Advertisment

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கு: நடிகை ரியா சக்ரபொர்த்தி போலீஸில் வாக்குமூலம் பதிவு

தோனியாக நடித்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கு தொடர்பாக நடிகை ரியா சக்ரபொர்த்தி தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய இன்று பாந்த்ரா காவல் நிலையம் சென்றதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கு: நடிகை ரியா சக்ரபொர்த்தி போலீஸில் வாக்குமூலம் பதிவு

தோனியாக நடித்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கு தொடர்பாக நடிகை ரியா சக்ரபொர்த்தி தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய இன்று பாந்த்ரா காவல் நிலையம் சென்றதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisment

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தோனியாக நடித்து பிரபலமான பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜூன் 14-ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு இறந்து கிடந்தார். சுஷாந்த் சிங் ராஜ்புத் மனச்சோர்வு காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக மும்பை பாந்த்ரா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் விசாரணை அதிகாரி நடிகை ரியா சக்ரபொர்த்தியை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துள்ளார். நடிகைர் ரியா சக்ரபொர்த்தி, இன்று காலை 11.30 மணியளவில் காவல் நிலையத்து வந்தார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் உடன் நெருகமாக இருந்த பாலிவுட் காஸ்டிங் இயக்குனர் முகேஷ் சப்ராவின் வாக்குமூலத்தை போலீசார் புதன்கிழமை பதிவு செய்தனர்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மனச்சோர்வுக்கு என்ன காரணம் என்ன பின்னணி என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுவரை, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டவர்களின் வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்துள்ளனர். இந்த வாக்குமூலம் பதிவு செய்யும் முறை என்பது இது போன்ற எல்லா வழக்குகளில் பொதுவான நடைமுறை என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக சில தயாரிப்பு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களையும் போலீசார் விசாரணைக்கு அழைக்கலாம் என்று கூறப்படுகிறது.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மனச்சோர்வுக்கான காரணம் பற்றி தனக்கும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் எதுவும் தெரியாது என்று அவரது தந்தை கே.கே.சிங் போலீசாரிடம் தெரிவித்தார்.

முன்னதாக, மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு காரணம் தொழில்முறை போட்டியா என்ற கோணத்திலும் மும்பை காவல்துறை விசாரிக்கும் என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment