Advertisment

இனியா தோழி தற்கொலை... கண்டன்ட் கிடைச்சாச்சு... புது ரூட்டில் பாக்கியலட்சுமி சீரியல்!

Tamil Serial Update : சமீப ஆண்டுகளாக பள்ளி மாணவிகளை குறி வைத்து பாலியல்தொல்லை கொடுக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருவது குறித்து விழிப்புணர்வு

author-image
WebDesk
New Update
இனியா தோழி தற்கொலை... கண்டன்ட் கிடைச்சாச்சு... புது ரூட்டில் பாக்கியலட்சுமி சீரியல்!

Tamil Serial Baakiyalakshmi Update ; விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களிலர் ஒனறான பாக்யலட்சுமி சீரியல் தற்போது பெரும் பரபரப்பையும் விறுவிப்பையும் ஏற்படுத்தி வருகிறது. தொடக்கத்தில் சற்று சரிவை சந்தித்த இந்த சீரியல் அதன்பிறகு ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம்தை பெற்றுளளது. இதற்கு முக்கிய காரணம் விறுவிறுப்பாக திரைக்கதையும் பாக்யலட்சுமி கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் சுசித்ராவின் அப்பாவித்தனமான நடிப்பும்தான் என்று சொல்லலாம்.

Advertisment

இந்த சீரியலில் தொடக்கத்தில் இருந்து கோபி - ராதிகாவின் தொடர்புகளை மையப்படுத்தி திரைக்கதை அமைச்சப்பட்டு ஒளிபரப்பாகி வந்த நிலையில், சமீபத்தில் எபிசோடுகள் சமூகத்தில ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில எபிசோடுகளுக்கு முன்பு பாக்யாவின் வங்கிகணக்கில் இருந்து பணம் பறிபோன காட்சியை இதற்கு முக்கிய உதாரணமாக கூறலாம்.

அதனைத் தொடர்ந்து தற்போதைய எபிசோட்டில் எழில் அமிர்தா காதலை வைத்து விதவை மறுமணம் என்ற சமூக நோக்கத்தை கருவாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சமீப ஆண்டுகளாக பள்ளி மாணவிகளை குறி வைத்து பாலியல்தொல்லை கொடுக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் படித்து வரும் இனியாவின் தோழி நிகிதாவிற்கு ஆசிரியர் ஒருவர் ஆபாசமாக மெசேஜ் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நிகிதா இது குறித்து இனியாவிடம் சொல்ல, இனியா தனது தோழிகள் 4 பேருடன் பிரின்சிபாலிடம் கம்ப்லைண்ட் செய்ய போகிறார். ஆனால் இதை தெரிந்துகொண்ட அந்த ஆசிரியர் விசாரணை செய்வது போல் மிரட்டி அனுப்பி விடுகிறார்.

கம்ப்லைண்ட் செய்ய போனதால், ஆத்திரமடையும் அந்த ஆசிரியர், மீண்டும் நிகிதாவிற்கு பாலியல் தொல்லை கொடுக்க மன அழுத்தத்திற்கு ஆளாகும் நிதிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்கிறாள். இந்த விஷயம் இனியாவிற்கு தெரியவர அவர் தனது வீட்டில் உள்ளவர்களிடம் நடந்ததை சொல்லி கதறி அழுகிறார். தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் இந்த காட்கள் உள்ளது.

இதன்பிறகு இனியா அந்த ஆசிரியரை பற்றிய உண்மையை சொல்லி தண்டனை வாங்கி கொடுப்பாரா இந்த சம்பவம் குறித்து பாக்யா கோபி என்ன செய்ய போகிறார்கள் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment