சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் ரோஜா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
இன்றைய எபிஷோடில்…
அர்ஜூன் ரோஜாவை வாழ்த்த நா இங்க வரலை. உன்னோட சந்தோஷத்த கெடுக்குறவங்க ஒரு நாளும் நிம்மதியா இருக்க முடியாது என அனுவிடம் சொல்கிறார் டைகர் மாணிக்கம். ரிஷப்சன் ஆரம்பமானது. மேடையில் நிற்கும், அர்ஜூன் ரோஜாவுக்கு கிஃப்ட் கொடுக்கிறார் அன்னபூரணி பாட்டி. ஆனால் அர்ஜூனோ பாட்டி கிஃப்ட்டா கொடுத்த செயினை பழைய டிசைன் என ரோஜாவுக்கு போட மறுக்கிறான். நா புதுச வைர நெக்லஸ் வாங்கிருக்கேன் அத போட்டுவிடுறேன் என பாட்டியை அசிங்கப்படுகிறான் அர்ஜூன். கல்பனா பாட்டி கொடுத்ததை போட்டுவிட சொல்ல, அதற்கு அர்ஜூன், இவ்வளவு நாளா ரோஜாவ கொடுமைப்படுத்துனவங்க, திடீர்னு செயின் கொடுக்குறாங்கனா, இதுல எதோ வில்லங்கம் இருக்கு என சந்தேகப்படுறான்.
நா எதுவும் தப்பு பண்ணல என பாட்டி சொல்ல, பாட்டி மீது சந்தேகப்படல, அனு ஏதாவது கிரிமினல யோசிருப்பா என, செயினை கல்பனாவுக்கு போட்டுவிடுகிறான். பின்னர் ரோஜாவுக்கு, நெக்லஸ் மற்றும் புது டிரஸை கொடுத்து, ரெடியாகி வரச்சொல்கிறான் அர்ஜூன். புது புடவையில் அழகாக வரும் ரோஜாவை எல்லோரும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். பின்னர் ரோஜா டான்ஸ் ஆடுகிறாள். அர்ஜூனும் சேர்ந்து ஆடுகிறான். கல்பனா மற்றும் நிகழ்ச்சிக்கு வந்த எல்லோரும் சந்தோஷமாக டான்ஸ் ஆடுகின்றனர்.
இதை பார்க்க முடியாமல் அனு, அர்ஜூன் ரோஜாவின் முதலிரவு அறைக்கு செல்கிறாள். அங்கு ரிமோட்டை கையில் எடுத்து எல்லாம் சரியாக இருக்கிறதா என செக் பண்ணுகிறாள். அப்போது அங்கு அதிரடியாக, எண்ட்ரியாகிறான் அர்ஜூன். அவனைப் பார்த்ததும் அதிர்ச்சியாகிறாள் அனு. பின்னர் அர்ஜூன் அனுவிடம் இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க என கேட்க, டெக்ரெசன் எல்லாம் சரியா இருக்கானு பார்க்க வந்தேன் என சமாளிக்கிறாள். ஆனால் அதை நம்பாத அர்ஜூன், உன்னப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும் உண்மையை சொல்லு என கேட்கிறான். பின்னர் கையில் மறைத்து வைத்திருக்கும் ரிமோட்டைப் பற்றி கேட்க, ஒன்னுமில்லை என சொல்கிறாள் அனு. அனுவின் கழுத்தைப்பிடித்து என்ன பிளான் பண்ணிருக்க என கேட்கிறான் அர்ஜூன். அப்போது அங்கு வந்து ரோஜா, அர்ஜூனை கூப்பிட, அவனை கீழே தள்ளிவிட்டு ஓடுகிறாள் அனு. அனுவை பிடித்து ரிமோட்டை பறிக்க ரோஜா முயற்சிக்கையில், அவளையும் தள்ளிவிட்டு ரூமை விட்டு வெளியே ஒடி கதவை சாத்தி விடுகிறாள் அனு.
பின்னர், ரெண்டு பேரும் செத்து தொலைங்க என்றவாறே, ரிமோட்டை அழுத்துகிறாள். ரூமிற்குள் தீ பிடித்து எரிகிறது. அர்ஜூன் மற்றும் ரோஜா இருவரும் ஒருவரை ஒருவர் நெருங்க முடியாமல் தவிக்கின்றனர். ரோஜாவை தப்பித்து செல்ல அர்ஜூன் கூற, ரோஜா போக மறுக்கிறாள். ஆனால் அர்ஜூன், அனு எல்லாரையும் கொல்ல திட்டம் போட்டுருப்பா, அவ கையில் உள்ள ரிமோட்டை எடுக்கனும் என ரோஜாவை போகச் சொல்கிறான். ரோஜா வெளியில் வந்ததைப்பார்த்து கோபமடையும் அனு, அர்ஜூனாவது சாகட்டும் என ரிமோட்டை அழுத்த, கதவு மூடிக்கொள்கிறது. ரோஜா கதவை திறக்க முயற்சிக்கிறாள். முடியாததால் அனுவிடம் இருந்து ரிமோட்டைப் பறிக்க அனுவை துரத்துகிறாள். அனு மாடிக்கு செல்ல, அங்கேயும் துரத்தி செல்கிறாள் ரோஜா. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.