Advertisment

Vijay TV Serial: பட்டினிச் சிறையில் வசமாய் சிக்கிய வெண்பா; தப்ப முடியுமா?

Tamil Serial Update :விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன?

author-image
WebDesk
New Update
Vijay TV Serial: பட்டினிச் சிறையில் வசமாய் சிக்கிய வெண்பா; தப்ப முடியுமா?

Bharathi Kannamma Serial Today Episode : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், நாளுக்கு நாள் புதிய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்த்து என்பதை இந்த பதிவில் பார்போமா....

Advertisment

பாரதியை மணக்க ஆசைப்பட்டு பல சித்து விளையாட்டுகள் செய்து வந்த வெண்பாவை துர்கா கடத்திக்கொண்டு ஒரு அறையில் அடைத்துவிட்டான் அல்லவா... அந்த அறையில் இருந்து வெண்பா தப்பிக்க முயற்சி செய்கிறாள். அந்த நேரம் பார்த்து துர்கா உள்ளே வர... வெண்பா வசமாக மாட்டிக்கொள்கிறாள். உள்ளே வந்த துர்கா, அவள் எழுதிய கடிதத்தை அவளிடம் கொடுக்கிறான். ஆனால் வெண்பாவோ என்ன விட்ரு துர்கா எனக்கு நெறைய வேல இருக்கு நா உன்ன மாதிரி ரவுடி இல்ல என கூறுகிறார்.

ஏ... அப்படி என்ன உனக்கு வேலை இருக்கு, பாரதி கண்ணம்மாவை பிரிக்குறது எப்படி, பாரதியை மயக்குறது எப்படி, இதானா உன்னோட வேலை என சொல்லும் தூர்கா, வந்து உக்கார் என அவளை மிரட்டுகிறான். அடுத்து அவனோட ஆளை கூப்பிட்டு இவளுக்கு ரெண்டு நாளைக்கு பச்ச தண்ணீ கூட கொடுக்காதீங்க... அப்பதான் கொஞ்சம் கொழுப்பு கொறையும் என சொல்லி மறுபடியும் அவளை கட்டி போட்டுவிட்டு செல்கிறான். தப்பிக்கு முயற்சி பாழாய் போய்விட்டதே என்று வெண்பா வெறுப்பாகிறாள்.

அடுத்து சாப்பாடு கொடுக்கும் சுமதியிடம், எனக்கு வேணாம் நான் கண்ணம்மா வீட்ல சாப்பிட்டேன் என மஞ்சு சொல்கிறாள். இதனால் கோபப்படும் சுமதி, ஒரு வேளை சாப்பாடு கொடுத்தா, மூணு வேளையும் அங்க போய் நிப்பியா என சொல்லி அவளை அடிக்க போகிறாள். அந்த நேரத்தில் அங்கு வரும் கண்ணம்மா, சுமதி அடிப்பதை தடுத்து நிறுத்துகிறாள். பிள்ளைகளுக்கு நம்ம கஷ்டம் எப்படி தெரியும், பிறந்தவன்னு சொல்லிவீங்க, பிரச்சனைன்னு என்கிட்ட சொல்லமாட்டீங்களா என கேட்கிறாள்.

இதனை  கேட்டு கண்ணீர் விடும் சுமதி, எங்கயுமே வேலை கிடைக்கல. கையில பணமும் இல்ல. மஞ்சுவோட சேர்ந்து தற்கொலை பண்ணிக்கலாம்ன்னு தோணுது என சொல்கிறாள். இதை கேட்டு அதிர்ச்சியடையும் கண்ணம்மா, அப்ப நான்லாம் எதுக்கு இருக்கேன், நீங்களும் சேகர் அண்ணனும் எவ்வளவு உதவி பண்ணி இருக்கீங்க. நான் ஒன்னும் நன்றி மறந்தவ இல்ல.  நீங்க எதையும் யோசிக்காம இருங்க என சமாதானம் செய்கிறாள்.

இதற்கிடையில் வீட்டில் ஹேமாவிற்கு  கணக்கு சொல்லி கொடுத்துக்கொண்டிருக்கிறாள் சௌந்தர்யா. அப்போது ஹேமா, லட்சுமி தன்னுடன் காரில் ஒன்றாக காரில் வரும்போது, பாதியில் ஆட்டோகாரர் லட்சுமியை அழைத்துக்கொண்டு போனதாக கூறுகிறாள். இதை கேட்ட சௌந்தர்யா, நல்ல வேலை கண்ணம்மாவோட வீட்டுக்கு பாரதி போகல, கடைசி வரை அவனோட பாசம் ரெண்டு குழந்தைகளுக்கும் குறைவில்லாமல் கிடைக்கணும் என யாசிக்கிறாள்.

சௌந்தர்யா இந்த யோசனையில் இருக்கும்போது, நானும் லட்சுமியும் ஒன்னா பிறந்தோமா என ஹேமா கேட்கும்போது சௌந்தர்யா அதிர்ச்சியாகிறாள். தொடர்ந்து எனக்கு மாதிரி அவளுக்கும் அடுத்த வாரம் பிறந்த நாள் என ஹேமா சொல்கிறாள். ஹேமாவின் இந்த கேள்விக்கு சௌந்தர்யா எப்பவும் போல நீங்கள் ஒரே நாளில் ஒரே கருவறையில் பிறந்தவர்கள் என்று  மனதிற்குள் நினைத்து கொள்கிறாள்.



இதைனயடுத்து கஸ்தூரியிடம் பேசிக்கொண்டிருக்கும் கண்ணம்மா, சுமதி பிரச்சனையை சொல்லும்போது, என்கிட்ட இருக்க பணத்ததை கொடுத்தும் வேணாம்னு சொல்லிட்டாங்க என சொல்கிறாள். அப்போது அங்கு வரும், சுமதியும் என் கஷ்டத்தை சொல்லி உன்ன கஷ்டப்படுத்திட்டேன் மன்னிச்சிரு கண்ணம்மா என சொல்கிறாள், ஆனால் இதை விடுங்க அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிப்போம் என கண்ணம்மாவும், கஸ்தூரியும் அவளுக்கு நம்பிக்கை அளிக்கின்றனர். அதோடு முடிகிறது இன்றைய எபிசோடு

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bharathi Kannamma Serial Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment