Advertisment

10 வயது வித்தியாசம்: விஷ்ணுகாந்த்- சம்யுக்தா பிரிவு பின்னணி இதுதானா?

25 வயதுக்குள் கல்யாணம் பண்ணால் இந்த கல்யாணம் நிலைக்காது என்று 2-வது கல்யாணம் தான் நிலைக்கும் என்று என் ஜாதகத்தில் இருக்கிறது என சம்யுக்தா கூறியுள்ளார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Samyuktha Vishnukanth

சம்யுக்தா - விஷ்ணுகாந்த்

சீரியல் ஜோடி சம்யுக்தா – விஷ்ணுகாந்த் திருமணாகி 2 மாதங்களில் பிரிந்த நிலையில், இருவரும் சமூக வலைதளங்களில் மாறி மாறி குற்றச்சாட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisment

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சிப்பிக்குள் முத்து’ சீரியலில் ஜோடியாக நடித்த விஷ்ணுகாந்த் சம்யுக்தா இருவரும் காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர். விஷ்ணு-சம்யுக்தா திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் நேரில் வந்து வாழ்த்திச் சென்றனர்.

இதனிடையே திருமணம் நடந்து 2 மாதங்களில் விஷ்ணு – சம்யுக்தா இருவரும் பிரிந்து விட்டதாக தகவல் வெளியான நிலையில், திருமணத்தின் போது ஜோடியாக எடுத்துப் பகிர்ந்திருந்த புகைப்படங்களையும் இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களிலிருந்து நீக்கிவிட்டனர்.

இது குறித்து இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குறை கூறி வரும் நிலையில், நடிகை சம்யுக்தா வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், விஷ்ணுகாந்த் கொடுத்த அத்தனை இன்டர்வியூகளிலும் நான் அஃபேரில் இருந்ததாக கூறியுள்ளார். இது பற்றி கேட்டபோது அவர் இன்டர்வியூவில் பதில் சொல்ல மறுத்து டாப்பிக்கை மாற்றிவிட்டார். அந்த அஃபேர் என்ற வார்த்தைக்கு எனக்கு மீனிங் தெரிந்தாக வேண்டும் விஷ்ணுகாந்த்.

அதன்பிறகு ஒரு ப்ரண்டுகிட்ட பேசிட்டு இருந்தாங்க. நான் ப்ரண்டு முக்கியமாக நான் முக்கியமாக என்று கேட்டேன். அதற்கு ப்ரண்டு தான் முக்கியம் என்று நான் சொன்னதாக சொல்லியிருக்கிறார். ஆனால் நான் இரண்டு பேரும் தான் முக்கியம் என்று சொன்னேன். எங்கள் காதல் குறித்து நான் எனது பிறந்த நாள் அன்று தான் வெளிப்படுத்தினேன். அதையும் அவரிடம் கேட்டுதான் வெளிப்படுத்தினேன்.

இந்த காதல் குறித்து வெளிப்படுத்துவதற்கு முன்பு என் ப்ரண்டு என்னை கோவிலில் சந்தித்து சத்தியமாக நீ நல்லவே இருக்க மாட்ட. இவனை நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட தினமும் அழுதுட்டுதான் இருப்பா இந்த லைஃப் உனக்கு செட் ஆகாது என்று சொன்னாள். மேலும் அவருக்கும் எனக்கும் 10 வயது வித்தியாசம. அவருக்கு 32 எனக்கு 22 வயது. 10 வயது வித்தியாசம் என்றாலும் நான் அவருக்கு ஓகே சொன்னேன். ஏன்னா அவர் கொஞ்சம் நல்லவரா இருக்கிறார். வயது வித்தியாசம் பெரிய விஷயம் இல்ல. நல்லவரா இருந்தா போதும் என்றுதான் நினைத்தேன்.

ஆனால் நான் என் காதலை வெளிப்படுத்திய பிறகுதான் தெரிந்தது இவரது உண்மையாக சுயரூபம் என்ன என்று. அதன்பிறகு நான் எதாவது சொன்னால் இது செட் ஆகாது உனக்கு ப்ரேக்கப் ஆகிவிட்ட என்று இன்ஸ்டாவில் போடு என்று சொல்லுவார். இந்த மிரட்டலுக்கு எல்லாம் பயந்து நான் அவரது காலில் விழுவேன். பண்ணாத தப்புக்கு நான் சாரி கேட்டேன். விஷயத்தை செய்ய நான் ஒத்துக்கவில்லை என்றால் ப்ரேக்கப் என்று சொல்லி என்னை ஒத்துக்க வைப்பார்.

கல்யாணம் கூட கட்டாயப்படுத்தி தான் செய்தார். என் ஜாதகத்தில் இருக்கிறது. 25 வயதுக்குள் கல்யாணம் பண்ணால் இந்த கல்யாணம் நிலைக்காது என்று. 2-வது கல்யாணம் தான் நிலைக்கும் என்று என் ஜாதகத்தில் இருக்கிறது. இதை அவரிடம் சொன்னபோது ஜாதகம் எனக்கு நம்பிக்கை இல்லை. சம்யுக்தா இல்லை என்றால் நான் செத்துவிடுவேன் என்று என் அம்மாவிடம் சொல்லி கல்யாணதிற்கு சம்மதம் வாங்கிவிட்டார். 8 மாத பழக்கத்தில் என் மகளை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்று அம்மா கேட்டார்.

இல்லை நான் சம்யுக்தாவை நன்றாக பார்த்துக்கொள்வேன். என்னுடன் அவரை பழக விடுங்கள் என்று சொன்னார். அதன்பிறகு கொஞ்சநாள் போகட்டும் பார்த்துக்கொள்வோம் என்று என் அம்மா சொன்னார் இதுதான் நடந்தது என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment