பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள பாகியலட்சுமி சீரியலில் மனைவிக்கு தெரியாமல் முன்னாள் காதலியுடன் பழகி வந்த கோபி தற்போது வீட்டில் வசமாக சிக்கிக்கொண்டார்.
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்யலட்சுமி. குடும்ப பெண் ஒருவரின் வாழ்ககை போராட்டத்தை மையப்படுத்திய இந்த சீரியல் தொடக்கத்தில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் பாக்யா கேரக்டரில் நடித்து வரும் சுஜித்ராவின் இயல்பான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்தியதால் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகிறது.
3 பிள்ளைகளுக்கு அப்பாவான கோபி, தனது மனைவியை பிடிக்காமல் முன்னாள் காதலியுடன் பழகி அவரை திருமணம் செய்துகொள்வதற்காக முயற்சி செய்கிறார் ஏற்கனவே திருமணமான முன்னாள் காதலி ராதிகாவுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில், கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற ராதிகா கோபியை திருமணம் செய்ய சம்மதிக்கிறாள்.
இதற்கு ராதிகாவின் அம்மாவுக்கு உறுதுணையாக இருக்க கோபி, பாக்யாவிடம் இருந்து விவாகரத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதில் பாக்யாவும் ராதிகாவும் நெருங்கிய நண்பர்கள் என்பது கோபிக்கு மட்டுமே தெரியும்.கோபி பாக்யாவின் கணவர் என்று ராதிகாவுக்கோ, கோபி ராதிகாவிடம் தான் பழக்குகிறார் என்பது பாக்யாவுக்கோ தெரியாது.
இதனிடையே மகாசங்கமத்திற்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் ராதிகாவிடம் கோபியை பற்றி சொல்ல, ராதிகா ஒரு கட்டத்தில பாக்யாதான் கோபியின் மனைவி என்று தெரிந்துகொள்கிறார். இதனால் அவர் கோபியை வெறுத்தாலும், ராதிகாவின் அம்மா கோபியை ராதிகாவுடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் இறங்குகிறார்.
இந்நிலையில், கடந்த வாரம் கோபி வீட்டிற்கு வந்து ராதிகாவின் கணவன் சத்தம் போட்டுவிட்டு போக அப்போது கோபி பழக்குவது ராதிகாவிடம் தான் என்பத கோபி மகன் எழில் தெரிந்துகொள்கிறான். இதனையடுத்து விபத்தில் சிக்கும் கோபி ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகா அங்கு வைஃப் என்று சொல்லி ராதிகா பாக்யா இருவரின் நம்பரையும் கொடுக்கிறான் கோபி.
ஆனால பாக்யாவுக்கு முன்பே ஹாஸ்பிடலுக்கு வரும் ராதிகா பில் அனைத்தையும் செட்டில்மெண்ட செய்துவிட்டு கோபியை பார்க்க செல்கிறாள். இதை பார்த்து அதிர்ச்சியாகும் பாக்யா கோபியை பார்க்க செல்லும்போது அங்கு கோபி ராதிகாவுடன் நீ இல்லனா நா இல்லை என்று சொல்லி டைலாக் பேசிக்கொண்டிருக்கிறார்.
இதை பார்த்த அதிர்ச்சியில் கோபியை பார்க்காமல் திரும்பிவிடும் பாக்யா கோபி வீட்டுக்கு வந்ததும் கேள்வி மேல் கேள்வி கேட்டு கோபிக்கு அதிர்ச்சியை கொடுக்கிறார். இதனால் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கோபி விழிக்க, அவனது அம்மா ஈஸ்வரி கோபி அப்படிப்பட்டவன் இல்லை என்று சொல்லி சப்போர்ட் வாங்குகிறாள்.
ஆனால் எழில் இல்ல பாட்டி அப்பாவுக்கு அப்படி ஒரு தொடர்பு இருப்பது எனக்கே தெரியம் என்று சொல்லி மீண்டும் ஷாக் கொடுக்கிறாள் அத்துடன் நேற்றைய எபிசோடு முடிந்துவிட்ட நிலையில் இன்று கோபிக்கு அனைத்தையும் செய்தது ராதிகாதான் என்பதை பாக்யா தனது வீட்டு ஆட்களுக்கு சொல்லிவிடுவாள். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக விஜய் டிவி சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் பெரிய சறுக்கலை சந்தித்து வரும் நிலையில், தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் இந்த அதிரடி திருப்பம் ரேட்டிங்கை கனிசமாக உயர்த்த வழிவகுக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.