தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராக இருந்து நடிகராக மாறியவர் விஷால். பிரபல தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் மகனான இவர், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவாராக வலம் வருகிறர். மேலும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் இரந்து வரும் விஷால் தற்போது லத்தி மற்றும் துப்பறிவாளன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் விஷாலுக்கும், அனிஷா என்பவருக்குமு் கடந்த 2019-ம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தொடர்ந்து அதே ஆண்டு அக்டோபர் மாதம் இவர்களது திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த திருமணம் நிச்சயதார்த்தத்துடன் நின்றுவிட்டதாக தகவல் வெளியானது. விஷாலின் நிச்சயதார்த்த புகைப்படத்த பார்த்த அவரின் ரசிகர்களுக்கு இந்த திருமணம் நின்றது பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.
அதே சமயம் திருமணம் நின்றது உறுதி செய்யப்பட்டவுடன் விஷால் தனது சமூகவலைதளங்களில் ஷெர் செய்த நிச்சயதார்த்த புகைப்படங்களை நீக்கிவிட்டார். அதே ஆண்டு ஆகஸ்ட் 29-ந் தேதி விஷாலின் பிறந்த நாளுக்காக அவருக்கு அனிஷா வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். ஆனால் இதற்கு முன்பாகவே தன்தை திருமணத்திற்கு கட்டாயப்படுத்த வேண்டாம் தோணும்போது நானே சொல்கிறேன் என்று விஷால் தனது தந்தையிடம் சொல்லியிருந்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விஷாலிடம், திருமணம் குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். இதில் அப்பா அம்மா பார்த்து செஞ்சு வைக்கிற கல்யாணம் செட் ஆகுமானு தெரியல... ஆனா உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன எஸ்.. நான் லவ் பண்றேன். அந்த பொண்ணு யாருனு கேட்ட அந்த கேள்விக்கு பொறுத்து பதில் சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் விஷால் மீண்டும் காதலில் விழுந்துள்ளது உறுதியாகியுள்ள நிலையில், விரைவில் அவருக்கு திருமணம் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“