‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா அடுத்ததாக இயக்கும் படம் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’. இயக்குநர்கள் மிஷ்கின் மற்றும் சுசீந்திரன், விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கல்பதரு பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. அடுத்த மாதம் ஷூட்டிங் போகும் இந்தப் படத்தின் பூஜை, இன்று நடைபெற்றது.
விக்ராந்த், சுசீந்திரன் இருவரும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். அவர்கள் பணியில் இருக்கும்போது ஒரு க்ரைம் நடக்கிறது. அதை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஷ்கின் நியமிக்கப்படுகிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.