Advertisment

சூரரைப் போற்று, ஜெய் பீம், விக்ரம்: தமிழ் சினிமாவின் துணிச்சலின் புதிய முகம் சூர்யா

சூர்யாவுக்கு இன்று 47 வயதாகிறது, கடந்த இரண்டு ஆண்டுகளில் சூரரைப் போற்று நட்சத்திரம், செய்த சில தைரியமான தொழில் தேர்வுகளைப் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Suriya

Suriya is the new face of Tamil cinema’s bravery

மனோஜ் குமார் ஆர்

Advertisment

நடிகரும், தயாரிப்பாளருமான சூர்யா, இன்று 47 வயதை எட்டினார், கடந்த இரண்டு ஆண்டுகளில் சூர்யா தொட்டதெல்லாம் பொன்னாக மாறிவிடும் போலிருக்கிறது. சூர்யா தொழில்துறையின் எதிர்ப்பைத் துணிந்து, சூரரைப் போற்று என்ற அவரது பெரிய பட்ஜெட் திரைப்படத்தை OTT தளத்தில் வெளியிடுவதன் மூலம் முற்றிலும் எதிர்பாராத ஒன்றைச் செய்ததில் இருந்து இது தொடங்கியது,

சூரரைப் போற்று தியேட்டர் அனுபவத்திற்காக உருவாக்கப்பட்டது, 2020 நவம்பரில் படத்தை திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் தொற்றுநோய் உலகம் முழுவதையும் ஸ்தம்பிக்கச் செய்தது.

உலகெங்கிலும் தொற்றுநோய் கட்டுப்பாட்டை மீறியதை கருத்தில் கொண்டும், நம் வாழ்வில் இயல்பு நிலை எப்போது திரும்பும் என்று யாருக்கும் தெரியாது என்பதால், படத்தின் தயாரிப்பாளரான சூர்யா, படத்தை நேரடியாக ஸ்ட்ரீமிங்கிற்குக் கிடைக்கச் செய்யும் துணிச்சலான முடிவை எடுத்தார்.

அதனால் பாக்ஸ் ஆபிஸ் வியாபாரத்தில் பங்குதாரர்களிடமிருந்து எதிர்ப்பை சந்தித்தார். தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அவருக்கு தடை விதிப்பதாக மிரட்டியது. சூரரைப் போற்று படத்தை நேரடி OTT தளத்தில் வெளியிட்டால், எதிர்காலத்தில் சூர்யா நடித்த படங்கள் மற்றும் அவரது ஹோம் பேனரான 2டி என்டர்டெயின்மென்ட் மூலம் அவர் தயாரித்த படங்களைத் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று சங்கம் கூறியது. ஆனால், சூர்யா அசையவில்லை.

ஒரு வகையில், சூரரைப் போற்று நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு ஊரடங்கின் போது இருண்ட நாட்களில் மிகவும் தேவையான ஒரு பிரேக்கை வழங்கியது. சிம்ப்ளி ஃப்ளை: எ டெக்கான் ஒடிஸி என்ற சுய சரிதையை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் சுதா கொங்கரா இந்தப் படத்தை உருவாக்கினார். உழைக்கும் வர்க்கத்தினருக்கு குறைந்த கட்டண விமான டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்தி, இந்திய வணிக விமானத் துறையில் புரட்சியை ஏற்படுத்திய ஜி.ஆர்.கோபிநாத் எழுதிய நினைவுக் குறிப்பு இது.

வலுவான மாறனாக சூர்யாவின் ஸ்கிரீன் பிரசன்ஸ், அவரிடமிருந்து நம் கண்களை எடுக்க கடினமாக இருந்தது. அவர் தனது கதாபாத்திரத்தின் இளைய தோற்றத்தில் நடிக்க ஒரு தீவிர உடல் மாற்றத்திற்கு உட்பட்டார். ஒவ்வொரு பிரேமிலும் அவருடைய அர்ப்பணிப்பும், அவரது கலையின் மீதான பக்தியும் தெரிந்தது. மேலும் எதிர்பார்த்தபடி, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 68வது தேசிய திரைப்பட விருதுகளில், சூர்யா சிறந்த நடிகருக்கான தனது முதல் தேசிய திரைப்பட விருதை வென்றார்.

publive-image

சூரரைப் போற்றுவில் சூர்யா (புகைப்படம்: அமேசான் பிரைம் வீடியோ)

அது மட்டுமல்ல, சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த பின்னணி இசை உள்ளிட்ட பிரிவுகளிலும் சூரரைப் போற்று படம் விருதுகளைப் பெற்றது.

இந்த படத்துக்காக சூர்யா திரைத்துறையில் பல எதிர்ப்புகளை சந்தித்த போதிலும், அவர் படத்தின் மீது நம்பிக்கை வைத்து, அசாதாரண சூழ்நிலையில் தனது வாய்ப்புகளைப் பயன்படுத்தி வெற்றி பெற்றார்.

சூரரைப் போற்றுக்குப் பிறகு, சூர்யா மீண்டும் தனது அடுத்த தைரியமான நடவடிக்கையால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ஜெய் பீம் படத்தில் அதனை செய்தார். இயக்குநர் டி.ஜே.ஞானவேல், சூர்யாவிடம் தயாரிக்கும் திட்டமாக இந்தப் படத்தைக் கொடுத்திருந்தார்.

ஆனால், இப்படத்தில் வக்கீல் சந்துருவாக நடிக்க சூர்யா விருப்பம் தெரிவித்ததால் இயக்குனர் அதிர்ச்சியடைந்தார். ஏனெனில் படத்தின் முக்கிய கதாபாத்திரம் கவர்ச்சியாக இல்லை, மேலும் சிங்கம் போல ஹீரோவாக இல்லை. ஓய்வுபெற்ற நீதிபதி கே சந்துரு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தபோது அவர் கையாண்ட உண்மையான நீதிமன்ற வழக்குகளில் ஒன்றின் மூலம் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.

சந்துரு, சண்டை போட்டு பிரச்சனைகளை தீர்க்கும் ஹீரோ அல்ல. அவர் ஒவ்வொரு சமூகப் பிரச்சினைக்கும், நீதிமன்றத்தின் கதவைத் தட்டி எதிர்ப்புத் தெரிவித்து சாலை மறியல் செய்கிறார். நீதிமன்றங்களில் குறுக்கு விசாரணையின் போது சட்டப்பூர்வ புள்ளிகளைத் தவிர, அவர் பஞ்ச்லைன்களை பேசுவதில்லை. அவர் பொது போக்குவரத்தில் பயணம் செய்கிறார், ரயில்களில் பொது வகுப்பில் செல்கிறார். ஆனால், மீண்டும், 2021 ஆம் ஆண்டில் ஜெய் பீம் படம் அனைத்து தரப்பிலும் ஆதிக்கம் செலுத்தியதால் சூர்யாவின் துணிச்சலான நடவடிக்கை பலனளித்தது.

அதேநேரம் ஜெய் பீமுக்கு வரவேற்புடன், சில விமர்சனங்களும் வந்தன. வன்னியர் சங்கத்தினர் தங்கள் சமூகத்தை தரக்குறைவாக காட்டுவதாக கூறி படத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஞானவேல் தனது கவனக்குறைவை ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கேட்டார். ஆனால், பிரச்னை தீரவில்லை.

இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சமீபத்தில், இந்த வழக்கில் சூர்யா மற்றும் ஞானவேல் ஆகியோரை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால பாதுகாப்பு வழங்கியது.

publive-image

ஜெய் பீமில் சூர்யா.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த ஆஸ்கார் விருதுகளிலும் ஜெய் பீம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் மூலம் மீண்டும் பெரிய திரைக்கு திரும்பினார் சூர்யா. 2019 பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்ததாக கூறப்பட்டாலும், இப்படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்களும் வந்தன.

எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யா முழுக் கதாபாத்திரத்தில் நடிக்கத் தவறியதை, விக்ரமில் சுமார் 3 நிமிட தோற்றத்தில் செய்தார். போதைப்பொருள் கும்பலின் இரக்கமற்ற தலைவராக சூர்யா தனது நடிப்பால் திரையில் நெருப்பை ஏற்படுத்தினார். படத்தில் கமல்ஹாசன், ஃபகத் பாசில், விஜய் சேதுபதி போன்ற திறமையாளர்களின் இடத்தை சூர்யாவின் ரோலக்ஸ் திருடியது என்று சொன்னால் தவறில்லை.

publive-image

விக்ரமின் ஸ்டில் ஒன்றில் சூர்யா

திரையிலும், வெளியிலும் சூர்யாவை முன்மாதிரி மனிதனாக பார்த்து பழகிய பார்வையாளர்களுக்கு ரோலக்ஸ் ஒரு அதிர்ச்சியாக இருந்தது. ஹரியின் ஆறு படத்தில் கூட சூர்யா ஒரு அனுபவமிக்க ரவுடியாக நடித்தபோதும், அவரது தார்மீகம் அப்படியே இருந்தது. ஆனால், ரோலக்ஸ் ஒரு அசுரன்.

2023 இல் சூர்யா நமக்கு என்ன ஆச்சரியங்களை வைத்திருக்கிறார் என்பதைப் பார்க்க வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

National Award Surya Tamil Cinema Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment