Advertisment

ஆதித்ய கரிகாலன் முதல் குந்தவை வரை... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பொன்னியின் செல்வன்!

தமிழில் பிரம்மாண்ட வரலாற்று புதினங்களில் ஒன்றான் பொன்னியின் செல்வன் கதையை பல கட்ட முயற்சிகளுக்கு பின் இயக்குநர் மணிரத்னம் படமாக்கி வருகிறார்.

author-image
WebDesk
New Update
ஆதித்ய கரிகாலன் முதல் குந்தவை வரை... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பொன்னியின் செல்வன்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த படத்தை குறிப்பிட்டு நடிகை த்ரிஷாவை நடிகர் கார்த்தி கிண்டல் செய்துள்ள ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழில் பிரம்மாண்ட வரலாற்று புதினங்களில் ஒன்றான் பொன்னியின் செல்வன் கதையை பல கட்ட முயற்சிகளுக்கு பின் இயக்குநர் மணிரத்னம் படமாக்கி வருகிறார். 2 பாகங்களாக தயாராகி வரும் இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படிக்கும்போது பெரிய ஆர்வத்தை தூண்டும் இந்த புதினத்தை தற்போது திரைப்படமாக பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன், பிரபு, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசர் நாளை வெளியாக உள்ள நிலையில், கடந்த 4 நாட்களாக இந்த படத்தில் இடம்பெறும் கேரக்டர்களை படக்குழுவினர் அறிமுகப்படுத்தி வருகின்றனர்

அந்த வகையில் தற்போது இந்த படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்துள்ள நடிகை த்ரிஷாவின் கேரக்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் குந்தவையின் காதல் கணவன் வந்தியாதேவனாக நடிகர் கார்த்தி நடிக்கறார். ஏற்கனவே இந்த படத்தில் ஆதித்ய கரிகாலன் கேரக்டரில் நடித்து வரும் விக்ரம், வநந்தியதேவன் கேரக்டரில் நடித்து வரும் கார்த்தி, நந்தினி கேரக்டரில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய், ஆகிய கேரக்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ன.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் கதைப்படி, அண்ணன் ஆதித்த கரிகாலன் கொடுக்கும் ஓலையை அவரது தங்கையான குந்தவையிடம் வந்திய தேவன் கொடுக்க வேண்டும்.அந்த வகையில் தற்போது த்ரிஷாவின் குந்தவை கேரக்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த போஸ்டரை தனது ட்விட்டர் பதிவில் வெளியிள்ள வந்திய தேவன் கார்த்தி, இளவரசி… உங்க லொகேஷனை அனுப்புங்க… உங்கள் அண்ணனின் ஓலையை உங்களுக்கு அளிக்க வேண்டும் என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், படத்திற்கு ப்ரியாக ப்ரமோஷன் செய்தது போன்று ஆகிவிட்டது.  லைக்கா மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பொன்னியின் செல்வன் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment