Advertisment

Tamil Serial Rating : பாக்யவின் பேச்சுக்கு கை தட்டிய கோபி... பரபரப்பின் உச்சத்தில் பாக்யலட்சுமி சீரியல்

Tamil Serial Update : தற்போது சமையல் ஆர்டர், பள்ளியில் பரிசு, சுய தொழில், இப்போது பள்ளி பிரச்சினை அனைத்தையும் வைத்து பார்க்கும்போது பாக்யாவுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கிறது.

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : பாக்யவின் பேச்சுக்கு கை தட்டிய கோபி... பரபரப்பின் உச்சத்தில் பாக்யலட்சுமி சீரியல்

Tamil Serial Baakiyalakshmi Rating : குடும்ப பின்னணியில் இருந்து சற்று விலகி சமுக விழிப்புணர்வை நோக்கி நகரும் சீரியல் பாக்யலட்சுமி. ஏற்கனவே மோசடி ஆசாமிகளின் வங்கி கொள்ளை, ஜாதி மறுப்பு திருமணம் (செழியன் - ஜெனி) விதவை மறுமணம் (எழில் - அமிர்தா) என சமூக அக்கறை கொண்ட காட்சிகள் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் தற்போது பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர்கள் அத்துமீறும் நடவடிக்கையை சுட்டிக்காட்டும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

பாக்யா குடும்பத்தின் கடைக்குட்டி இனியா படிக்கும் பள்ளியில் அவளது தோழிக்கு ஒரு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுக்கிறார். இது குறித்து தெரிந்துகொள்ளும் இனியா அடுத்து பிரினஸ்பாலிடம் சொல்ல போக அதை அந்த ஆசிரியர் தடுத்து விடுகிறார். இதனைத் தொடர்ந்து கம்லைணட் கொடுக்க சென்ற ஆத்திரத்தில் அந்த ஆசிரியர் தனது மாணவிக்கு பாலியல் தொடர்பான செய்திகளை அனுப்பி வருகிறார்.

இதனால் மன உலைச்சலுக்கு ஆளாகும் மாணவி தற்கொலை முயற்சி செய்கிறார். இது ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தான் நிகழ்ந்தது என்று தெரிந்து பள்ளி தலைமை மாணவியின் தற்கொலை முயற்சிக்கு அவர்களது பெற்றோர்கள்தான் காரணம் என்று சொல்லிவிடுகின்றனர். ஆனால் உண்மை என்னவென்று உணரும் பாக்ய அந்த மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று மீடியாவிடம் உண்மையை சொல்லிவிடுகிறார்.

அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில். அடுத்தடுத்த எபிசோடுகளுக்கான ப்ரமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் தற்கொலை முயற்சி செய்த மாணவி உயிர் பிழைத்து தனது இந்த நிலைக்கு காரணம் ஆசிரியர்தான் என்று சொல்லிவிடுகிறார். இதனை தொடர்ந்து பள்ளியில் இருந்த ஆசிரியர் கைது செய்யப்படுகிறார். இது குறித்து மாணவர்கள் மத்தியில் உரையாடும் பாக்யா யார் எது சொன்னாலும் அதை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்.

இதை கேட்டு கோபி, இனியா என பலரும் கைதட்ட சில பள்ளி மாணவிகள் பாக்யாவை அன்போடு கட்டிப்பிடித்துக்கொள்கின்றனர். அத்துடன் இந்த ப்ரமோ முடிவடைகிறது. இந்த சீரியலில் மாணவி தற்கொலை செய்துகொள்ளும் காட்சிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ப்ரமோ குறித்து கருத்து தெரிவித்துள்ள ரசிகர்களில் ஒருவர் இந்த சீரியலின் ப்ரமோ பார்த்து முதல்முறையாக பெருமைபடுகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் பலரும் பாக்யாவின் நடிப்புக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த ப்ரமோ தற்போது சீரியல் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், பாக்யாவின் பேச்சை கேட்டு கோபியே கை தட்டும் நிலைக்கு வந்துள்ளார். இதனால் அடுத்து வீட்டில் பாக்யாவுக்கான மரியாதை எப்படி இருக்கும், கோபி பாக்யாவை மதிப்பாரா அல்லது பழையபடி மட்டம் தட்டுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க தப்பு செய்தவரை போலீசில் பிடித்து கொடுத்த பாக்யா அடுத்து கோபியின் தவறு தெரிந்தால் என்ன செய்வார் என்றும் கேட்டு வருகின்றனர்.

தற்போது சமூக விழிப்புணர்வை கையில் எடுத்து பெரும் பரபரப்பு உள்ளாகியுள்ள இந்த சீரியல் அடுத்தடுத்து வரும் எபிசோடுகள் எப்படி இருக்கப்போகிறது என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தொடக்கத்தில் பாக்யாவின் கேரக்டருக்கு யாருமே மதிப்பளிக்காத படி வந்த காட்சிகள் ரசிகர்களுக்கு ஒரு வித ஆதங்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது சமையல் ஆர்டர், பள்ளியில் பரிசு, சுய தொழில், இப்போது பள்ளி பிரச்சினை அனைத்தையும் வைத்து பார்க்கும்போது பாக்யாவுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கிறது.

பாக்யாவுக்கு வீட்டில் மதிப்பில்லாதபோது கோபி அவரிம் சரியாக பேசிக்கொண்டிருந்தார். தற்போது பாக்யா வரும் ஒவ்வொரு காட்சியிலும் அவருக்காக முக்கியத்தும் அதிகரித்து சமூகத்தில் பிரபலமாக நபராக காட்டப்படுகிறது. அதே வேலையில் பாக்யா பிரபலமாகும் ஒவ்வொரு காட்சியிலும் கோபி அவரை விட ராதிகாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல காட்டப்படுகிறது. இதன் காரணமாக விரைவில் கோபி – ராதிகா குறித்து பாக்யாவுக்கு தெரியவந்து பரபரப்பை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment