கடந்த வாரம் வெளியான பொன்னியின் செலவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தயியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை நிகழ்த்தி வரும் நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் சேலை கலக்ஷென்ஸ் களைக்கட்ட தொடங்கியுள்ளது.
Advertisment
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் பொன்னியின் செல்வன். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 2 பாகங்களாக தயாராகியுள்ள இந்த படதத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வெளியானது. விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் வசூலில் சாதனை படைத்து வரும் பொன்னியின் செல்வன் 7 நாட்களில் ரூ 300 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் நாட்களில் பொன்னியின் செல்வன் பெரிய வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்திற்கு ப்ரமோஷன் செய்யும் விதமாக பொன்னியின் செல்வன் சேலை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு இன்றும் 2 வாரங்களே உள்ள நிலையில், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சேலை பெண்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. இந்த சேலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த கேரக்டர்களின் ஸ்டில்கள் மற்றும் படத்தின் டைட்டிலும் இடம்பெற்றுள்ளது. 2100 ரூபாய் முதல் இந்த சேலைகள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“