தமிழில் எழில் இயக்கிய மனங்கொத்தி பறவை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மியா. அதன்பிறகு போங்கடி நீங்களும் உங்க காதலும் படத்தில் நடித்துள்ள அவர் தற்போது, சமுத்திரக்கனியுடன் வெள்ளையானை படத்தில் நடித்து வருகிறார். கேரளாவை சேர்ந்த இவர் மலையாளத்தில் விஜய் சேதுபதி நடித்த மார்கோனி மத்தாய், சூப்பர் ஹிட்டான ஜோசப் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
கொரோனா காலத்தில் கால்சென்டரில் பணிபுரிந்து மக்களுக்கு சேவை செய்த இவர், மக்களிடம் பாராட்டை பெற்றார். இந்நிலையில், தற்போது இவருக்குத் திடீரென திருமணம் முடிவாகி உள்ளது. கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த கப்பலில் பணிபுரியும் சனூப் என்பவருடன் திருமணம் பேசி முடிக்கப் பட்டுள்ளது. இவர்கள் திருமணம் கண்ணூரில் நாளை காலை நடக்கிறது. தொடர்ந்து அங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நாளை மறுநாள் திருமண வரவேற்பு நடக்கிறது.
இவருக்கு இதில் திரையுலகினர் பலர் வாழத்து தெரிவித்து வருகிறன்றனர். மேலும் திருமணத்திற்கு பிறகும் ஆத்மியா தொடர்ந்து நடிக்க, சனூப் சம்மதித்துள்ள நிலையில், அவர் தொடர்ந்து நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு சமூக வலைதளங்களில் இப்போதே ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"