Arundhathi Serial: ப்ரோமோவிலேயே சீரியல் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது சன் டி.வி-யின் ‘அருந்ததி’ சீரியல்.
நாம் இருவர் நமக்கு இருவர்: என்ன 4 அடி கூட அடிச்சிருக்கலாம், இப்படி பேசிட்டியே தாமர…
கல்யாணம் பண்ணிக்கணும், குடும்பத்துடன் வாழணும், ஹனிமூனுக்குப் போகணும்னு மற்ற ஆவிகளில் இருந்து வித்தியாசப்பட்டு இருக்கிறது அருந்ததி ஆவி. தன்னை கெடுத்து கிணற்றில் தள்ளி சாகடித்த, ஈஸ்வரி குடும்பத்தை சேர்ந்த அந்த நபர் யார் என்று கண்டு பிடித்து பழி வாங்க வருகிறாள் அருந்ததி ஆவி. அப்போது தெய்வானையின் குணங்கள் பிடித்துப்போக, அவளை தனது தோழியாக்கி நடந்த உண்மைகளை சொல்லி, தனக்கு உதவி கேட்கிறாள்.
இதற்கு தெய்வானை ஒப்புதல் தெரிவித்தாலும், அவளின் கணவன் சண்முகம் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறான். இருப்பினும் தோழியின் நிலை கருதி, கனவனுக்கு தெரியாமல், அருந்ததியை தனது உடம்புக்குள் ஏற்றுக் கொள்கிறாள் தெய்வானை. சண்முகம் - தெய்வானை அந்நியோன்யமாக இருக்கும் சமயத்தில், தானும் இப்படியெல்லாம் இருக்க வேண்டுமென தோன்றுகிறது அருந்ததி பேய்க்கு.
இறுதியில் சண்முகத்தை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், அவன் தன்னை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் எனவும், அந்தத் திருமணத்தை நீ தான் நடத்தி வைக்க வேண்டும் எனவும் சண்முகத்தின் மனைவி, தெய்வானையிடமே கேட்கிறாள் அருந்ததி ஆவி.