Advertisment

போராளி படம் பார்த்து தொழில் தொடங்கிய இளைஞர்கள்... சமுத்திரக்கனி - சசிகுமார் கொடுத்த சர்ப்ரைஸ்

இயக்குனர் சமுத்திரக்கனி 5 வருட இடைவெளிக்கு பிறகு 2008-ம் ஆண்டு நாடோடிகள் படத்தின் மூலம் ரீ-என்டரி கொடுத்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
போராளி படம் பார்த்து தொழில் தொடங்கிய இளைஞர்கள்... சமுத்திரக்கனி - சசிகுமார் கொடுத்த சர்ப்ரைஸ்

தனது படத்தின் காட்சிகளை பார்த்து இளைஞர்கள் பிஸினஸ் தொடங்கியதாக நடிகரும் இயக்குனருமான சமுத்திரகனி கூறியுள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

2003-ம் ஆண்டு வெளியான உன்னை சரணடைந்தேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சமுத்திரக்கனி. அதனைத் தொடர்ந்து விஜயகாந்த் நடிப்பில் நெறஞ்ச மனசு என்ற படத்தை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் ஓரளவு வரவேற்பை பெற்றாலும் இதில் திருப்தி இல்லாத சமுத்திரக்கனி, அமீர் இயக்கிய பருத்தி வீரன் படத்தில் பணியாற்ற சென்றுவிட்டார்.

அதன்பிறகு 5 வருட இடைவெளிக்கு பிறகு 2008-ம் ஆண்டு நாடோடிகள் படத்தின் மூலம் ரீ-என்டரி கொடுத்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வசூலில் பெரிய வெற்றியை கொடுத்தது. அதன்பிறகு, போராளி, நிமிர்ந்து நில், அப்பா, தொண்டன், நாடோடிகள் 2, வினோதய சித்தம் உள்ளிட்ட படங்களை இயக்கிய சமுத்திரக்கனி தற்போது நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.

இந்நிலையில், இவர் இயக்கிய போராளி படத்தில் இடம்பெற்ற காட்சியை பார்த்து 11 பேர் கொண்ட இளைஞர் குழு பிஸினஸ் தொடங்கியதாக சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார். போராளி படத்தில் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் சசிகுமார், அல்லாரி நரேஷ் இருவரும் அங்கு வேலை செய்யும் சிலருடன் சேர்ந்து பிள்ளையார் கட்டண சர்வீஸ் என்ற பணியை தொடங்குவார்கள்.

ஆன்லைன் சர்வீஸ் போன்ற இதில் போன் செய்து ஆர்டர் கொடுத்தால் அந்த பொருட்களை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு டெலிவரி செய்வார்கள். இந்த காட்சி படத்தில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இதை பார்த்து சென்னை அருகம்பாக்கத்தை சேர்ந்த 11 இளைஞர்கள் இதுபோன்ற ஒரு தொழிலை தொடங்கியதாக சமுத்திரக்கனி கூறியுள்ளார்.

இந்த படத்தில் உங்களுக்கு தேவையான பொருட்களை இந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு ஆர்டர் செய்யலாம் டெலிவரி செய்தபின் பணம் கொடுத்தால் போதும் 2 ஆயிரம் ரூபாய்க்குள் மட்டும் என்று பல பெட்டிக்கடைகளில் இது போன்ற அட்டையை தொடங்கவிடுவார்கள். இதில் முதல் ஆர்டரே பிரச்சினை ஆகும். ஆனாலும் அடுத்தடுத்த ஆர்டர்கள் ஒருவரின் உயிரையே காப்பாற்றும் அளவுக்கு காட்சிகள் இருக்கும்.

இந்த படத்தை பார்த்து சென்னை அருகம்பாக்கத்தை சேர்ந்த படித்த டிகிரி முடித்த இளைஞர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இதே தொழிலை தொடங்கினர். குங்குமம் புத்தகத்தில் அவர்கள் பற்றிய செய்திகள் வெளியானது. போராளி படம் பார்த்துவிட்டுத்தான் இதை தொடங்கினோம் என்று அவர்கள் கூறியிருந்தனர்.

அதன்பிறகு சசிகுமாரும் நானும் சேர்ந்து நாங்கள் யார் என்று சொல்லாமல் அவர்களுக்கு கால் செய்து ஒரு பொக்கே ஆர்டர் செய்தோம். அவர்கள் டெலிவரி செய்ய வரும்போது நாங்கள் யார் என்று தெரிந்து ஷாக் ஆனார்கள். அதன்பிறகு அந்த பொக்கே அவர்களுக்கே பரிசாக கொடுத்தோம் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sasikumar Samuthirakani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment