Advertisment

இயக்குநருடன் மோதல்... பறிபோன சீரியல் வாய்ப்பு... போராடி சாதித்த சத்யா சீரியல் நாயகி

Tamil Serial News : கேரளாவை சேர்ந்த ஆயிஷா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்

author-image
WebDesk
New Update
இயக்குநருடன் மோதல்... பறிபோன சீரியல் வாய்ப்பு... போராடி சாதித்த சத்யா சீரியல் நாயகி

zee Tamil Sathya Serial Actress Ayesha Life story : ரசிகர்கள் மத்தியில் திரைப்படங்களை விட சின்னத்திரை சீரியல்களே அதிக வரவேற்பை பெற்றுவருகிறது. அது மட்டுமல்லாமல் சீரியலில் நடித்து வரும் நடிகைகளும் தங்களின் நடிப்புத்தறமையினால் ரசிகர்களிடம் பிரபலமாகி வருகி்றனர். அந்த வகையில் பிரபலமான நடிகைகள் ஒரு சீரியலை விட்டு வெளியேறும்போது சமூக வலைதங்களில் ரசிகர்கள் கவலையுடன் கருத்துக்களை பதிவிடுவது உண்டு. ஒரு சில நடிகைகள் திரைப்பட வாய்ப்பை கருத்தில் கொண்டு சீரியலில் இருந்து விலகுவதும் நடந்து வருகிறது.

Advertisment

எவ்வளவுதான் சீரியல் நடிகைகள் அந்த சீரியலில் இருந்து வெளியேறினாலும் அவர்களுக்கு உண்டான ரசிகர்கள் பட்டாளம் குறைவதில்லை. இந்த நிலையில் பல்வேறு நடிகைகள் தமிழ்  சீரியலில் வலம் வந்துகொண்டிருக்கின்றனர். ஆனால் தற்போது அவரது வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்தாலும் சீரியலுக்கு வருவதற்கு முன் பெரும்பாலான நடிகைகள் தங்களது வாழ்வில் பல போராட்டங்களை சந்தித்துள்ளது மறுக்க முடியாத உண்மைஃ அந்த வகையில் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் வெற்றிக்கொடி நாட்டியவர் தான் நடிகை ஆயிஷா.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சத்யா சீரியலின் மூலம் புகழ் பெற்றுள்ள இவர், இந்த சீரியல் மூலம், தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். கேரளாவை சேர்ந்த ஆயிஷா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். ஆனால் இந்த சீரியலில் நடிக்கும்போதே இயக்குநருடன் மோதல் ஏற்பட்டதால், அதில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதன்பிறகு வாய்ப்புகள் கிடைக்காத இவர், பல இயக்குநர்கள் ரிஜக்ட் செய்துள்ளனர். இதனால்மன உளைச்சலுக்கு ஆளான இவருக்கு சன்டிவி தனது மாயா தொடரில் வாய்ப்பு கொடுத்துள்ளது. அந்த தொடரில் தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தாக அவருக்கு பெரிய ஜாக்பாட் என்று சொல்லப்படும் சத்யா சீரியல் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த சீரியலில் ரவுடி பேபியாக டாம்பாய் கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதை வென்றுள்ளார்.

இந்த சீரியல் மூலம் பெரும் பிரபலமான இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது. இப்போதுவரை பல்வேறு பிரச்சனைகள் இவரை பின் தொடர்ந்தாலும், அதை பொருட்படுத்தாமல் தனது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அதுமட்டுமில்லை நடிப்பு வரல, வேஸ்ட், ஒல்லியா இருக்க பல கேலி கிண்டல்களை சந்தித்த ஆயிஷா பலமுறை நடுரோட்டில் நின்று தனது நிலையை நினைத்து புலம்பியுள்ளார். ஆனாலும் மனம் தளராத அவர் தொடர் முயற்சிகளால் இந்த நிலையை எட்டியுள்ளார். இது உண்மையிலேயே அவரது உழைப்புக்கு கிடைத்த அங்கிகாரம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sathya Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment