Advertisment

வெண்பாவுக்கு பிரேக்... பாரதிக்கு எப்பதான்யா உண்மையைச் சொல்வீங்க?!

Tamil Serial Update : கடந்த சில வாரங்களாக பாரதி கண்ணம்மா இடையே மீண்டும் நெருக்கம் அதிகரிப்பதுபோல் காட்சிகள் அமைக்கப்பட்டது

author-image
WebDesk
New Update
வெண்பாவுக்கு பிரேக்... பாரதிக்கு எப்பதான்யா உண்மையைச் சொல்வீங்க?!

Bharathi Kannamma Serial Update : நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியல் கடந்த வார எபிசோடுகள் பரபரப்பின் உச்சத்தில் கொண்டு சென்றுள்ளது.

Advertisment

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா வாரந்தோறும் வெளியாகும் டிஆர்பி ரேட்டிங்கில் முக்கிய இடத்தை பிடித்து வருகிறது. பாரதிகண்ணம்மா பிரிந்தது, கண்ணம்மாவுக்கு குழந்தை பிறந்தது மற்றும் வெண்பாவின் சூழ்ச்சி என வழங்கம்போல் சென்றுகொண்டிருந்த கதையில் கடந்த சில வாரங்களாக பாரதி கண்ணம்மா இடையே மீண்டும் நெருக்கம் அதிகரிப்பதுபோல் காட்சிகள் அமைக்கப்பட்டது.

இதற்கு முக்கிய காரணம் சீரியலில் வில்லி வெண்பா ரோலில் நடிக்கும் ஃபரீனா ஆசாத் தற்போது கர்ப்பமாக இருப்பதால், அவருக்கு அதிக வேலை கொடுக்காமல், கதையின் ஓட்டத்தை மாற்றி பாரதி கண்ணம்மா மற்றும் குழந்தைகளை சுற்றி கதை நகர்ந்து கொண்டிருந்தது. இதனால் ரசிகர்கள் பாரதி கண்ணம்மா இருவரும் மீண்டும் சேர்ந்துவிடுவார்கள் என்று ரசிகர்கள் எண்ணிக்கொண்டிருந்த நிலையில், திடீர் ட்விஸ்ட்டாக கண்ணம்மாவிடம் வளரும் லக்ஷ்மி கண்ணம்மாவின் குழந்தை என பாரதிக்கு தெரிய வருகிறது.

இதனால் மீண்டும் கோபத்தின் உச்சத்திற்கு செல்லும் பாரதி இதை நிரூபிக்க லக்ஷ்மியை தனது வீட்டிற்கு அழைத்துச்செல்கிறான். மேலும் இந்த உண்மையை தெரிந்துகொண்டு குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து தன்னை ஏமாற்றி விட்டதாக நினைத்து கோபமடைகிறான். அப்போது மகளை அழைத்துச்செல்ல பாரதி வீட்டிற்கு வரும் கண்ணம்மா எவ்வளவோ கேட்டும் லக்ஷ்மியின் பெற்றோரை பார்க்காமல் அவளை அனுப்ப முடியாது என்று சொல்லிவிடுகிறான்.

இதனால் கண்ணம்மா லக்ஷ்மியை பாரதி வீட்டிலேயே விட்டுவிட்டு கண்ணம்மா வென்றுவிடுகிறார். இப்போது கண்ணம்மா வீட்டில் இருந்த லக்ஷ்மி பாரதியிடமும், பாரதியிடம் வளர்ந்த ஹேமா இப்போது கண்ணம்மாவிடமும் சேர்ந்துள்ளதால் கதையில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ஒரு சில புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டு வருகிறது.

இதில் சௌந்தர்யா வீட்டின் 2-வது மருமகள் அஞ்சலி கர்ப்பினியாக உள்ள நிலையில், அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் சௌந்தர்யா இதில் கண்ணம்மாவையும் கலந்துகொள்ள அழைக்கிறார். இது தொடர்பாக வெளியான புகைப்படத்தில், பாரதிக்கு அருகில் கண்ணம்மா அமர்ந்து சாப்பிடுவது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் எப்போதான் பாரதிக்கு எப்போதான் உண்மை தெரியவரும், இவர்கள் எப்போதான் சேருவார்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க அஞ்சலியின் ரகசியத்தை தெரிந்துகொண்ட வெண்பா சமயம் பார்த்து உண்மையை சொல்ல காத்திருக்கிறார். ஆனால் ஃபரீனாவின் பிரசவம் முடியும் வரை இந்த உண்மை வெளிவர வாய்ப்பு இல்லை என்பதால் அதுவரை, கதை  அஞ்சலியை சுற்றியே பெரும்பாலான கதை நகரும். வெண்பாவின் ரீஎன்ட்ரிக்கு பிறகு கதையில் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறும் என்பதில் சந்தேகமில்லை.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bharathi Kannamma Serial Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment