இந்த நடிகை இனி கிடையாதா? விஜய் டிவி சீரியலில் முக்கிய மாற்றம்
Tamil Serial Update : விஜய்டிவியின் காற்றுக்கென்ன வேலி சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை மாளவிகா தற்போது அதிலிருந்து விலகியுள்ளார்.
Tamil Serial Kaatrukenna Veli New Update : விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று காற்றுக்கென்ன வேலி. இந்த டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், கல்வியை மையப்படுத்தி கதை மற்றும் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் தனித்துவமாக மக்கள் மத்தியில் இடம்பிடித்துள்ளது. எப்படியாவது படித்துவிட வேண்டும் என்று ஆசைப்படும் ஒரு பெண் தன் வாழ்வில் சந்திக்கு பிரச்சனைகளை மையப்படுத்திய இந்த சீரியல் விஜய் டிவியின் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வருகிறது.
Advertisment
இந்த சீரியல் மூலம் பல புதுமுக நடிகர் மற்றும் நடிகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் இந்த சீரியல் நட்சத்திரஙகள் மக்கள் மத்தியில் பிரபலம் இல்லை. ஆனாலும் சீரியலின் வரவேற்புக்கு இதில் நடித்து வரும் நடிகை மாளவிகா முக்கிய காரணமாக உள்ளார். கல்விதான் தன் வாழ்க்கை என்று எண்ணிக்கொண்டிருக்கும் நாயகிக்கு உதவும் நாயகனின் அம்மாவாக சாரதா என்ற கதாப்பாத்திரத்தில் மாளவிகா நடித்து வருகிறார்.
1988-முதல் தமிழ் தெலுங்கு கன்னடா என தென்னிந்திய மொழிகளில் நாயகி மற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் மாளவிகா. தொடர்ந்து பல தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வரும் இவர் தற்போது காற்றுக்கொன்ன வேலி சீரியலில் இருந்து விலகியுள்ளார். ஆனால் அவர் திடீரென விலகியது குறித்து காரணங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் அவர் விலகலுக்கான காரணம் என்ன என்று கேள்விகளை பதிவிட்டு வருகிகன்றனர்.
மாளவிகா தற்போது கே.ஜி.எஃப் 2, எனிமி, மற்றும் ருத்ர தாண்டவம் படத்தில் நடித்துள்ளார். காற்றுக்கென்ன வேலி சீரியலில் இருந்து அவர் விலகிதை தொடர்ந்து இவரது கதாப்பாத்திரத்தில் நடிக்க வேறாரு நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil