Advertisment

பாரதியின் உச்சக்கட்ட கோபம்... ஆனந்தமாக சிரிக்கும் வெண்பா... உண்மை தெரிஞ்சும் இப்படியா?

உன்னை ஒரு நல்ல ப்ரண்டா நினைத்து இருந்தேன் நீ இப்படி பண்ணிட்டியே என்று சொல்ல வெண்பா பாரதியின் புலம்பலை கேட்டு வாய்விட்டு சிரிக்கிறார்.

author-image
WebDesk
New Update
பாரதியின் உச்சக்கட்ட கோபம்... ஆனந்தமாக சிரிக்கும் வெண்பா... உண்மை தெரிஞ்சும் இப்படியா?

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வெண்பா குறித்து உண்மையை தெரிந்துகொண்ட பாரதி வெண்பாவை பார்த்து ஆக்ரோஷமாக நடந்துகொள்வார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Advertisment

சின்னத்திரையில் பல சீரியல்கள் மக்கள் மனதை கவர்ந்தாலும, சில சீரியல்கள் எப்போது முடியும் என்ற எண்ணத்தை கொடுத்துவிடும். அந்த வகையில் இந்த சீரியல் விரைவில் முடித்து வைங்கப்பா கடுப்பா இருக்கு என்று ரசிகர்களை புலம்ப வைத்த பெருமை பாரதி கண்ணம்மாவுக்கு உண்டு. தொடக்கத்தில் நல்ல வரவேற்பை பெற்ற பாரதி கண்ணம்மா தற்போது இழுவையின் உச்சமாக சென்றுகொண்டிருந்தது.

ஒரு டி.என்.ஏ. டெஸ்ட் எடுத்தால் கதையே முடிந்துவிடும் ஆனால் அதை செய்யாமல் இப்படி ஜவ்வு மாதிரி இழுத்துக்கொண்டு போறீங்களே டைரக்டர் சார் என்று இந்த சீரியலின் தீவிர ரசிகர்களை புலம்ப தொடங்கினார். இந்த புலம்பல் இப்போதான் இயக்குனருக்கு கேட்டுள்ளது போல் டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து அதில் இருக்கும் உண்மையை தெரிந்துகொண்டார் பாரதி.

அப்புறம் என்ன லட்சுமி ஹேமா இருவரும் தனது மகள்கள் என்று தெரிந்துகொண்ட பாரதி கண்ணம்மா எந்த தப்பும் பண்ணல என்று தெரிந்துகொண்டு டெல்லியில் இருந்து சென்னை வருகிறார். இங்கு அப்பா யார் என்று தெரிந்துகொள்ள ஹேமா மாடியில் இருந்து குதிக்க போக ஆக்ஷன் ஹீரோ போல் எண்டரி கொடுக்கும் பாரதி நான்தான் உன் அப்பா கண்ண்மமா நான் தாலி கட்டுண மனைவி என்று சொல்லி அனைவருக்கும் ஷாக் கொடுக்கிறார். ஆனால் அங்கு இருக்கும் வெண்பாவுக்கு இது பெரிய ஷாக்காக உள்ளது.

அதன்பிறகு குடும்பத்தினர் அனைவரிடமும் லட்சுமி, ஹேமா ஆகியோருக்கு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்ததாகவும், அதில் அவர்கள் இருவரும் தனது மகள்தான் என்று கூறுகிறார். இதை கேட்டு வெண்பா பாரதியை கண்ணம்மாவிடம் சேர விடக்கூடாது என்று சொல்லி, இந்த ரிப்போர்ட் பொய் உன்ன யாரோ நல்ல ஏமாற்றி இருக்கிறார்கள் என்று சொல்கிறார்.

இதை கேட்டு பாரதியும் நம்புவது போல் இருக்க, இந்த டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தது யாருக்கு தெரியும் என்று கேட்க, பாரதி தன் தம்பியை கை காட்டுகிறார். இதை பயன்படுத்திக்கொள்ளும் வெண்பா அகில் எவ்ளோ காசு செலவு பண்ண இப்படி ரிப்போர்ட் கொடுக்க என்று கேட்கிறாள். அதன்பிறகு உனக்கு குழந்தை பிறக்காது என்று ஆன பிறகு உன் டிஎன்ஏ எப்படி குழந்தைகளுக்கு மேட்ச் ஆகும் என்று கேட்கிறார். இதற்கு பதில் தெரிந்தால் யாராவது சொல்லாம் என்று சொல்கிறார்.

அப்போது பாரதியிடம் வேலை பார்த்த ஒருவர் வந்து 10 வருடத்திற்கு முன்பு நீங்கள் டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க வந்தபோ சேம்பிள்ஸ் எல்லாம் மாற்றி வச்சது நான்தான் சார். இந்த வெண்பா கொடுத்த 10 ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு இப்படி பண்ணிட்டேன் என்று சொல்கிறார். இதனால் ஷாக் ஆகும் வெண்பா இதற்கு என்ன சாட்சி என்று கேட்க, அப்போர் துர்கா எண்ட்ரி கொடுக்கிறார்.

கண்ணம்மாவை கொல்ல வெண்பா பிக்ஸ் பண்ண கூலிப்படை தலைவனே நான்தான். அதன்பிறகு வெண்பாவின் சுயரூபம் தெரிந்து அவரை காப்பாற்ற நினைத்தேன். பலமுறை வெண்பாவிடம் இருந்து கண்ணம்மாவை காப்பாற்றி இருக்கிறேன் என்று உண்மை அனைத்தையும் சொல்லி விடுகிறார். இதை கேட்டு வெண்பா மட்டுமல்ல அங்கிருக்கும் அனைவரும் ஷாக் ஆகின்றனர்.

இதை கேட்டு பாரதி ஆக்ரோஷமாக வெண்பாவை அடித்து நொறுக்குவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. உன்னை ஒரு நல்ல ப்ரண்டா நினைத்து இருந்தேன் நீ இப்படி பண்ணிட்டியே என்று சொல்ல அதுவரை ஷாக்கில் இருந்த வெண்பா பாரதியின் புலம்பலை கேட்டு வாய்விட்டு சிரிக்கிறார். 10 வருடங்கள் தனது வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்ற ஆதங்கத்தில் ஆக்ரோஷமாக நடந்துகொள்வார் என்று பார்த்தால், குரு சிஷ்யன் படத்தில் சந்தானம் சொல்லும் டைலாக்கான இவன் இன்னும் திருந்தவே இல்லடா என்பது போன்று இருக்கிறார் பாரதி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bharathi Kannamma Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment