Advertisment

யாருக்கும் தொந்தரவு இல்லாமல் சென்றுவிட்டார் : தாய் மரணம் குறித்து வடிவேலு உருக்கம்

Sarojini (87), mother of actor Vadivelu, who lived in Viraganoor, Madurai, passed away last night due to ill health. Film fraternity and public are mourning his death | மதுரை விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (87) உடல்நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினரும், பொதுமக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

author-image
WebDesk
New Update
யாருக்கும் தொந்தரவு இல்லாமல் சென்றுவிட்டார் : தாய் மரணம் குறித்து வடிவேலு உருக்கம்

Actor Vadivelu

Vadivelu's mother passed away due to ill health : நடிகர் வடிவேலுவின் தாயார் இன்று மரணமடைந்த நிலையில், திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் வடிவேலு. ரஜினி விஜயகாந்த் தொடங்கி தற்போது இளம் நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்து வரும் வடிவேலு சில வருட இடைவெளிக்கு பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்த சமீபத்தில் வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், வடிவேலு ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

ஆனாலும் வடிவேலு தற்போது லாரன்சுடன் சந்திரமுகி 2, உதயநிதி நடிப்பில் மாமன்னன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளதால், வடிவேலு மகிழ்ச்சியில் இருந்தார். அதேபோல் பொங்கல் பண்டிகையை தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய வடிவேலுக்கு இந்த நாள் சோகமான நாளாக அமைந்துவிட்டது.

வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) நேற்று இரவு (ஜனவரி 18) மரமடைந்தார். அவருக்கு வயது 87. இவரின் மரணம் வடிவேலு குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வடிவேலுவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ், எம்எல்ஏ ஜி.கே.மணி உள்ளிட்ட பலர் வடிவேலுவை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறிய நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, நேரில் சென்று வடிவேலுவின் தாயாருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல் நிலை சரியாகத்தான் இருந்தது. குணமாகிவிட்டது என்று நினைத்து ஊருக்கு போகலாம் என்று முடிவு செய்தபோது நெஞ்சுசளியால் இப்படி ஆகிவிட்டது. பொங்கல் கொண்டாட்டத்தின்போது ஒன்றும் இல்லாமல் இப்போது யாருக்கும் தொந்தரவு இல்லாமல் சென்றுவிட்டார் என்று தனது தாயார் குறித்து வடிவேலு உருக்கமாக பேசியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Vadivelu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment