Advertisment

Tamil Serial news: ராஜா ராணியில் நிலவும் குழப்பம்... எப்போது முடியும்?

சரவணன், “நான்தான் உங்க வழியில குறுக்க வந்துட்டேன். என்னை மன்னிச்சிடுங்க” என்று கூறிவிட்டு கொடியில் இருந்த துண்டை எடுத்துக்கொண்டு கிளம்புகிறான். சந்தியா, சரவணன் ஏன் இப்படி சொல்கிறான் என்று புரியாமல் வேதனையுடன் நிற்கிறாள்.

author-image
WebDesk
New Update
Vijay TV Serial, Raja Rani 2 Serial, Raja Rani 2 Serial today episode, Raja Rani 2, Alya manasa, Sidhu, Sandhya, விஜய் டிவி, ராஜா ராணி 2, ராஜா ராணி 2 சீரியல், ஆல்யா மானசா, சித்து, சந்தியா, சரவணன், சிவகாமி, சுந்தரம், அர்ச்சனா, Saravanan, Sivagami, Sundaram, Archana, tamil tv serial news, raja rani 2 serial news

Raja Rani 2 Serial: ராஜா ராணி சீரியலில் இன்றைய எபிசோடில் நடைபெறும் விறுவிறுப்பான நிகழ்வுகளை அதே விறுவிறுப்புடன் சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்.

Advertisment

ராஜா ராணி 2 சீரியலில் இன்றைய எபிசோடில், சந்தியா, சரவணனிடம் என்னதான் பிரச்னை என்று கேட்டுவிட வேண்டும் என்று முயற்சி செய்கிறாள். ஆனால், சரவணன், பிடிகொடுக்காமல் இருக்கிறான். எப்படியாவது சரியாக்கிவிடும் என்று நினைக்கிற சந்தியா, பெட்ரூமில் இருந்து இருட்டில் வெளியே செல்கிறாள். அப்போது அங்கே இருக்கிற நாற்காலியில் இடித்துக்கொள்வது போல நாற்காலியை தள்ளிவிட்டு ‘அய்யா, அம்மா.. வலிகிறதே” என்று துடிக்கிறாள். இதைக் கேட்டு சரவணன் துடித்துப்போய் எழுந்து வந்து என்ன ஆச்சு என்று கேட்கிறான். அதற்கு சந்தியா காலில் இடித்துக்கொண்டதாகவும் வலிப்பதாகவும் கூறுகிறாள். அப்போது, சரவணன் எங்கே வலிக்கிறது, சொன்னால்தானே தெரியும் என்று கேட்கிறான். அதற்கு சந்தியா, எங்கே வலிக்குதுனு சொன்னால்தானே தெரியும் என்று சரவணனுக்கு என்ன பிரச்னை என்று கேட்கிறாள். அப்போது, அவன், எதையும் சொல்லாமல், ஏங்க உங்களுக்கு எந்த நேரத்துல் எப்படி நடந்துக்கனும்னு தெரியாதா என்று கூறிவிட்டு படுத்துக்கொள்ள போகிறான்.

அப்போது சந்தியா, மீண்டும் வலிக்கிறது என்று கத்துகிறாள். இதனால், சரவணன், சந்தியாவை அப்படியே இரண்டு கைகளால் தூக்கிக்கொண்டு வந்து பெட்டில் படுக்க வைக்கிறான். இதைப் பார்த்த அர்ச்சனா, கருமம் நடு வீட்டில் என்ன பண்ணுதுங்க பாருங்க, கருமம் என்று மனதுக்குள் புலம்பிக்கொண்டு போகிறாள்.

சந்தியா, தனக்கு ஏதாவது ஒன்று என்றால் சரவணன் துடித்துப்போவதை வைத்து நம்ம மேல அக்கறை அன்பு இருக்கு, ஆனால் வேற ஏதோ ஒரு கோபம் இருக்கு என்று புரிந்துகொள்கிறாள்.

மறுநாள் காலையில், கூடத்தில் சிவகாமியும் வேலைக்காரி மயிலும் உட்காந்து சமையல் செய்வதற்கு தேவையான, கீரை ஆய்தல், அரிசி புடைத்தல் வேலைகளை செய்துகொண்டிருக்கிறார்கள். வீட்டில் 2 மருமகள் இருந்தும் இன்னும் நான் தான் எல்லா வேலையும் செய்ய வேண்டியிருக்கிறது என்று சிவகாமி மயிலிடம் கூறுகிறாள்.

அப்போது, மயில், சந்தியா அம்மா ரொம்ப நல்லவங்க, ஆனால், சரவணன் ஐயாவுக்கும் அவங்களுக்கு சண்டை போல, என்னனே தெரியல என்று கூறுகிறாள். அதற்கு சிவகாமி ஆமாம் என்னனு தெரியல என்று சொல்ல வருகிறார். அந்த நேரம் பார்த்து சந்தியா தொலைவில் பின்னால், வந்து நிற்கிறாள். இதை கவனித்துவிட்ட சிவகாமி, மயிலிடம் சொல்வது போல சாடைமாடையாக சந்தியாவுக்கு சொல்கிறார். “ஆமாம், பெரிய சண்டை, புருஷன் பொண்டாட்டிக்கு இடையில சண்டை இருக்கத்தான் செய்யும். அந்த காலத்தில் நானும் உங்க அய்யாவும் போடாத சண்டையா, எல்லாம் சரியாகிடும். அந்த காலத்தில அவர் ஆடாத ஆட்டமா, அப்படி எல்லாம் இருந்துட்டுதான் இப்போ இப்படி இருக்கிறார்.” என்று சிவகாமி கூறுகிறார்.

மயில், சிவகாமி சொன்னதைக் கேட்டு ஆச்சரியப்படுகிறாள், யார் நம்ம ஐயாவா உங்ககூட சண்டை போட்டார் என்று கேட்கிறாள். அதற்கு சிவகாமி, ஆமாம், மயிலு, நாங்க சண்டை போட்டு பேசாமல் எல்லாம் இருந்திருக்கிறோம். அப்புறம், எல்லாம் சரியாகிடும் என்று கூறுகிறார். இதைக்கேட்டு மயிலு புரியாமல் எப்படிம்மா என்று கேட்கிறாள்.

அதற்கு சிவகாமி, “மயிலு, உன்னை பார்வதி மாதிரி நினைச்சு சொல்றேன். மத்தவங்களுக்கு முன்னாடி புருஷன் பொண்டாட்டி எப்படி இருக்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை. புருஷன் பொண்டாட்டி நாலு சுவத்துக்குள்ள எப்படி இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். அவருக்கு சுடுதண்ணி வச்சி கொடுப்பேன். கை கால் அழுத்தி விடுவேன். புதன், சனி எண்ணெய் தேய்ச்சி குளிக்க வைப்பேன். இப்படி அன்பா இருந்தால் எல்லா பிரச்னையும் முடிந்து சமாதானாம் ஆகிவிடுவோம். அப்படி இருந்தால், 40 ஆயிரம் பேர் இருந்தாலும் அங்கே புருஷனை பூனைக்குட்டி மாதிரி நம்மளை சுத்திவர மாதிரி வச்சுக்கலாம். புருஷனை முந்தானையில் முடிஞ்சு வச்சுக்க தெரியனும்” என்று கூறுகிறார்.

சந்தியா, மாமியார் சிவகாமி சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டு போகிறாள். நாமகூட சரவணனுக்கு வெந்நீர் வச்சு கொடுக்கனும், கை கால் அழுத்திவிடனும் என்று நினைத்துக்கொண்டு, பாத்ரூமுக்கு சென்று வெந்நீர் எடுத்துகொண்டு சென்று வைக்கிறாள். சரவணனை வெந்நீரில் குளிக்கச் சொல்கிறாள். பிறகு, குளித்துவிட்டு வரும் சரவணனிடம், நாள் முழுக்க வேலை செய்துவிட்டு வலியோட வருவீங்க. கால் எல்லாம் வலிக்கும் என்று கூறி அவனுடை கை கால்களை அழுத்திவிடுகிறாள்.

சரவணன், சந்தியா இப்படி திடீரென செய்ததால் பதறிப்போய்விடுகிறான். வேண்டாம் விடுங்க என்று கூறுகிறான். ஏன் இப்படி எலலாம் செய்கிறீர்கள். இதற்கு எல்லாம் நான் பழகிவிட்டால், பின்னாடி இந்த சுகம் எல்லாம் கிடைக்காவிட்டால் நான் தான் கஷ்டப்படனும். நீங்க நீங்களாவே இருங்க. யாருக்காகவும் மாத்திக்காதீங்க.” என்று கூறுகிறான். சரவணன், விவாகரத்து செய்துவிட்டு போகப் போகிற சந்தியா ஏன் இப்படி செய்கிறார் என்று புரியாமல் குழம்புகிறான். ஆனால், உண்மையில், தோழி, சந்தியாவுக்கு தெரியாமல் வைத்த விவகாரத்து பத்திரத்தை பார்த்துவிட்டு சரவணன் தான் தவறாக புரிந்துகொண்டிருக்கிறான். சிவில் சர்வீஸ் எக்ஸாம் எழுத அப்ளிகேஷன் போட அவர்கிட்ட சம்மதம் வாங்கனும் என்று சந்தியா தோழிகிட்ட போனில் சொன்னதை சரவணன் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து கேட்கப்போகிறாள். என்று தவறாக புரிந்துகொண்டிருக்கிறான்.

சந்தியாவும், நாம் இதையெல்லாம் அன்பாதான செய்கிறோம். ஆனால், இவர் ஏன் இப்படி வேண்டாம்னு கோபமா பேசுகிறார் என்று அவளும் புரியாமல் தவிக்கிறாள்.

அடுத்த காட்சியில், சுந்தரம் கையில் செருப்பை எடுத்துக்கொண்டு வந்து மனைவி சிவகாமியிடம் என்னோட செருப்பை யார் வெளியே போட்டது என்று கோபமாக கேட்கிறார். அதற்கு சிவகாமி, நான் தான் போட்டேன் என்று சொல்கிறார். அதற்கு சுந்தரம் ஏன் நல்ல செருப்பு வெளியே போட்ட என்று கேட்கிறார். சிவகாமி, இது நல்ல செருப்பா, வாரத்துக்கு ரெண்டு முறை செருப்பு தைக்கப் போறன்னு சொல்லிட்டு நீங்க பரோட்டா சாப்பிட்டுவிட்டு வர்றது எனக்கு தெரியாதா என்று கேட்டு சுந்தரத்துக்கு ஷாக் கொடுக்கிறாள். சுந்தரமும் இதையெல்லா கரெக்ட்டா கண்டுபிடிச்சுடுறா என்று நினைத்துக்கொண்டு அசடு வழிய அதெல்லாம் இல்லை என்று சமாளிக்கிறார். சிவகாமி, உங்களைப் பத்தி எனக்கு தெரியாது. ஒழுங்கா இருங்க என்று கூறுகிறார்.

அந்த நேரம் பார்த்து, பார்வதி வந்து சிவகாமியிடம், அம்மா குரூப் ஸ்டடி இருக்கிறது நான் ஃபிரண்ட்ஸ்களோட போய் படிக்கனும் நான் கிளம்புகிறேன் என்று கூறுகிறார். இதைக் கேட்டு சிவகாமி அதெல்லாம் ஒன்னும் வேணாம் வீட்லயே இரு என்று கூறுகிறார். இதைக் கேட்டு, பார்வதி, எக்சாம் எல்லாம் வருதுமா, காலையிலதான் எல்லோரும் சொன்னாங்க நான் போகனும் என்று கூறுகிறார். சுந்தரத்தின் ஆதரவுடன் சிவகாமி ஒருவழியாக பார்வதியை போய்விட்டு சீக்கிரம் வந்துவிட வேண்டும் என்று சொல்லி அனுப்புகிறாள். அப்போது, பார்வதி இந்த கொரோனா லாக்டவுன் முடிந்தாலும் இந்த வீட்டு லாக்டவுன் முடிய மாட்டேங்கிறது என்று கூறுகிறாள்.

பார்வதி போன பிறகு, சிவகாமி, ஊரில் இருந்து சுந்தரத்தின் அம்மா போன் பண்ணி பார்வதிக்கு மாப்பிள்ளை பார்த்து இருப்பதாகக் கூறியதை சொல்கிறார். அதோடு, மாப்பிள்ளை வீடுகூட இங்க பக்கத்திலதான் இதே ஊர்லதான் இருக்கிறது என்று கூறுகிறார். சுந்தரம், பார்த்தயா எங்க அம்மா அங்க இருந்துகிட்டே இங்க நம்ம பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்திருக்காங்க என்று பெருமையாக கூறுகிறார்.

அந்த நேரம் பார்த்து, சரவணன் அங்கே வருகிறான். அவனிடம், உங்க பாட்டி பார்வதிக்கு இங்க மாப்பிள்ளை பார்த்து இருக்கிறாங்களாம் என்று சிவகாமி கூறுகிறார்.

இதைக் கேட்டு சரவணன், பார்வதிக்கு இப்போ என்ன கல்யாணத்துக்கு அவசரம் மெதுவாக கல்யாணம் பண்ணலாம்… அப்புறம், சில அண்ணனுங்க மாதிரி புடிக்காத மாப்பிள்ளையை கட்டி வச்சுட்டு கஷ்டப்பட விடக்கூடாது” என்று கூறுகிறான்.

அந்த நேரம் பார்த்து சந்தியாவும் அங்கே வருகிறாள். அவள், அத்தை நம்மா பார்வதிக்கா கல்யாணம் என்று கேட்கிறாள். அதற்கு சிவகாமி ஆமாம் என்று கூறுகிறார். இதற்கு சந்தியா, ஆமாம், இப்போ பார்க்க ஆரம்பிச்சாதான் இன்னும் ஒரு வருஷத்துல கல்யாணம் பண்ண முடியும் என்று கூறுகிறாள். இதைக்கேட்ட, சிவகாமி அம்மா தாயி, இந்த படிப்பு, பவுசு எல்லாம் உன்னோட வச்சுக்க, பார்வதி வாழ்க்கையில அக்கறை காட்டறேன்ற பேர்ல கொழப்பி விட்டுட்டு போயிடாத… உனக்கு புண்ணியமா போகுது.. என்று கூறுகிறார். இதைக்கேட்டு சந்தியா வருத்தமடைகிறாள்.

இவர்கள் அனைவரும் பார்வதி கல்யாணம் பற்றி பேசிகொண்டிருக்கும்போது தொலைவில் இருந்து அர்ச்சனா இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கிறாள். பார்வதிக்கு கல்யாணமா, அந்த குட்டிசாத்தான் சீக்கிரமா இந்த வீட்டை விட்டு போயிடும் என்று மனதுக்குள் கூறிக்கொள்கிறாள். பிறகு, அய்யய்யோ, கல்யாண செலவுனு நம்மகிட்டதான் பணம் கேட்பாங்களே..” என்று புலம்பியபடி முதலில் இதை செந்தில்கிட்ட சொல்லனும் என்று கூறிவிட்டு செல்கிறாள்.

பார்வதியின் கல்யாணம் பற்றி பேசும் சிவகாமி, உங்க பாட்டி அடுத்து போன் பண்றதுக்குள்ள ஒருமுறை மாப்பிள்ளை வீட்டை போய் பார்த்துவிட்டு வந்துடலாம் இல்லைனா அவங்ககிட்ட என்னால பதில் சொல்ல முடியாது என்று கூறுகிறார்.

இதைக்கேட்டுக்கொண்ட சரவணன், சரி நான் கிளம்புகிறேன். நீங்களே பார்த்து சொல்லுங்க, நாம ஒரு நாள் போயிட்டு வந்துடலாம் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான். கொடியில் இருக்கிற துண்டு எடுப்பதற்காக செந்தில் செல்கிறான். அப்போது, அவன் வருவது தெரியாமல் துணி துவைத்துக்கொண்டிருந்த சந்தியா, ஈரத் துணியை உதறுகிறாள். துணியில் இருந்த ஈரத்துளிகள் எல்லாம் சரவணன் மீது படுகிறது. சந்தியா, “நீங்கள் வருவது தெரியாமல் செய்துவிட்டேன். மன்னிச்சுடுங்க” என்று கூறுகிறாள். அதற்கு, சரவணன், “இல்லைங்க, நான் தான் உங்க வழியில குறுக்க வந்துட்டேன். என்னை மன்னிச்சிடுங்க” என்று கூறிவிட்டு கொடியில் இருந்த துண்டை எடுத்துக்கொண்டு கிளம்புகிறான். சந்தியா, சரவணன் ஏன் இப்படி சொல்கிறான் என்று புரியாமல் வேதனையுடன் நிற்கிறாள். இன்றைய எபிசோடு இத்துடன் நிறைவடைகிறது. இப்படி இருவருக்கும் இடையே நிலவும் குழப்பம் எப்போது முடியும் என்று தெரியாமல் சென்று கொண்டிருக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Raja Rani 2 Raja Rani Serial Actress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment