எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் நேற்று தொடங்கியது. வழக்கம்போல நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்துகொள்கின்றனர். இதில் தொடக்க நாளான நேற்று போட்டியாளர்கள் அறிமுகம் நடைபெற்றது.
இதில் கடந்த சீசன்களை போல் இல்லாமல், ரசிகர்களுக்கு பிரபலமில்லாத பல புதுமுகங்கள் எண்ட்ரி கொடுத்துள்ளனர். இமான் அண்ணாச்சி, பிரியங்கா, வருண், ராஜூ ஜெயமோகன் உள்ளிட்ட சிலர் மட்டுமே ரசிகர்களுக்கு பிரபலமானவர்களாக உள்ளனர். மேலும் இந்த சீசனில் திருநங்கைகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியாளர்கள் அறிமுகத்தில் கடைசியாக அறிமுகம் செய்யப்பட்ட நிரூப் நந்தகுமார் யார் என்பது குறித்து சமூக வலைதளங்களில் அதிகம் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. ஆறடிக்கு மேல் உயரம் கட்டுக்கோப்பான உடல் நீண்ட தலைமுடி என பார்க்கவே வித்தியசமாக இருக்கும் இவர், பிக்பாஸ் வீட்டில் எண்ட்ரி கொடுக்கும்போது, பிக் பாஸ் நிகழ்ச்சியை ரசிகராக பார்த்த நிரூப் இப்போ பிக் பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார் என கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார்.
ஸ்டார்ட் அப் கம்பெனி நடத்திக் கொண்டிருந்த நிரூப் பிக் பாஸ் வீட்டில் கலந்து கொள்ள வேண்டும் என விரும்பி முயற்சித்த நிலையில், தனக்கு இந்த முறை வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற முயற்சியில் பல ஆடிஷன்களுக்கு சென்றதாகவும், அவரது உயரம் காரணமாவே வாய்ப்பு கிடைக்காமல் போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளர். தொடர்ந்து பிக்பாஸ் மூலம் தனது சினிமா ஆசை நிறைவேறும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.
மேலும் நிரூப் நடிகை யாஷிகாவின் நெருங்கி நண்பர் என்றும் கூறப்படுகிறது. நடப்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில், இதுவரை வந்த போட்டியாளர்களில் நமிதா மாரிமுத்து 6.1 உயரம் கொண்டவராக இருந்த நிலையில், தற்போது அவரே அண்ணார்ந்து பார்க்கும் அளவிற்கு நிரூப் உள்ளே நுழைந்துள்ளார். நிரூப் உயரம் பிஸிகல் டாஸ்கில் அவருக்கு உதவும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil