sun tv serial: : சன் டிவியில் பாண்டவர் இல்லம் சீரியல், ஒளிபரப்பாக ஆரம்பித்த ஆறேழு மாதங்களுக்குள் கோவிட் 19 தொற்று லாக்டவுன் அமலுக்கு வந்தது. இதனால், இந்த சீரியல் சன் டிவியில் முதலில் இருந்து ஒளிபரப்பாகத் துவங்கியது.நாயகி சீரியலில் கண்மணியாக நடிக்கும் பாப்ரி கோஷ் இந்த சீரியலின் நாயகி. இவர் கொல்கத்தாவில் இருந்து மும்பை வழியாக சென்னை, ஹைதராபாத் வந்தவர்.
முதலில் புடவை, நகைக்கடை விளம்பரம் என்று சலிக்க சலிக்க நடித்துவிட்டு, பின்னர் தளபதியின் பைரவா படத்தில் கீர்த்தி சுரேஷ் தோழியாக நடித்ததன் மூலம் திரைத்துறையில் அறிமுகம் ஆனார். நாயகி சீரியலுக்கு ஆடிஷன் போனபோது கண்மணி கதாபாத்திரத்துக்கு ஏற்கனவே ஒருவர் தேர்வாகி இருந்தாராம். இருந்தாலும் சரளமாக தமிழ் பேச வரவில்லை என்றாலும் லொட லொடவென்று கட்டாயமாக தமிழில் பேசிக்கொண்டு இருந்த பாப்ரியின் முயற்சி இயக்குநர் குமரனுக்கு பிடித்துவிட, பாப்ரி நாயகி சீரியலில் கண்மணியானார்.
தடைகளைத் தாண்டி இந்தக் காதல் கைசேருமா?
பாண்டவர் இல்லம்
முழு வீடியோவிற்கு : https://t.co/OT205FTOWX#SunTV #PandavarIllam #PandavarIllamOnSunTV #SunTVThrowback pic.twitter.com/VF0LUUrbQh— Sun TV (@SunTV) July 7, 2020
பாண்டவர் இல்லம் சீரியலில் கயல் கேரக்டரில் நடித்து வருகிறார் பாப்ரி. சீரியலில் கயல், மல்லிகா இருவரும் பாண்டவர் இல்லத்துக்கு மருமகளாக வேண்டும் என்று தாத்தா வளர்ப்பு பேரன்களான குட்டி சுந்தரம், அன்பு சுந்தரம் இருவரையும் காதலிக்கிறார்கள். குட்டிக்கும், கயலுக்கும் எப்படியோ கல்யாணம் நடந்துவிட, கல்யாணம் கூடாது என்கிற தாத்தாவின் கொள்கையில் பிடிவாதமாக இருக்கும் அன்புவை மல்லிகாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
என்னதான் நடக்குது? இந்த ’அழகு’ சீரியலில்!
கடைசியாக வா மச்சான் ரெண்டு பேரும் செத்து போகலாம். நான் தயாராத்தான் வந்து இருக்கேன். செத்த பிணத்தை தாத்தா பிரிக்கவா முடியும்...வாழ உனக்கு தைரியம் இல்லைன்னா வா செத்து போகலாம்னு கூப்பிடறா மல்லிகா அன்பு வாயடைத்து நிற்கிறான். பாவம் மல்லிகாவும் கயலைப்போல பெண்தானே..காதல் பொங்கிப் பெருகாதா?
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.