Tamil Cinema Actress Vichithra Update In Tamil : தமிழ் சினிமாவில் தொடக்க காலத்தில் இருந்தே கவர்ச்சி நடிகைகளுககு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. இந்த கவர்ச்சி நடிகைகள் படங்களில் இருந்து விலகி இருந்தாலும் அவர்கள் நடித்த பழைய காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டாடி வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளததை உருவாக்கியவர் நடிகை விசித்ரா.
90-கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்த இவர் தமிழில் பொற்கொடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு சின்னத்தாயி, தலைவாசல், தேவர்மகன், எங்க முதலாளி, கிழக்கும் மேற்கும், சீறிவரும் காளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கவர்ச்சியுடன் சேர்த்து குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ள இவரை ரசிகர்கள் மடிப்பு அம்சா என்று வர்ண்ணிப்பது உண்டு.கடைசியாக தமிழில் 2002-ம் ஆண்டு வெளியான இரவு பாடகன் என்ற படத்தில் நடித்திருந்தார் அதன்பிறகு சினிமாவை விட்டு விலகினார்.
கவர்ச்சி மட்டுமல்லாது காமெடியிலும் கலக்கிய இவர், பொண்ணுவீட்டுக்காரன் படத்தில் கவுண்டமணியுடன் சேர்ந்து இவர் செய்யும் காமெடிகள் இன்றளவும் ரசிகர்கள் பலரும் ரசித்து வருகின்றனர். அதில் அந்த படத்தில் அவர் கவுண்டமணிக்கு ஆங்கிலம் கற்றுக்கொண்டுக்கும் சீன் எல்லம் சிரிப்பலையாக இருக்கும். கவர்ச்சி காமெடி குணச்சித்திரம் என்ற அனைத்து துறைகளிலும் பின்னி எடுத்த விசித்ரா வில்லன் துறையையும் விட்டுவைக்கவில்லை.
சத்யராஜ் முதன் முதலாக இயக்குநராகவும் 3 வேடங்களிலும் நடித்த வில்லாதி வில்லன் படத்தின் கதை இவரைச்சுற்றியே அமைக்கப்பட்டிருக்கும். அந்த படத்தில் எம்எல்ஏவாக நடித்திருந்த இவரை சத்யராஜ் எதிர்த்து நிற்கும் காட்சிகள் பரபரப்பாக பேசப்பட்டது. அதிரும் இவரின் கூடவே இருக்கும் ஒரு சத்யராஜை இவர் வேலை வாங்குவது அவர் பதிலுக்கு மனதிற்குள் திட்டிக்கொள்வதும் என பரபரப்பான காட்சிகள் இடம்பெற்றிருக்கும்
இந்த வில்லாதி வில்லன் படத்திற்கு பிறகு திருமணம் செய்துகொண்ட விசித்ரா அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமான சினிமாவில் இருந்து விலக தொடங்கினார். ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்பு குறைந்த போது முழுவதுமாக சினிமாவில் இருந்து விலகிக்கொண்டார். தற்போது பல வருடங்களாக காணாமல்போனநடிகைகளின் பட்டியலில் உள்ள இவர், கடந்த 2019-ம் ஆண்டு ராசாத்தி என்ற தொடரில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
திரைப்படங்களில் பல்வேறு கதாப்பாத்திர்ஙகளில் நடித்து ரசிகர்கள் மனதில் கனவுக்கன்னியாக இருந்த நடிகை விசித்ரா தற்போது சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றாலும், மலையாளத்தில் கல்யாணி என்ற தொடரில் நடித்து வருகிறார். மேலும் இணையத்திலும் ஆக்டீவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். சமீபத்தில் தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடிய விசித்ரா தனது பிறந்த நாள் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.