Advertisment

Vijay TV Serial : போட்டி முடியும் முன்பே பரிசு பெற்ற பாக்யா... இனியா ஷாக்...

Tamil Serial Update : பாக்யலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்

author-image
WebDesk
New Update
Vijay TV Serial : போட்டி முடியும் முன்பே பரிசு பெற்ற பாக்யா... இனியா ஷாக்...

Baakiyalakshmi Serial Episode Update : மேடைக்கு அழைக்கப்படும் பாக்யாவிடம் நீங்க என்ன பண்ண போறீங்க என என கேட்கின்றனர். அப்போது பாக்யத தயங்கி நிற்க, அம்மா சொதப்ப போறாங்க என்று இனியா மனதிற்குள் நினைத்துகொள்கிறாள். ஆனால் பாக்ய தான் டான்ஸ் சொல்கிறாள். அதை கேட்டு இனிய ஷாக் ஆக உங்க அம்மா டான்ஸ் ஆட போறாங்களா இனியா என்று அவளது தோழி கேட்கிறாள்,

Advertisment

அப்போது டாஸ் ஆட தொடங்கும் பாக்யா பூ பூக்கும் ஓசை பாடலுக்கு அனைவரும் வியக்கும் அளவிற்கு டான்ஸ் ஆடி முடிகிறாள். இந்த டான்ஸ் பார்த்து அனைவரும் கைத்தட்ட, போட்டியாளர்கள் அனைவரும் சூப்பரா ஆடுனீங்க என சொல்லி பாராட்டுகின்றனர். அதன்பின்னர் இறுதிச்சுற்று போட்டி முடிவு அறிவிக்கப்படுகிறது. 10 பேரில், 5 பேர் தேர்வு செய்யப்படும் நிலையில், 5-வது ஆளாக பாக்யா பெயர் அறிவிக்கப்படுகிறது.

அதன்பிறகு இறுதிச்சுற்றாக குவிஸ் போட்டி நடைபெறுகிறது. அதில் பொதுஅறிவு தொடர்பாக கேள்வி கேட்பதால், அதில் பாக்யா கண்டிப்பாக தோல்வியடைந்து விடுவாள் என்று அப்போது பாக்யாவிடம் ஒரு நல்ல அம்மா எப்படி இருக்க வேண்டும் என்று கேட்கும்போது, தனக்காக ஒரு வேலையையும் செய்துகொண்டு தனது பிள்ளைகளையும், கவனித்துகொள்கிற அனைத்து அம்மாக்களும் சிறந்த அம்மாக்கள் தான் என்று என்று சொலகிறாள்.

மேலும் நமக்காக ஒரு வேலை செய்யும் போதுதான் ஒரு மனநிம்மதி ஏற்படும். முதலில் நான் வேலை ஏதும் செய்யாமல் இருந்தபோது என்னைப்பற்றி சொல்ல கூச்சப்பட்ட என் பொண்ணு இனியா, இப்போ என் வேலை பற்றி சொல்ல பெருமைப்படுறா. என் பொண்ணுக்கு நான் இப்படி இருக்குறதான் புடிச்சிருக்கு என்று சொல்கிறாள்

அவள் பேசுவதை கேட்டு இனியாவும் மிகுந்த சந்தோசம் அடைகிறாள். அதனை தொடர்ந்து மற்ற போட்டியாளர்களிடமும் கேள்விகள் கேட்கப்படுகிறது. போட்டி முடிந்தவுடன், பாக்யாவை அழைத்து கை குலுக்கி சூப்பரா பேசுன அம்மா என வாழ்த்துகிறாள் இனியா. மேலும் எல்லாரும் போட்டி ரிசல்ட் என்ன்னு தெரிஞ்சிக்க பரபரப்பா இருக்காங்க நீ என்னமா ஜாலியா இருக்க என்று கேட்கிறாள்.

அதற்கு பாக்யா நான் இங்க பரிசு வாங்க வரவில்லை. நீ கூப்பிட்டதாலதான் கலந்துகிட்டேன் பரிசு பற்றி எனக்கு கவலையில்லை என்று சொல்கிறாள். மேலும் பாக்யா எனக்கு கிடைக்க வேண்டிய பரிசு ஏற்கனவே கிடைச்சுருச்சு இனியா என கூறுகிறாள். அப்போது என்னமா சொல்ற என்று இனியா கேட்க, என்னை கிண்டல் பண்ண நீயே, எனக்கு கை கொடுத்து பாட்டி இருக்க. இதுக்கு மேல என்ன பரிசு வேண்டும் என பாக்யா சொல்கிறாள். அதன்பின்னர் இறுதி போட்டிக்கு செல்ல உள்ள போட்டியாளர்கள் பெயர்களை அறிவிக்க நடுவர்கள் மேடைக்கு வருகின்றனர். அதன் பின்னர் நடுவர்கள் வெற்றி பெற்றவர்கள் பெயர்களை அழைக்க தயாராகும்போது இனியா டென்சனாக இருக்கிறாள் அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial Vijaytv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment