Tamil actor's Wife commits suicide: ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான 'யாகாவாராயினும் நாகாக்க' திரைப்படத்தில், நடித்தவர் சித்தார்த் கோபிநாத். இவருக்கும் ஸ்மிரிதா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது.
நேற்றிரவு உணவகத்தில் இரவு உணவை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வீட்டிற்கு வந்தவுடன், அறையின் கதைவை உள்பக்கமாக தாழிட்டுக்கொண்டு படுத்துவிட்டார் ஸ்மிரிதா. ஆத்திரத்தில் சித்தார்த்தும் ஹாலிலேயே படுத்து உறங்கி விட்டார். காலையில் சித்தார்த் எழுந்து கதவை தட்டிய போது மனைவி ஸ்மிரிதா கதவை திறக்கவில்லை.
அதிர்ச்சியடைந்த சித்தார்த் கொடுத்த தகவலின் அடிப்படையில், காவல் துறையினர் வந்து கதவை உடைத்து பார்த்த போது, ஸ்மிரிதா தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு என்ன பிரச்சனை என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.