Advertisment

உடல் நலம் இல்லாத மனைவியை கவனிக்க கேரியரையே தியாகம் செய்த விக்ரமன்!

பூவே உனக்காக படம் விஜய்க்கும், சூர்யவம்சம் படம் சரத்குமாருக்கும், சூர்யாவுக்கு உன்னை நினைத்து, என அவர்களின் திரை வாழ்வில் முக்கிய படங்களை கொடுத்த பெருமை இயக்குனர் விக்ரமனுக்கு உண்டு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
உடல் நலம் இல்லாத மனைவியை கவனிக்க கேரியரையே தியாகம் செய்த விக்ரமன்!

தமிழ் சினிமாவில் ஃபீல்குட் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கொடுக்கும் வகையில் படங்களை இயக்கிய விக்ரமன் சமீப காலமாக படங்கள் இயக்குவதை தவிர்த்து வரும் இது குறித்து காரணத்தை தற்போது கூறியுள்ளார்.

Advertisment

1990-ம் ஆண்டு வெளியான புது வசந்தம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரமன். முதல் படத்திலேயே 2 தமிழக அரசின் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்திற்கான விருதை பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து, பெரும்புள்ளி கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம், பூவே உனக்காக சூர்ய வம்சம், உன்னை நினைத்து, வனத்தைப்போல உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்தார்.

இதில் பூவே உனக்காக படம் விஜய்க்கும், சூர்யவம்சம் படம் சரத்குமாருக்கும், சூர்யாவுக்கு உன்னை நினைத்து, என அவர்களின் திரை வாழ்வில் முக்கிய படங்களை கொடுத்த பெருமை இயக்குனர் விக்ரமனுக்கு உண்டு. மூத்த நடிகரான விஜயகாந்த் 2 வேடங்களில் நடித்து பெரிய வெற்றியை கொடுத்த படம் வானத்தை போல.

அதேபோல் மாதவனுக்கு ப்ரியமான தோழி என பெரிய வெற்றியை தேடி கொடுத்த இயக்குனர் விக்ரமன், கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு நினைத்தது யாரோ என்ற படத்தை இயக்கி இருந்தார் அதன்பிறகு படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்ட விக்ரமன் திடீரென சினிமாவை விட்டு விலக காரணம் என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த கேள்விகளுக்கு தற்போது விக்ரமன் பதில் அளித்துள்ளார்.

எனது மனைவிக்கு தற்போது உடல்நிலை சரியில்லை. அதனால்தான் நான் படங்கள் பண்ணாமல் அவரை அருகில் இருந்து பார்த்துக்கொள்கிறேன். அவரும் நீங்கள் போய் படம் பண்ணுங்க நர்ஸ் இருக்காங்க என்னை பார்த்துக்கொள்வார்கள் என்று சொல்கிறார். இருந்தாலும் எனக்கு ஒரு பயம் இருக்கு. யாரையும் நம்பி இப்படி விட்டு போக முடியாது.

வாரத்தில் ஒருநாள் கோவிலுக்கு போவேன். அது மட்டும்தான் என் மனைவியை நான் பிரியும் நேரம் மற்ற எல்லா நேரமும் நான் அவரோடு தான் இருக்கிறேன். மாலையில் வாக்கிங் செல்வேன் பக்கத்தில். இது மட்டும்தான் நான் வெளியில் செல்லும் நேரம். படம் பண்ணணும் தான் ஆனால் பையன் இப்போது நடக்க தொடங்கிவிட்டான். அதனால் 2 பேரும் வெளியில் சென்றுவிட்டால் வீட்டை யார் பார்த்துக்கொள்வார் என்ற கேள்வி இருக்கு.

முன்பு நான் ஷூட்டிங் போனபோது மனைவி எல்லாவற்றையும் கவினத்துக்கொண்டார். ஆனால் இப்போது யார் பார்த்துக்கொள்வார். பையனும் பிஸியாக இருக்கிறான். படம் ஏன் பண்ணாம இருக்கிறேன் என்பதற்கு இதெல்லாம் ஒரு காரணம் என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பல வெற்றிகளை கொடுத்த விக்ரமன் தனது மனைவிக்காக தனது கெரியரையே தியாகம் செய்துள்ளார். வாவ் தமிழா என்ற யூடியூப் சேனலில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment