ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற முதன்மை கேரக்டரில் நடித்து வந்த நடிகை ரியா விஸ்வநாத் தற்போது தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீரியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முன்னணி சேனலான விஜய் டிவியில் பல சீரியல்கள் சீசன் 2-வாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ராஜா ராணி சீரியலின் சீசன் 2 பெரும் எதிர்பார்ப்புடன் அரங்கேறி வருகிறது
முதல் சீசனில் நாயகியாக நடித்த ஆல்யா மானசா இந்த சீரியலிலும் நாயகியாக நடித்து வந்த நிலையில் நடிகர் சித்து நாயகனாக நடித்து வருகிறார். இதில் வில்லி ரோலில விஜே அர்ச்சனா நடித்து வந்தார். இதனிடையே ஆல்யா மானசா தனது 2-வது பிரசவம் காரணமாக கடந்த ஆண்டு சீரியலில் இருந்து விலகினார்.
ஆல்யாவின் விலகல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அவருக்கு பதிலாக வந்த ரியா விஸ்வநாத் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்தார். இதனிடையே தற்போது ரியா விஸ்வநாத்தும் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாககிராம் பக்கத்தில் வெளியிட்டு வீடியோ பதிவில்,
நான் ராஜா ராணி சீரியல் வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. இதுவரைக்கும் நான் ஒரு லைவ் வீடியோ போட்டதில்லை. பட் இப்போ போடுறேனா அதற்கு காரணம் இனி ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக நான் இல்லை. வேற ஒருத்தங்க நடிக்கப் போகிறார்கள். இனி ரியா சந்தியாவாக ராஜா ராணி 2 வில் நடிக்கப் போவதில்லை என உருக்கமாக பேசியுள்ளார்.
ரியாவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ராஜா ராணி 2 சீரியல் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனிடையே ரியாவுக்கு பதிலாக அடுத்து சந்தியாவாக யார் நடிக்க போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ள நிலையில், ஜீ தமிழில் கோகுலத்தில் சீதை சீரியலில் நடித்து வந்த ஆஷா கவுடா தற்போது சந்தியா கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆல்யா மானசாவை தொடர்ந்து சந்தியாவாக நடித்து வந்த ரியாவும் தற்போது சீரியலில் இருந்து வெளியேறி இருப்பதால் சரவணன் கேரக்டருக்கு 3-வது மனைவி ரெடி என்று கூறி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil