Tamil Serial news in tamil: கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'செம்பருத்தி' தொடருக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இந்த தொடரில் திரைப்பட நடிகை ப்ரியா ராமன் (அகிலாண்டேஸ்வரி) முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். அதோடு இந்த தொடரில் ப்ரியா ராமனின் மூத்த மகனாகவும் இத்தொடரின் நாயகனாகவும் நடித்த கார்த்திக் விலகியதால், அவருக்கு பதிலாக அக்னி அந்த கேரக்டரில் நடித்து வருகிறார்.
இந்தத்தொடரில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஜனனி அசோக் குமார் விலகியதால் அவருக்கு பதில் நடிகை துர்கா இணைத்துள்ளார். மற்றும் நடிகை துர்கா 'உமா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து 'செம்பருத்தி' தொடரில் 'உமா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளேன் என்று தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை துர்கா. அதோடு இந்த தொடரில் நடிக்கும் நடிகை ப்ரியா ராமனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்திற்கு "நாங்கள் எப்பவும் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவோம், வாழ்த்துக்கள் அக்கா" என்று ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
'செம்பருத்தி' தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஜனனி அசோக் சில காரணங்களால் அந்த தொடரில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில் அந்த தொடரில் அவருக்கு தோழியாக நடித்த ஷபானா மற்றும் கதிருடன் சமீபத்தில் புகைப்படம் ஒன்று எடுத்துக்கொண்டார் நடிகை ஜனனி. துளி கூட மேக்கப் இல்லாமல் மூவரும் இணைந்து எடுத்துக்கொண்ட அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil