Advertisment

Vijay TV Serial: சந்தியா விட்டுக் கொடுப்பதைப் பற்றி பேசினால், விட்டுப் போவதைப் பேசும் சரவணன்!

சரவணன் சொன்னதைக் கேட்டு புரியாத சந்தியா, “என்னங்க கொழப்பறீங்க, நான் விட்டுக்கொடுக்கிறதைப் பத்தி பேசுறேன். நீங்க விட்டுட்டு ஓடறதுனு சொல்றீங்க…” என்று கேட்கிறாள்.

author-image
WebDesk
New Update
Vijay TV Serial, Raja Rani 2 Serial, Tamil serial news, raja rani 2 serial today episode, விஜய் டிவி, ராஜா ராணி 2, ராஜா ராணி 2 சீரியல், ஆல்யா மானசா, சந்தியா, சரவணன், saravanan misunderstanding with sandhya, alya manasa, raja rani 2 today story

Raja Rani 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் தினமும் விறுப்பான திருப்பங்களையும் பரபரப்பான கட்டங்களையும் அடைந்துவருகிறது, அதை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்.

Advertisment

வீட்டில் சுமங்கலி பூஜைக்கு ஏற்பாடு நடக்கிறது. சந்தியாவுக்கு அவளுடைய அண்ணன் அமெரிக்காவில் இருந்து அனுப்பிய பார்சலை வாங்கிவருவதற்கு சரவணனுடன் கொரியர் ஆஃபீஸுக்கு ஸ்கூட்டரில் செல்கிறாள்.

சந்தியாவின் தோழி அவளுக்கே தெரியாமல் அவளுடைய பையில் வைத்த விவாகரத்து பத்திரம் பற்றி போனில் பேசிக்கொண்டிருக்கும்போது அறைகுறையாகக் கேட்ட சரவணன், தன்னை சந்தியா விவாகரத்து செய்யப் போவதாக நினைத்துக்கொண்டு புழுங்கிக்கொண்டிருக்கிறான். அதிலிருந்து சரவணன், சந்தியாவிடம் சரியாககூட பேசாமல் இருகிறான். இந்த சூழலில்தான் இருவரும் கொரியர் ஆஃபீஸுக்கு ஸ்கூட்டரில் போகிறார்கள்.

இருவரும் ஸ்கூட்டரில் போகும்போது சரவணன் பெண்கள் ஏன் எப்போதும் அனைத்தையும் மனத்திற்குள்ளேயே மறைத்து வைத்து கொள்கிறார்கள் என அவரது விவாகரத்து பிளான் பற்றி குறிப்பாக கேட்கிறான்.

அதற்கு சந்தியா, ஆண்கள் என்ன பேசினாலும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், ஒரு பெண் பேசினால் இந்த சமுதாயத்தில் இருப்பவர்கள் அதற்கு பல அர்த்தங்கள் கண்டுபிடிப்பார்கள். அவர்கள் இதை பேசனும் பேசக்கூடாதுனு ஒரு லிஸ்ட்டே உருவாயிடும். அதனால்தான் பல நேரங்களில் பெண்கள் நடக்கிறதை மனசுக்குள்ள வச்சுக்கிட்டு அமைதியாவே இருந்துடுவாங்க” என்று கூறுகிறாள்.

இதைக் கேட்ட சரவணன், மொத்தத்தில பெண்கள் எல்லாத்தையும் மனசுக்குள்ள வச்சு பூட்டிக்கிறதுக்கு பெண்கள் இல்லை காரணம். ஆண்கள்தான் அதுதானே உங்க தீர்ப்பு என்று கேட்கிறான். இதைக்கேட்ட சந்தியா, இல்லை என்று சொல்ல முடியாமல் அப்படியும் புரிஞ்சுக்கலாம் என்று கூறுகிறாள். ஆனால், ஒரு குடும்பம்னு வந்துட்டா இந்த மாதிரி விவாதம் பண்ணிகிட்டிருந்தா யாராலயும் மாசக் கணக்கில்கூட சேர்ந்து வாழ முடியாது. அங்க பொண்ணா இருந்தாலும் ஆணா இருந்தாலும் விட்டுக்கொடுத்துதான் ஆகனும். வேற வழியில்லை. அது நடக்கும் என்று சந்தியா கூறுகிறாள்.

அதற்கு சரவணன், “நீங்க படிச்சவங்கதானே வேற வழி இல்லாமல் சேர்ந்து வாழ்ந்தா அது தப்பு இல்லையா? சகிச்சுகிட்டு வாழற மாதிரி தான அப்படிதானே அர்த்தம்” என்று கேட்கிறான். அதற்கு சந்தியா, “அனுசரிச்சு போறதை சகிச்சுகிட்டு போறதா சொன்னா அப்புறம் நம்ப ஊர்ல நூத்துக்கு தொண்ணூறு குடும்ப இப்படிதான் வாழறாங்கனு அர்த்தம். எல்லாத்தையும் ரொம்ப நுணுக்கி நுணுக்கி பார்க்காமல் டேக் இட் ஈஸியா எடுத்துக்கிட்டாதான் வாழ்க்கை ரொம்ப ஸ்மூத்தா ஓடும். அப்புறம் கல்யாண வாழ்க்கையில கணவன் மனைவி ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுத்து வாழனும் எல்லாத்தையும் விட இதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம். இந்த விட்டுக்கொடுத்தல் ரெண்டு பக்கமும் நடக்கனும்” என்று கூறுகிறாள்.

இதற்கு சரவணன், “ஏங்க நான் என்ன கேக்கிறேன்? கல்யாணம் பண்றது எதுக்கு நல்லபடியா சேர்ந்து சந்தோஷமா வாழறதுக்குதானே, எதுக்குங்க நடுவுல விட்டுட்டு ஓடனும். அப்புறம் எதுக்குங்க கல்யாணம் பண்ணனும்” என்று கேட்கிறான். இதைக்கேட்டு புரியாத சந்தியா, “என்னங்க கொழப்பறீங்க, நான் விட்டுக்கொடுக்கிறதைப் பத்தி பேசுறேன். நீங்க விட்டுட்டு ஓடறதுனு சொல்றீங்க…” என்று கேட்கிறாள். அதற்கு சரவணன், “என்னவோ ஒன்னுங்க, நான் சொல்றதை நீங்க நல்லா யோசிச்சு பாருங்க… புரியும்” என்று கூறுகிறான். அதற்கு சந்தியா எனக்கு எதுவுமே புரியலிங்க, ஆனால், கணவன் மனைவி ரெண்டு பேருமே விட்டுக்கொடுக்க கூடாத ஒரு விஷயம் இருக்கு. அதுதான் அவங்களோட கனவு. வாழ்க்கையில இதை அடையனும்னு எல்லோருக்கும் ஒரு லட்சியம் இருக்கும். அந்த லட்சியக் கனவை ரெண்டு பேருமே விட்டுக்கொடுக்க கூடாது. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை நோக்கி போய்க்கிட்டே இருக்கனும்.” என்கிறாள்.

இதைக் கேட்ட சரவணன் தனது மனதுக்குள், “தாராளமாக போங்க சந்தியா, நீங்க வாய் திறந்து ஒரு வார்த்தை கேட்டாள் அடுத்த நிமிஷமே நான் கையெழுத்து போட்டுத் தர்றேன்” என்று சொல்லிக்கொள்கிறான். அப்போது, சரவணன் அமைதியாக இருப்பதைப் பார்த்து என்ன அமைதியாக இருக்கிறீர்கள் என்று கேட்கிறாள். அதற்கு சரவணன், கனவை நோக்கி ஓடனும்னு சொன்னிங்க இல்ல, ஓடலாம், ஆனால், நிஜத்துல வாழ்ந்த வாழ்க்கையை மறந்துடக் கூடாது. ஏன்னா, மரம் வானத்தை நோக்கி வளர்ந்தாலும் வேர் மண்ணுக்குள்ளதான் இருக்கு என்று கூறுகிறான். இதைக் கேட்டு சந்தியா நாம் என்ன சொன்னாலும் இவர் ஏன் இப்படி பேசுகிறார் என்று யோசிக்கிறாள்.

publive-image

அப்போது, ஒரு வயதான பாட்டி வாகனங்கள் வேகமாக செல்லும் சாலையைக் கடக்க முடியாமல் நடந்து செல்வதைப் பார்த்த சரவணன், ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு பாட்டியை சாலையைத் தாண்டி அழைத்து வந்து ஒருமரத்தடியில் அமர வைத்துவிட்டு சந்தியாவை அழைத்துக்கொண்டு செல்கிறான். ஸ்கூட்டரில் போய்க்கொண்டிருக்கும்போது, ஒரு மண் சாலையின் நடுவில் ஒரு சின்ன குழி இருக்கிறது. அங்கே சரவணன் வண்டியை தடுமாற்றத்துடன் ஓட்டிச் செல்கிறான். உடனே சந்தியா ஸ்கூட்டரை நிறுத்தச் சொல்லிவிட்டு சென்று அந்த பாதையை மண் போட்டு மூடி அங்கெ ஒரு குச்சியை நட்டு எச்சரிக்கை செய்யும் விதமாக வருகிறாள். அப்போது, ஸ்கூட்டரை நோக்கி வரும் சந்தியா, தடுமாறி விழுகிறாள். சரவணன் சந்தியாவை தாங்கிப் பிடிக்கிறான். சினிமாவில் வருவதுபோல இங்கேயும் ரொமான்ஸ் ம்யூசிக் ஆனால், சூழ்நிலையோ குழப்பமாக இருக்கிறது.

இருவரும் கொரியர் ஆஃபீஸுக்கு போகிறார்கள். அங்கே சந்தியா கொரியரை வாங்கிக்கொண்டு ஆட்டோவில் செல்வதாக கூறிவிட்டு செல்கிறான். கொரியர் ஆஃபீஸில் ரெண்டு பார்சல் வந்திருப்பதாகக் கூறுகிறார்கள். ஒரு அமெரிக்காவில் இருந்தும் இன்னொன்று பாளையங்கோட்டையில் இருந்து வந்திருப்பதாகக் கூறுகிறார்கள். சந்தியா, ஆமாம் மறந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். அதில் ஒரு பார்சல் டேமேஜ் ஆகியிருக்கிறது. அது வரும்போது டேமேஜ் ஆகியிருக்கலாம் என்று கூறுகிறார்கள். பிரித்து பார்த்தால் லட்டு உடைந்து போயிருக்கிறது. இதைக்கொண்டு போய் கொடுக்கலாமா என்று யோசிக்கிறாள். அது சரியாக வராது என்று சரவணனிடம் கொண்டு சென்று சரி செய்து கொடுக்கலாம் என்று முடிவு செய்து சரவணன் ஸ்வீட் கடைக்கு செல்கிறாள்.

துணிக்கடையில் அர்ச்சனா புடவைகளை எடுத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். இதைப் பார்த்த செந்தில் புடவையை ஏன் எடுத்துப்பார்த்துக்கொண்டிருக்கிறாய் என்று கேட்கிறான். அதற்கு அர்ச்சனா, சுமங்கலி பூஜைக்கு புது துணி எடுக்க வேண்டும். எங்க அம்மாவீட்டில் எடுத்து தந்ததாக நம்ம கடையில் இருந்தே ஒரு புடவையை எடுத்துப்போய் காட்டலாம் என்று கூறுகிறாள். இதை தனது அம்மா கண்டுபிடித்துவிடுவார்கள் என்று செந்தில் கூறுகிறான். அதற்கும் ஒரு யோசனையை வைத்திருக்கும் அர்ச்சனா, அவளுடைய அம்மாவீட்டில் புடவை எடுப்பதற்கு கொடுத்த பணத்தை வாங்கி நம்ம கடையிலேயே எடுத்துக்கொண்டதாக கூறிவிடுவேன் என்று கூறுகிறார்கள். இதற்கும் என்னோட பணம் 3,000 போகுதா என்று கூறி சளித்துக்க்கொள்கிறான். பிறகு நீ என்ன வேணும்னாலும் பண்ணு அர்ச்சனா ஆனால் கடைசியில என்ன மட்டும் நீ எந்த பஞ்சாயத்திலயும் நிக்க வச்சுடாத என்று கூறுகிறான்.

சரிதான் என்று கடை பையனைக் கூப்பிட்டு சேலைகளை எடுத்து வைக்கச் சொல்லிவிட்டு வீடு வரைக்கும் போய்விட்டு வருகிறேன் என்று புறப்படுகிறாள். அந்த நேரம் பார்த்து பார்வதி பின்னால் சுற்றிக்கொண்டிருக்கும் பாஸ்கர் கடைக்கு வருகிறான். அவனைப் பார்த்ததும் ஷாக் ஆகும் அர்ச்சனா, பார்வதியின் பாய் ஃபிரண்ட்டாக நடித்த கடை பையனை பாஸ்கர் பார்த்துவிட்டால் பிரச்னை ஆகிவிடும் என்று வேகமாக ஓடி வந்து, வியாபாரம் செய்யும் இடத்தில் அவனை டெஸ்க்குக்கு கீழே மறையச் சொல்லி அவன் மீது துணிகளை அடுக்கி வைக்கிறாள்.

கடைக்கு உள்ளே வரும் பாஸ்கர், தனக்கு பார்வதியை காதலிக்க உதவி செய்யும்படி கேட்கிறான். அதற்கு அர்ச்சனா நீங்கதான் ஏற்கெனவே அவளுக்கு பாய் ஃபிரண்ட் இருப்பதை பார்த்தீங்களே அவளேகூட சொல்லிட்டாலே பிறகு ஏன் என்று கேட்கிறாள். ஆனால், பாஸ்கர், அந்த பையனைப் பார்த்தால் ரொம்ப சின்ன பையனா இருக்கான். என்னை பின்னாடி வர வேணாம்னு சொல்றதுக்காக அப்படி நடிக்க வச்சிருப்பாளோன்னு தோணுது என்று கூறுகிறான். இதைக்கேட்டு அர்ச்சனா, எப்படியோ கண்டுபிடிச்சிட்டானே என்று மனதுக்குள் சொல்லிக்கொள்கிறாள். ஒரு முறை அவள்கூட பேச எனக்கு நீங்கதான் ஹெல்ப் பண்ணனும் என்று கேட்கிறான். அதற்கு அர்ச்சனா, உங்களை பிடிக்காததால் தானே வேற ஒரு பாய் ஃபிரண்ட் இருக்கறதா சொல்லியிருக்கா, உங்கள ஏன் பிடிக்காத ஒருத்தியை ஏன் கல்யாணம் பண்ணிக்கனும்னு துடிக்கிறீங்க என்று கேட்கிறாள். என் தங்கச்சிக்கு உங்களை ரொம்ப புடிச்சிருக்கு, அவளை நீங்க கல்யாணம் பண்ணிகிட்டா உங்க வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருக்கும் என்று கூறுகிறாள். இதைக்கேட்ட பாஸ்கர், நீங்க என்னை ரொம்ப குழப்பறீங்க யோசிச்சு பதில் சொல்றேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான்.

publive-image

பார்வதி கல்லூரியில் இருந்து வெளியே வருகிறாள். அந்த நேரம் பார்த்து பாஸ்கர் அவள் எதிரே வருகிறான். இவனை எத்தனை தடவை விரட்டினாலும் திரும்பத் திரும்ப வந்து டார்ச்சர் பண்றானே என்று சலித்துக்கொள்கிறாள். இவனால, விக்கி கோவிச்சுக்கிறான். அம்மாகூட வேற சண்டை என்று கூறுகிறாள்.

அப்போது, பாஸ்கர் நீங்க சிங்கிள்னு நினைச்சுதான் உங்க பின்னாடி சுத்துனேன். கமிட்டேட்னு தெரிஞ்சிருந்தா உங்க பக்கமே வந்திருக்க மாட்டேங்க… ஏன்னா நான் ரொம்ப டீசண்ட். அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்பட மாட்டேன் என்று கூறுகிறான். அவளைப் பொருள் என்று சொன்னதால் பார்வதி கோபப்பட்டு திட்டுகிறாள். ஆனால், பாஸ்கர் அவள் கோபத்தை ரசிக்கிறான். பிறகு, அன்னைக்கு உங்ககூட ஒரு பையனைப் பார்த்தேன் இல்ல அவந்தா உங்க ஆளா என்று கேட்கிறான். அதற்கு பார்வதியும் ஆமாம் என்று சொல்கிறாள். அதற்கு பாஸ்கர், அவன் உங்க லெவலுக்கு இல்லை. ஏனி வச்சாகூட எட்டாதுங்க என்று கூறுகிறான். இதற்கு பார்வதி, நான் தான் இன்னொரு பையனை லவ் பண்றேன்னு சொல்றேன் இல்லை. பேசாம வேளையப் பார்த்துக்குனு போவியா என்று திட்டுகிறாள். அப்போதும் பாஸ்கர், இப்போதுகூட உங்களுக்கு ஏத்த மாப்பிள்ளை நான்தான்னு என் உள்மனசு சொல்லுதுங்க என்று கூறுகிறான். இதைக் கேட்டு கடும் கோபமடையும் பார்வதி உங்க உள் மனசை 6 அடி குழி தோண்டி மண்ணைப் போட்டு மூடிடுங்க, திரும்ப என் பக்கம் திரும்பாதீங்க என்று கூறுகிறாள். பிறகு பாஸ்கர் உங்க மனசு மாறிடுச்சுனா போன் பண்ணுங்க என்று கூறிவிட்டு செல்கிறான். இவன் சரியான லூசா இருப்பான் போல என்று திட்டிக்கொண்டு பார்வதி சலிப்பாக செல்கிறாள்.

publive-image

அடுத்த காட்சியில், ஸ்வீட் கடையில், கடை பையன் சர்க்கரை சரவணனிடம் உணவு பாதுகாப்பு துறையிடம் இருந்து வந்த லெட்டரை அண்ணி கொடுக்க மறந்துட்டாங்க போல என்று சொல்லிவிட்டு அந்த கவரை கொடுக்கிறான். அதை வாங்கி சரவணன் அப்படியே வைத்துவிடுகிறான். அது வருஷம் வருஷம் வருவதுதானே அதை பார்த்துவிட்டு என்ன செய்வது, இதற்கு பதில் கவர் அனுப்பனும் என்று கூறுகிறான்.

அப்போது, சந்தியா கொரியரில் வந்த பாக்ஸ் உடன் கடைக்கு வருகிறாள். தான் அந்த கவரை உங்களிடம் கொடுக்க மறந்துவிட்டேன் என்று சொல்கிறாள். பிறகு, அவளுடைய அண்ணன், அனுப்பிய பார்சலைக் காட்டுகிறாள். சர்க்கரை பாக்ஸில் என்ன இருக்கிறது என்று கேட்கிறான். அதற்கு சந்தியா, ஒரு பாக்ஸில் துணி மணி, இன்னொரு பாக்ஸில் ஸ்வீட் இருப்பதாகக் கூறுகிறாள். அதற்கு சர்க்கரை எல்லோரும் நம்ம கடை ஸ்வீட் தானே வாங்கிப் போறாங்க ஆனால், நீங்க வெளியில இருந்து ஸ்வீட் வாங்கி வந்திருக்கீங்க என்று கேட்கிறான்.

அதற்கு சந்தியா, இந்த துணி எங்க அண்ணன் அமெரிக்காவில் இருந்து அனுப்பியது. இந்த ஸ்வீட் பாளையங்கோட்டையில் இருந்து எங்க சித்தப்பா அனுப்பியது. பார்சல்ல வரும்போது, இந்த லட்டு எல்லாம் உடைஞ்சிருக்கு நீங்க சரி பண்ணி தர முடியுமா என்று கேட்கிறாள். இதற்கு சர்க்கரை இந்த வேலை எல்லாம் அண்ணனுக்கு ஜுஜுபி என்று கூறுகிறான். கோபமாக இருக்கும் சரவணன், உங்க அண்ணனுக்கு எல்லாத்துலயும் அவசரம், கொஞ்சம்கூட பொறுமை நிதானம் எதுவுமே இல்லை. அமெரிக்கா போற அவசரத்துல உங்க படிப்புக்கும் தகுதிக்கும் திறமைக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லாத எனக்குபோய் கட்டி வச்சுட்டாங்க, சரி போங்க சரி பண்ணி எடுத்து வர்றேன் என்று சொல்கிறான். இதைக் கேட்டு சந்தியா வருத்தப்படுகிறாள். ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க என்று கேட்கிறாள். அதற்குள் கடைக்கு கஸ்டமர் வந்துவிடுகிறார்கள். சந்தியாவும் பாக்ஸை எடுத்துக்கொண்டு போய்விடுகிறாள்.

சந்தியா போன பிறகு, சர்க்கரை நீங்க ஏன் அப்படி பேசினிங்க என்று கேட்கிறான். நான் என்னடா பேசினேன், கஸ்டமர் வந்தாங்க ஸ்வீட் கொடுத்தேன் காசு வாங்கிபோட்டேன் என்று பதில் கூறுகிறான். அதற்கு சர்க்கரை நான் அதை சொல்லவில்லை, சந்தியா அண்ணிகிட்ட ஏன் அப்படி பேசினீங்க… இப்பல்லாம் உங்களுக்கு அடிக்கடி கோபம் வருதுன்னே… சந்தியா அண்ணி கண்கலங்கிட்டே போனாங்க என்று கூறுகிறான். சரவணனும் வருத்தப்படுகிறான். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Vijay Tv Serial 2 Vijay Tv Rajarani Raja Rani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment