Advertisment

Tamil Serial Rating : மீண்டும் நாச்சியார் வீட்டிற்கு வந்த மாயன் - மகா... மாறனை பழி தீர்ப்பாரா மாயன்?

Tamil Serial Rating : தற்போது தனது மாமா வீட்டில் இருந்து மீண்டும் நாச்சியார் வீட்டிற்கு வந்துள்ள மாயன் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : மீண்டும் நாச்சியார் வீட்டிற்கு வந்த மாயன் - மகா... மாறனை பழி தீர்ப்பாரா மாயன்?

Tamil Serial Naam Iruvar Namakku Iruvar Rating : ஒரு கிராமத்தின் முக்கிய நபர், அவருக்கு இரு மனைவி முதல் மனைவிக்கு இரட்டை மகன்கள், 2-வது மனைவிக்கு (நாச்சியார்) 3 பெண் குழந்தைகள். கணவரின் 2-வது திருமணத்தால் கோபமான முதல் மனைவி 2-வது மகனை அழைத்துக்கொண்டு மலேசியா சென்று விடுகிறார். முதல் மகன் உள்ளூரிலேயே இருக்கிறார். ஆனால அப்பாவின் திருமணம் பிடிக்காமல் அவரை வெறுத்து ஒதுக்குகிறார்

Advertisment

ஒரு கட்டத்தில் அப்பா இறக்கும் தருவாயில். அவரைப்பற்றி புரிந்துகொள்ளும் முதல் மகன், அப்பாவின் 2-வது மனைவியை தனது அம்மாவாகவும், 3 பெண் குழந்தைகளை தனது தங்கையாகவும் ஏற்றுக்கொள்கிறார். இதனிடையே அப்பாவின் சொத்துக்களை அபகரிக்க உறவினர்கள் பலரும் முயற்சி செய்கினறனர்.

இதில் இருந்து சொத்துக்களை காப்பாற்றும் முயற்சியில் மூத்த மகன் மாயன் தோல்வியில் முடிய அந்த நேரத்தில் மலேசியா சென்ற முதல் மனைவி தனது மகன் மாறனுடன் என்டரி கொடுக்கிறார். தனது மகனை மாயனை அவர்களிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்று போராடுகின்றனர். ஆனால் மாயன் அவர்களை விட்டுக்கொடுக்காமல் தனது அப்பாவின் 2-வது மனைவியுடனே இருக்கிறார்.

இவர்களுக்குள் நடக்கும் பாசப்போராட்டமே நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் முக்கிய கதைககரு. தற்போது 2-வது மகன் மாயன் மீண்டும் மலேசியா சென்றுவிட்ட நிலையில், மாயனின் மனைவி மகாவுக்கு விபத்தில் அடிப்பட்டுள்ளது. இதனால் அவரை அருகில் இருந்து மாயன் பார்த்துக்கொள்கிறார். இதை பார்த்து பரிதாபப்படும் மகா மாயனை எப்படியாவது அவனது 2-ம் அம்மாவடம் சேர்க்க வேண்டும் என்று யோசித்த அதற்காக பிளான் செய்கிறார்.

அவர் பிளான்படியே மாயனும் மகாவும் நாச்சியாரின் வீட்டிற்கு வந்துவிடுகின்றனர். இதைபார்த்து நாச்சியார் வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இத்துடன் இன்றைய ப்ரமோ முடிவடைகிறது. விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல் ஒன்றான நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலுக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு அளித்து வருகினறனர்.

வழக்கமான குடும்ப கதைதான் என்றாலும் கூட விறுவிறுப்பாக அதிரடி ஆக்ஷனுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் புதிய அனுவத்தை கொடுக்கிறது. கடந்த சில எபிசோடுகளில் மாயனின் தம்பி மாறன் மாயனாக நடித்து குடும்பத்தினரை ஏாற்றியதும், மாயனனை கடத்தி வைத்திருந்தது சற்று தோய்வை ஏற்படுத்தினாலும் அடுத்து மாயன் தப்பித்தது ரசிகர்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியது என்று சொல்லாம்.

தற்போது தனது மாமா வீட்டில் இருந்து மீண்டும் நாச்சியார் வீட்டிற்கு வந்துள்ள மாயன் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், நாச்சியார் வீட்டிற்கு வந்த மாயனை சரண்யா எப்படி நடத்துவார் என்பதும், வெளி நாடு சென்ற கத்தியின் நிலைமை என்ன என்பது அடுத்தடுத்த எப்சோடுகளை பரபரப்பாகும் விதமாக அமைந்துள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் மாயன் மீண்டும் வந்துவிட்டார் இனி அனல் பறக்கும் என்று கூறி வருகினறனர்.

என்னதான் சீரியல் விறுவிறுப்பாக சென்றாலும், கத்தி இல்லாதது காமெடியில் சற்று தோய்வை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். கத்தி இடத்தை நிரப்ப சில நடிகர்களை உள்ளே இழுத்து வந்தாலும், காமெடி எதுவும் வொர்க்அவுட் ஆகவில்லை. கத்தி கேரக்டரில் நடித்து வந்த ராஜூ தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ளார். அவர் வெளியில் வந்து மீண்டும் சீரியலில் எப்போது இணைவார் என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் அவர் வந்தால் தான் காமெடி போஷன் ஃபில் ஆகும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Naam Iruvar Namakku Iruvar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment