Tamil Serial News: பல்வேறு திருப்பங்களுடன் விஜய் டிவி-யில் தினமும் இரவு 9.30 மணிக்கு ‘செந்தூரப்பூவே’ சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. சினிமாவிலிருந்து பல பிரபலங்கள் சீரியலுக்குள் நுழைந்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில், ’செந்தூரப்பூவே’ சீரியல் மூலம் முதன் முறையாக, சினிமாவிலிருந்து, சின்னத்திரைக்குள் நுழைந்திருக்கிறார் ரஞ்சித். நடுத்தர வயது (45) கொண்ட துரைசிங்கத்தைப் பற்றிய கதை. மனைவியை இழந்த இவர் மரியாதைமிக்க குடும்பத்தின் மூத்த மகன். இவருக்கு கயல்விழி மற்றும் கனிமொழி என இரண்டு அழகான மகள்கள் உள்ளனர். அவரது மனைவி அருணா இறந்த பிறகு, மறு திருமணம் பற்றி துரைசிங்கம் யோசிக்கவில்லை.
’என் கிட்ட நிறைய குரங்கு சேட்டை இருக்கு’ பூவே உனக்காக பூவரசி
இதற்கிடையே துரை சிங்கத்தின் மகள்கள் தங்களது ஆசிரியை ரோஜா மீது உயிராய் இருக்கிறார்கள். துரை சிங்கத்தின் அம்மாவும், தங்கையும் ஜோசியரை பார்க்க சென்றபோது, ‘உங்க செல்ல பேத்தி கயல்விழியோட ஜாதக படி, உங்க மகனுக்கு இன்னொரு கல்யாணம் செஞ்சிக்கற யோகம் இருக்கு’. அந்த பொண்ண, கயலே கூட செலக்ட் பண்ணலாம் ‘ என்றார் ஜோசியர். பாடம் சொல்லிக் கொடுக்க வீட்டுக்கு வரும் ஆசிரியை ரோஜாவிடம், பிள்ளைகள் அன்பாக இருப்பதைப் பார்த்து மொத்தக் குடும்பமும் சந்தோஷப் படுகிறது. இதையெல்லாம் மனதில் வைத்து, துரை சிங்கத்துக்கு, ரோஜாவை திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்கள், அவரது அம்மாவும், தங்கையும்.
ஆனால் ரோஜாவின் காதலன் அன்புவின் குழந்தையோ அவள் வயிற்றில் வளர்கிறது. இதையும் துரை சிங்கத்திடம் கூறி விடுகிறாள் ரோஜா. இருப்பினும் தனது மகள் கயலின் விருப்பத்திற்கேற்ப ரோஜாவை திருமணம் செய்துக் கொள்ள உடன்படுகிறார் துரை சிங்கம். அவரை திருமணம் செய்துக் கொண்டால், நமது குழந்தையைக் காப்பாற்றி விடலாம் என ரோஜாவும் சம்மதிக்கிறாள்.
இதற்கிடையே அன்பு இறந்தது தெரியாமல் மகனை தேடி சென்னை வருகிறார் மாரியம்மா. அவனது நண்பர்களும் ஏதோ சொல்லி உண்மையை கூறாமால் இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் மாரியம்மாவிற்கு அனைத்து உண்மையும் தெரியவர, அவரும் ரோஜாவின் திருமணத்தை நிறுத்த வேண்டும் என கோபத்தில் இருக்கிறார்.
தந்தையின் மறைவு , தியேட்டர் வாசலில் வேலை: திரும்பி பார்க்க வைத்த பிக் பாஸ் ரம்யா பாண்டியன்!
துரைசிங்கத்தை பிடிக்கவில்லை அதனால் நான் ஓடிவிட்டேன் என ரோஜாவை வாக்குமூலம் கூற சொல்லி மிரட்டி ரோஜாவை கடத்தி வைக்கிறார் ராஜேந்திரன். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, தனது மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ளுமாறு, குடும்பத்தையே குழப்புகிறார். துரைசிங்கத்தின் மூத்த மகளும் இதற்கு ஒப்புக் கொள்கிறார், ஆனால் இதனை ஒத்துக் கொள்ளாமல் யோசனையில் இருக்கிறார் துரைசிங்கம். திருமணத்திற்கு வந்த ரோஜாவின் தோழி சந்தியா, ரோஜா அப்படிப்பட்ட பெண்ணில்லை எனக் கூறி, அவளை கண்டுபிடிக்க பிளான் போடுகிறார். ரோஜா விரைவில் கிடைப்பாரா? துரை சிங்கத்துடன் திருமணம் நடக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.