திற்காக, சிவாஜி கணேசனுடன் 5-6 வருட ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போது அவருக்கு மாதச் சம்பளமாக ரூ.250 நிர்ணயிக்கப்பட்டது.
பராசக்தி திரைப்படத்தில், நீதிமன்றக் காட்சியில், 'சக்ஸஸ்' என்ற ஆங்கில வார்த்தையை உச்சரிப்பது தான் சிவாஜியின் முதல் ஷாட்டாக அமைந்தது. சிவாஜிக்குச் சினிமா உலகில் ஒரு நல்ல திருப்பத்தை ஏற்படுத்தி, ஒரு நிலையான அந்தஸ்தை அந்த வார்த்தை கொடுத்தது என்று அவர் கூறுகிறார். இதுவே அவருடைய வெற்றிக்கு முதல் அடியாக அமைந்தது. அவர் தன்னுடைய உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் திறமையால் மக்கள் மனதில் நடிகர் திலகமாக உயர்ந்தார்.
யாராலும் மறக்கமுடியாத படமான பராசக்தி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 250 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இன்றும் ரசிகர்கள் மனதில் தனை இடத்தை பிடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி சில தெலுங்கு, இந்தி மலையாள படங்களிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us