Advertisment

காற்றின் மொழி: காதலிச்ச வேகத்திலேயே இப்படி வெறுத்து ஒதுக்கலாமா?

கண்மணியும் சேர்ந்து தங்கை வாழ்க்கையை கெடுத்துட்டான்னு, கண்மணியை வெறுத்து ஒதுக்குகிறான் சந்தோஷ்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kaatrin Mozhi Serial, vijay tv

Kaatrin Mozhi Serial

Vijay TV Serial : காற்றின் மொழி சீரியலில் வாய் பேச முடியாத கண்மணியை பார்த்ததும் காதலிக்கிறான் பணாக்கர வீட்டுப் பையன் சந்தோஷ். கண்மணிக்கும் போக போக இவன் மீது காதல் வந்து நாள் முழுக்க காற்றின் மொழி தென்றல் மாதிரி சுகமாக இருக்கிறது. சந்தோஷுக்கு கண்மணியால் வாய் பேச முடியாது என்று தெரியாமல் மாதக் கணக்கில் பழகிவிட்டு, தனது அலுவலக கேன்டீனில் ஒரு வேலையும் தருகிறான் சந்தோஷ்.

Advertisment

செம்பருத்தி : ஆதி, பார்வதி ரசிகர்கள இப்படி ஏங்க வைக்கலாமா?

ஒரு நாள் போன் வாங்கிக் கொடுத்து. என் கூட பேசணும்னு நினைக்கும்போது பேசு என்று சொல்கிறான். கண்மணிக்கு அதிர்ச்சியாகி விடுகிறது. என்னடா நம்மை கிண்டல் செய்யறானோ என்று நினைத்து தனிமையில் அழுகிறாள். மறுநாள் அந்த போனை கொண்டு போயி அவனிடம் தரும்போது, சந்தோஷ் சொல்றான்... இப்போ மவுன விரதம் தானே இருக்கே.. விரதம் முடிஞ்சு என் கூட போனில் பேசு என்று.

என்னடா இது வேதனை.. மாசக் கணக்கில் எந்த பெண் விரதம் இருப்பாள்.. முட்டாள்தனமா இப்படி கேட்கறானே என்று நமக்கே ஆத்திரம் வருதே.. கண்மணிக்கு எப்படி இருக்கும். ஒரு வழியா நான் மவுன விரதம் எல்லாம் இல்லை.. என்னால பேச முடியாது என்று உண்மையை சொல்றா... சரி.. அதனால் என்ன என்று கூறி அவளை காதலிப்பதாக சந்தோஷ் சொல்கிறான். சரி என்று கண்மணியும் சம்மதிச்சு இருவரும் பழக்கறாங்க.

திடீர்னு கண்மணியை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டு போகிறான் சந்தோஷ். பெரிய ஸ்பெஷலிஸ்ட் இந்த டாக்டர்... உனக்கு பேச்சு வரதுக்குத்தான் இங்கே அழைச்சுட்டு வந்தேன்னு சொல்றான். அது போகட்டும். கண்மணியின் தம்பி இவள் வரைஞ்ச ஓவியத்தை சந்தோஷின் தங்கை பிரியாவிடம் காண்பிச்சு, தான்தான் வரைஞ்சதா சொல்லி அவளை ஏமாத்திடறான். அதோட விட்டானா.. அவளை காதலிக்கிறேன்னு சொல்லி நம்ப வச்சு.. அவள் வயிற்றில் குழந்தையும் உண்டாகி.. ஒரு போராட்டத்துக்குப் பின் அவளுடன் கல்யாணமும் நடந்துருது.

டெபிட் கார்டை மறந்துட்டீங்களா…? கவலைப்படாதீங்க… ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க வழி இருக்கு!

ராஜா தன் தங்கை பிரியாவை தான் ஒரு ஓவியன் என்று பொய் சொல்லி காதலிச்சு கல்யாணம் செய்து இருக்கான். ஓவியத்துக்கு உண்மையான சொந்தக்காரி கண்மணி தான். கண்மணியும் சேர்ந்து தங்கை வாழ்க்கையை கெடுத்துட்டான்னு, கண்மணியை வெறுத்து ஒதுக்குகிறான் சந்தோஷ். எவ்ளோ சீக்கிரம் காதலிச்சானோ.. அவ்ளோ சீக்கிரம் கண்மணியை கைவிட்டுட்டான்...

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Vijay Tv Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment